search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.1 crore"

    • பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை கூடியது.
    • மொத்தம் ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை கூடியது. இதற்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன் பட்டி, தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 80, இதேயின கிடாரிக் கன்றுகள் 100,

    சிந்து மற்றும் ஜெர்சி இனக் கறவை மாடுகள் 100, இதேயின கிடாரிக்கன்றுகள் 120 வந்திருந்தன. கடந்த வாரத்தை விட இந்த வாரம் வாரத்து கணசமாக குறைந்து காணப்பட்டது.

    விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும், இதேயின கிடாரிக்கன்று ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும் விலை போனது.

    சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.28ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும். இதேயின கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

    கடந்த வாரத்தை விட மாடுகள் மற்றும் கன்றுகளின் விலை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை குறைந்து காணப்பட்டது. மொத்தம் ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சீனாபுரத்தில் வழக்கம்போல கால்நடைச்சந்தை கூடியது.
    • விற்பனை ரூ.1 கோடியே 20 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் வழக்கம்போல கால்நடைச்சந்தை கூடியது.

    இதற்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரி கன்றுகள் 125-ம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 110-ம், இதே இன கிடாரி கன்றுகள் 150-ம் வந்திருந்தன. கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் கால்நடைகள் வரத்து அதிகரித்து இருந்தது.

    விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 வரையிலும்,

    சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும் விலை போனது.

    சீனாபுரம் கால்நடை சந்தையில் கறவை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுகளின் விற்பனை ரூ.1 கோடியே 20 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சீனாபுரத்தில் கால்நடைச்சந்தை கூடியது.
    • ரூ.1 கோடி வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் கால்நடைச்சந்தை கூடியது.

    இதற்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 90-ம், இதே இன கிடாரிக்கன்றுகள் 120-ம் விற்பனைக்கு வந்திருந்தன.

    இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரிக்கன்றுகள் 150-ம், இது தவிர எருமைக்கன்றுகள் 10-ம் கொண்டு வரப்பட்டிருந்தன.

    இந்த சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்து இருந்த போதிலும், தீவன பற்றாக்குறை காரணமாக மாடுகள் மற்றும் கன்றுகள் கணிசமாக விலை குறைந்து விற்பனையானது.

    விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும்,

    சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும்,

    எருமைக் கன்றுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விலைபோனது. சந்தையில் மாடுகள் மற்றும் கன்றுகளின் விற்பனை ரூ.1 கோடி வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • புஞ்சை புளியம்பட்டியில் வாரச்சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.
    • ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதாக என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் வாரச்சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது. இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், தாராபுரம் மற்றும் புளியம்பட்டி சுற்று பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும் வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களில் கூடிய மாட்டு சந்தையில் ஜெர்சி மாடுகள் ரூ.52 ஆயிரத்துக்கும், சிந்து இன மாடுகள் ரூ.42 ஆயிரத்துக்கும், எருமைகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்றது.

    இதில் நாட்டு மாடுகள் ரூ.57 ஆயிரத்துக்கும் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது.

    அதேபோல் வெள்ளாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் மற்றும் செம்மறியாடுகள் ரூ.12ஆயிரம் வரையும் விற்றது.

    இதில் மொத்தம் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதாக என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தைக்கு கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
    • விற்பனை. ரூ.1 கோடியை எட்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழக்கிழமை கூடுவது வழக்கம். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர் மற்றும் புளியம்பட்டி சுற்றுப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் இந்த வாரம் கூடிய மாட்டுச்சந்தையில் ஜெர்சி மாடுகள், கலப்பின மாடுகள் மற்றும் ஆடு, கோழி, கன்றுகள் போன்ற கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    இதில் கால்நடைகளின் விற்பனை. ரூ.1 கோடியை எட்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.
    • ரூ.1 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.

    ஈரோடு, அந்தியூர், பவானி, அம்மா பேட்டை, அத்தாணி, சென்னம்பட்டி, பர்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாடுகளும், எருமை மாடுக ளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    இதில் மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 49 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 54 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    சுமார் 400-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு ரூ.1 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.

    • ஏலத்தில் 3000 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.1 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

    திருப்பூர்:

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1 கோடிக்கு நிலக்கடலை விற்பனை திங்கட்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 3000 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில் முதல் ரக நிலக்கடலை ரூ.7,100 முதல் ரூ.7,300 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,700 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,200 முதல் ரூ.6,400 வரையிலும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.1 கோடி என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • மறைமுக ஏலத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை நடந்தது.
    • பருத்தியை நன்கு வெடிக்க வைத்து எடுக்க வேண்டும்

    அரியலூர்:

    பெரம்பலூர் விற்பனைக்குழுவிற்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் பருத்தி கொள்முதலுக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இந்த மறைமுக ஏலத்தில் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி, பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருப்பூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்த பருத்தியை நல்ல விலை கோரி கொள்முதல் செய்தனர். இதில் அதிபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 999-க்கு விலை போனது. குறைந்தபட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 689-க்கும், சராசரி போக்கு விலையாக பருத்தி குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 489-க்கும் விலை போனது. மறைமுக ஏலத்தில் மொத்தம் 120.954 குவிண்டால் பருத்தி 623 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

    மறைமுக ஏலம் மூலம் ரூ.1 கோடியே 13 லட்சத்து 69 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு, வேளாண்மை துணை இயக்குனர் சிங்காரம், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார், வேளாண் அலுவலர் ஜோதி, மேற்பார்வையாளர்கள் அழகுதுரை, சுரேஷ் மற்றும் விற்பனைக்கூட பணியாளர்கள் செய்திருந்தனர்.

    மேலும் வியாழக்கிழமைதோறும் இந்த விற்பனை கூடத்தில் பருத்திக்கான மறைமுக ஏலம் நடைபெறும். அதனால் விவசாயிகள் அவசரப்படாமல் தங்களின் பருத்தியை நன்கு வெடிக்க வைத்து எடுக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி பருத்தியை நன்கு உலரவைத்து புதன்கிழமை மாலை 6 மணிக்குள் விற்பனைக்கு எடுத்து வர வேண்டும் என்று விவசாயிகளை விற்பனை கூட அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது. #KadaikuttySingam
    கார்த்தி - சாயிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கியிருக்கும் விவசாயம் மற்றும் குடும்பத்தின் ஒற்றுமையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில், படத்தின் வெற்றி விழா இன்று நடந்தது. இதில் இயக்குநர் பாண்டிராஜ், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சரவணன், சூரி, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், யுவராணி, மௌனிகா, இளவரசு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.



    இதில் தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களது மேம்பாட்டுக்காக ரூ.1 கோடியை 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா வழங்கினார். மேலும் விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது. #KadaikuttySingam

    ×