ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.ரூ.1 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.
ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.

ஈரோடு, அந்தியூர், பவானி, அம்மா பேட்டை, அத்தாணி, சென்னம்பட்டி, பர்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாடுகளும், எருமை மாடுக ளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இதில் மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 49 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 54 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

சுமார் 400-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு ரூ.1 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com