search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puliambatti weekly market"

    • புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று நடைபெறும்.
    • கால்நடைகள் விற்பனை ரூ.75 லட்சம் ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று நடைபெறும். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், கோவை மற்றும் புளியம்பட்டி சுற்று பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் இந்த வாரம் கூடிய மாட்டுச்சந்தையில் ஜெர்சி இன மாடுகள் ரூ.52 ஆயிரத்துக்கும், சிந்து இன மாடுகள் ரூ.42 ஆயிரத்துக்கும், எருமைகள் ரூ.15 முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    இதில் நாட்டு மாடுகள் ரூ.57 ஆயிரம் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. எடைக்கேற்ப வெள்ளாடு ரூ.15 ஆயிரம் மற்றும் செம்மறியாடு ரூ.12ஆயிரம் வரை விற்றது.

    இதில் மொத்தம் கால்நடைகள் விற்பனை ரூ.75 லட்சம் ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.
    • கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது/ தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாக திகழும் இந்த சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.

    இந்த சந்தையில் கர்நா டகா மற்றும் கேரளா மாநி லங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாம க்கல், கரூர், தாராபுரம், நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சத்தியமங்கலம், புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும் வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை வழக்கம் போல் சந்தை கூடியது. இந்த மாட்டுசந்தையில் ஜெர்சி மாடுகள் ரூ.55 ஆயிரத்துக்கும், சிந்து மாடுகள் ரூ.56 ஆயிரத்து க்கும், எருமை மாடுகள் ரூ.20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை விற்பனை யானது.

    இதில் கலப்பின மாடுகள் ரூ.50 ஆயிரத்து க்கும் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை யானது. மேலும் வெள்ளாடு ரூ.7 ஆயிரம் வரையும், மற்றும் செம்மறி ஆடுகள் ரூ.6 ஆயிரம் வரையும் விற்பனை செய்ய ப்பட்டது.

    இதில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்

    • வாரச்சந்தைக்கு சுற்று சுவர், நுழைவு வாயில் கேட்டு இல்லாததால் வளாகம் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.
    • சந்தைக்கு சுற்றுச்சுவர் கட்டி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரே நகராட்சி வார சந்தை செயல்பட்டு வருகி றது. இங்கு வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை கூடுகிறது. மாட்டுச்சந்தை புதன்கிழமை மாலையே தொடங்கிவிடும்.

    இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளை நிலத்தில் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அதுபோல் ஆட்டு, மாட்டு சந்தைக்கும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.

    வாரச்சந்தைக்கு சுற்று சுவர், நுழைவு வாயில் கேட்டு இல்லாததால், சந்தை கூடும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் வளாகம் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.

    குடிமகன்கள் பகல், இரவு என எந்நேரமும் மது குடிப்பதுடன் காலி பாட்டில்களை அங்கேயே உடைத்தும், பிளாஸ்டிக் பொருட்களை வீசியும் சென்று விடுகின்றனர். அவ்வாறு வீசி செல்லும் மது பாட்டில்கள் உடைந்து சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்களின் கால்களை பதம் பார்த்து விடுகிறது.

    எனவே உடனடியாக சந்தைக்கு சுற்றுச்சுவர் கட்டி, சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×