search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திறந்த வெளி பாராக மாறிய புளியம்பட்டி வாரச்சந்தை
    X

    திறந்த வெளி பாராக மாறிய புளியம்பட்டி வாரச்சந்தை

    • வாரச்சந்தைக்கு சுற்று சுவர், நுழைவு வாயில் கேட்டு இல்லாததால் வளாகம் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.
    • சந்தைக்கு சுற்றுச்சுவர் கட்டி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரே நகராட்சி வார சந்தை செயல்பட்டு வருகி றது. இங்கு வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை கூடுகிறது. மாட்டுச்சந்தை புதன்கிழமை மாலையே தொடங்கிவிடும்.

    இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளை நிலத்தில் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அதுபோல் ஆட்டு, மாட்டு சந்தைக்கும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.

    வாரச்சந்தைக்கு சுற்று சுவர், நுழைவு வாயில் கேட்டு இல்லாததால், சந்தை கூடும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் வளாகம் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.

    குடிமகன்கள் பகல், இரவு என எந்நேரமும் மது குடிப்பதுடன் காலி பாட்டில்களை அங்கேயே உடைத்தும், பிளாஸ்டிக் பொருட்களை வீசியும் சென்று விடுகின்றனர். அவ்வாறு வீசி செல்லும் மது பாட்டில்கள் உடைந்து சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்களின் கால்களை பதம் பார்த்து விடுகிறது.

    எனவே உடனடியாக சந்தைக்கு சுற்றுச்சுவர் கட்டி, சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×