search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sale of crackers"

    • ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.
    • கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் தள்ளுபடி விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப் பதாவது:-

    ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த வருடமும் தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தில் உள்ள பொன்னி கூட்டுறவு பண்டகசாலை, என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலை, சுவர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை, இளம்பிள்ளை கூட்டுறவு பண்டகசாலை, காடை யாம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை ஆகியவற்றின் மூலம் சிவகாசியில் உள்ள அங்கீக ரிக்கப்பட்ட பட்டாசுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களி டமிருந்து பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    பொன்னி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.70 லட்சம், சேலம் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கம் மூலம் ரூ.9 லட்சம், ஆத்தூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கம் மூலம் ரூ. 7.50 லட்சம், என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலை மூலம் ரூ.4 லட்சம், சுவர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.6 லட்சம், இளம்பிள்ளை கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.2 லட்சம், காடையாம்பட்டி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.1.50 லட்சம் ஆக மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது.

    கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் தள்ளுபடி விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர். இந்த பட்டாசு விற்பனையானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் சோதனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
    • அரசு விதிமுறைகளின்படி முழு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது- கடலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக பட்டாசு மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் சோதனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றது. விருத்தாச்சலம் அருள்ஜோதி என்பவர் வீட்டில் தீபாவளிக்கு விற்பனை செய்வதற்காக ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், மேல் ஆதனூர் பகுதி சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மளிகை கடையில் நாட்டு வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்ததையும், அம்பாள் புரம் கிராமத்தில் கொளஞ்சி கண்ணன் என்பவர் வீட்டில் 35 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை ஆன்லைன் மூலமாக வாங்கி இருந்ததையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

    ஆகையால் கடலூர் மாவட்டத்தில் அரசு உரிமைப் பெறாமல் சட்டவி ரோதமாக பட்டாசுகள் பதுக்கி விற்பனை செய்தாலோ, அரசு உரிமம் பெற்று பட்டாசு விற்பனை செய்பவர்கள் அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தாலோ அரசு வழிமுறைகளின் படி பாதுகாப்பு முன்னெ ச்சரிக்கை நடவடி க்கைகள் முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு அரசு வழிமுறைகளை பின்பற்றாத பட்டாசு கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அரசு விதிமுறைகளின்படி முழு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

    ×