என் மலர்tooltip icon

    சேலம்

    • அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.
    • அணையில் தற்போது 54.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மேட்டூர் அணை 7 முறை நிரம்பியது. இதையடுத்து உபரி நீர்திறக்கப்பட்டு காவிரி ஆறு வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதற்கிடையே மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

    அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.96 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 82 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 54.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாக பல கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
    • தலைவர் தகுதியை வளர்த்துக் கொள்வது தம்பி விஜய்யின் கடமை.

    சேலம்:

    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மையக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாக பல கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. வருகிற சட்டமன்றத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெல்லும்.

    மதுரையில் வருகிற 28-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி அடைவோம் என்று கூறி வருகிறார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி 180 தொகுதிக்கு மேல் வெற்றி அடையும் என்று கருத்துக்கணிப்பு கூறி வருகிறது.

    காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவி கேட்பதால் கனிமொழி டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர்களுக்குள் கூட்டணி குழப்பம் இருக்கிறது.

    மத்திய அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வழங்கிய நிதியை தமிழக அரசு முழுமையாக செலவு செய்யவில்லை. அந்த நிதியை தமிழக அரசு திரும்ப அனுப்பி உள்ளது. இது நிர்வாகத் திறமை இல்லையா? தாழ்த்தப்பட்ட மக்களை தமிழக அரசு புறக்கணிக்கிறதா? தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அக்கறை இல்லையா?.

    5 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 575 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தார். அதில் 70 சதவீத வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை. தேர்தல் வந்தால் ஆட்சி மாற்றம் உறுதி. ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் வருவது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம். தலைவர் தகுதியை வளர்த்துக் கொள்வது தம்பி விஜய்யின் கடமை. ஆனால் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • சேலம்-கோவை மெயின் ரோட்டில் இதற்காக 25 ஏக்கர் நிலத்தில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
    • மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். வேலூருக்கு இந்த மாதம் 2-வது வாரத்தில் நடிகர் விஜய் வருகை தர உள்ளதாக கூறி அங்கு கட்சி நிர்வாகிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சேலத்தில் வருகிற (13-ந்தேதி) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இதையடுத்து சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று இரவு மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி இன்ஸ்பெக்டர் வேலுதேவனிடம் மனு கொடுத்தனர்.

    இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் கூறும் போது, சேலத்தில் ஏற்கனவே விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால் சில காரணங்களால் பொதுக்கூட்டம் நடத்த முடியாமல் போனது. இந்த முறை வருகிற (13-ந்தேதி) மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு திறந்தவெளி இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேச உள்ளார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறோம் என்றார். சேலம்-கோவை மெயின் ரோட்டில் இதற்காக 25 ஏக்கர் நிலத்தில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.

    இதற்கிடையே சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள மேலும் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.

    புறநகர் பகுதியில் மகுடஞ்சாவடி பகுதியிலும், மாநகர் பகுதியில் சீலநாயக்கன்பட்டி பகுதியிலும் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. எந்த இடத்திற்கு அனுமதி கொடுக்கப்படுகிறதோ, அந்த இடத்தில் பணிகளை தொடங்க நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    • யாருக்காக 41 உயிர்கள் போனது? அவர் என்ன செய்திருக்க வேண்டும்.
    • யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, ஒரு அரசாங்கத்தை நடத்த அனுபவம் தேவை.

    விஜய் சிறந்த நடிகர், ஆனால் சிறந்த அரசியல்வாதி நாங்கள் தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர்," எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டதாக விஜய் கூறுகிறார். யாருக்காக அவர் வந்தார்? என கரூர் துயர சம்பவத்தை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி எழுப்பினர்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    இன்று 41 உயிர்களை இழந்துவிட்டோம், யாருக்காக 41 உயிர்கள் போனது? அவர் என்ன செய்திருக்க வேண்டும்

    விஜய் பேச்சை கேட்பதற்காக வந்த கூட்டம்; நேரடியாக அங்கு சென்று பார்த்திருக்க வேண்டும், அதைக் கூட அவர் செய்யவில்லை

    நாங்கள் நேரடியாக ஓடிச்சென்று ஆறுதல் கூறினோம்; ஆறுதல் கூட சொல்ல முடியாத விஜய் கட்சி நடத்தி என்ன பயன்?

    விஜய் சிறந்த நடிகராக இருக்கலாம்; ஆனால் நாங்கள் சிறந்த அரசியல்வாதிகள்.

    யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, ஒரு அரசாங்கத்தை நடத்த அனுபவம் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சிக்கு துரோகம் இழைத்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்.
    • தேமுதிகவுடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.

    ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    அதிமுகவில் இணைய நான் தயார் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில் அதனை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர்,"ஓபிஎஸ்-ஐ கட்சியை விட்டு நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதால் அவரை சேர்க்க முடியாது.

    கட்சிக்கு துரோகம் இழைத்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்.

    ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது. இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இறுதியான பின்னர் தெரிவிக்கப்படும்.

    தேமுதிகவுடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை" என்றார்.

    • 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கடன் அதிகமாகி விட்டது என தி.மு.க. கூறுவது அனைத்தும் பொய்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * தி.மு.க.வை பற்றி மக்கள் நன்றாக தெரிந்து கொண்டார்கள். வரும் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்.

    * 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் கடன் அதிகமாகி விட்டது என தி.மு.க. கூறுவது அனைத்தும் பொய்.

    * மக்களின் வரிப்பணத்தில் பலகோடி ரூபாய் விளம்பரம் செய்யப்படுகிறது.

    * உதயநிதி முதலமைச்சராக வருவது ஒருபோதும் நடக்காது.

    * வரும் சட்டசபை தேர்தல் தான் தி.மு.க.விற்கு இறுதித்தேர்தல், மக்கள் சரியான தண்டனை கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியலை அரசியல் ரீதியாக முதலமைச்சர் பேச வேண்டும்.
    • தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்காமல் அவதூறு பரப்புவதா?

    சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * மக்கள் பிரச்சனைகளை சட்டசபையில் எழுப்பினால் அதற்கு சரியான பதில் இல்லை.

    * காலை பார்த்தால் தான் சரியான பாதையில் பயணிக்க முடியும்.

    * அரசியலை அரசியல் ரீதியாக முதலமைச்சர் பேச வேண்டும்.

    * தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது.

    * தி.மு.க. ஆட்சியில் விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடனாளி என்ற பட்டம் தான் மக்களுக்கு கிடைத்துள்ளது.

    * தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்காமல் அவதூறு பரப்புவதா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலே பார்க்காமல் கால்களை மட்டுமே பார்த்தால் சூரியன் எப்படித் தெரியும்? என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசு ஊழியர்களையே ஏமாற்றிய கட்சிதான் தி.மு.க.
    • சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் நான்கரை ஆண்டுகளில் ஊழல் நடந்துள்ளது.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * நான்கில் ஒரு பங்கு வாக்குறுதிகளை கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை.

    * ஆட்சிக்கு வந்தவுடன் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க. மறந்துவிடும்.

    * மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தை தான் புதிய பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    * அரசு ஊழியர்களையே ஏமாற்றிய கட்சிதான் தி.மு.க.

    * 100 நாள் வேலை திட்டம் ரத்து என தவறான தகவலை பரப்பி வருகிறது தி.மு.க.

    * 100 நாள் வேலை திட்டத்தில் 125 நாட்கள் வேலை என அதிகரிக்கப்பட்டுள்ளது.

    * அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்.

    * எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது.

    * சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் நான்கரை ஆண்டுகளில் ஊழல் நடந்துள்ளது.

    * அமலாக்கத்துறை கடிதம் எழுதியும் ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை.

    * நகர பேருந்தில் ஆண்களும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம்.

    * அ.தி.மு.க. கொண்டு வந்த அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க. முடக்கி விட்டது.

    * அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அம்மா மினி கிளீனிக் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

    * எந்தெந்த வகையில் ஊழல் செய்ய முடியுமோ, அப்படி எல்லாம் ஊழல் செய்கிறார்கள்.

    * 2011-ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட தி.மு.க. அமர முடியவில்லை.

    * 2011 முதல் 2021 வரை பல தேர்தலில் தோல்வி கண்ட கட்சி தி.மு.க.

    * தி.மு.க.வின் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 12 நாட்களில் மட்டும் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் உயர்ந்துள்ளது.
    • இனி வரும் நாட்களிலும் வெள்ளி விலை வேகமாக உ ச்சம் பெறும் என்று கூறப்படுகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் தங்கத்திற்கு அடுத்தபடியாக வெள்ளி கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி உள்பட வெள்ளி நகைகளை வாங்கி பொதுமக்கள் அதிக அளவில் அணிந்து வந்தனர். தற்போது வெள்ளியின் விலை தினசரி புதிய உச்சத்தை எட்டி வருவதால் ஏழை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    குறிப்பாக நேற்று வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ. 4 லட்சமாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு மேலும் 25 ஆயிரம் அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 4 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரித்தது. ஒரு கிராம் வெள்ளி விலை 425 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    கடந்த 12 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளி ரூ. 3 லட்சமாக இருந்த நிலையில் மின்னல் வேகத்தில் உயர்ந்து 12 நாட்களில் ரூ.4 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் 12 நாட்களில் மட்டும் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முதலீட்டிற்காக தொழில் அதிபர்கள் வெள்ளியில் அதிக அளவில் தொடர்ந்து முதலீடு செய்வதால் வெள்ளி விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் வெள்ளி விலை வேகமாக உ ச்சம் பெறும் என்று கூறப்படுகிறது.

    இந்த தொடர் விலை உயர்வால் சேலம் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் பட்டறைகளுக்கும் புதிய ஆர்டர்கள் வருவதில்லை. இதனால் வேலை இழந்த வெள்ளி பட்டறை தொழிலாளர்கள் வேறு வேலைக்கு சென்று விட்டனர். இதனால் வெள்ளி பட்டறைகள் களை இழந்துள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. வெள்ளி விலை உயர்வால் ஏழை மக்கள் வெள்ளி கொலுசுகள் உள்பட வெள்ளி நகைகளையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    • காவிரி டெல்டா பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும்.
    • கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும். அதேபோல் இந்தாண்டும் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.91 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 53 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில்இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 56.04 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையில் 56.63 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும்.

    இந்த ஆண்டு போதிய தண்ணீர் இருந்ததால் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைந்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்தை விட பல மடங்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 93.63 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 47 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 56.63 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் தண்ணீர் நாளை மறுநாள் (28-ந்தேதி)யுடன் நிறுத்தப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்படும்.

    • அணைக்கு வெறும் 11 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருந்தது.
    • அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. வருகிற 28-ந் தேதி வரை இந்த தண்ணீர் திறப்பு இருக்கும்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அதன் படி இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.67 அடியாக குறைந்து காணப்பட்டது.

    அணைக்கு வெறும் 11 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 59.37 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    ×