என் மலர்
சேலம்
- சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி அடுத்த சென்னகிரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (23), லாரி டிரைவர்.
- லாரி எதிர்பாராத விதமாக நவீன் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த நவீன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி அடுத்த சென்னகிரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (23), லாரி டிரைவர். இவர் நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேம்படிதாளம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக நவீன் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த நவீன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (47) இவர் சேலம் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
- விஜயராகவன் (51) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர், அரசு பஸ் டிரைவர் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.
சேலம்:
சேலம் அருகே உள்ள ஓமலூர் முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (47) இவர் சேலம் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சை ஓட்டுனராக செல்வம் தேக்கம்பட்டிக்கு ஓட்டி சென்றார்.
பின்னர் மீண்டும் சேலம் பஸ் நிலையம் வருவதற்காக தேக்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பஸ்சை திருப்பிக் கொண்டிருந்தார்.
தேக்கம்பட்டி அருகே உள்ள காட்டுவளவு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் (51) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர், அரசு பஸ் டிரைவர் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.
இந்த திடீர் தாக்குதால் காயம் அடைந்த செல்வம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஜயராகவனை இன்று காலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட விஜயராகவன் சேலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழைபெய்து வருகிறது.
- குறிப்பாக ஏற்காடு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழைபெய்து வருகிறது.
குறிப்பாக ஏற்காடு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. தலைவாசல், கரியகோவில், வீரகனூர், கெங்கவல்லி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக இரவில் கடுங்குளிர் நிலவியது
மழை அளவு
சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக தலைவாசலில் 19 மி.மீ. மழை பெய்தது. இதே போல் வீரகனூர்-5, கெங்கவல்லி-3, எடப்பாடி-1 என மாவட்டம் முழுவதும் 37 மி.மீ. மழை பெய்தது.
- மூர்த்தி (22), கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பேசி பழகி வந்துள்ளனர்.
- இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி பின்னர் திருமணம் செய்ய கொள்ள முடிவு செய்தனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் கச்சுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (22), கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பேசி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி பின்னர் திருமணம் செய்ய கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் வீட்டிற்கும், பெற்றோர்களுக்கும் தெரியவந்து அவர்கள் 2 பேரையும் அனுப்பி விட்டதால் மூர்த்தி சிறுமியை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
சிறுமி கர்ப்பம்
இதனால் தற்போது சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருப்பதால் கடந்த 10-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சிறுமியை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்து கொண்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அரசு மருத்துவமனை அதிகாரிகள் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
அதன்படி இன்ஸ்பெக்டர் வளர்மதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி ஆகியோர் சிறுமியிடம் புகார் பெற்று குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக மூர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிக்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- பொதுமக்கள் நலன் கருதி கடந்த 2 ஆண்டுகளில் 102 முழுநேரம் மற்றும் 11 பகுதிநேரம் ஆக மொத்தம் 113 ரேசன் கடைகள் புதியதாக ெதாடங்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் சிக்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு பிறகு அவர் கூறியதாவது:-
11 லட்சம் குடும்ப அட்டைகள்
முதல்-அமைச்சர் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 1,258 முழு நேர ரேசன் கடைகள் மற்றும் 456 பகுதி நேர ரேசன் கடைகள் மொத்தம் 1,714 ரேசன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடைகளில் சுமார் 11 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வருகிறார்கள்.
அந்தவகையில் மாதந்தோறும் அரிசி 17,747 மெ.டன், சர்க்கரை -1,383 மெ.டன். கோதுமை 285 மெ.டன். துவரம் பருப்பு-763 மெ.டன், பாமாயில்-851 மெ.டன் என ஆக மொத்தம் 21,029 மெ.டன் குடிமைப் பொருட்கள் சேலம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் குடிமைப் பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கிடங்குகளிலிருந்து கூட்டுறவுத் துறையின் முதன்மைச் சங்கங்கள் மற்றும் சுய எடுப்புச் சங்கங்கள் மூலமாக ரேசன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அரிசியினை அன்றாடம் மாதிரி சேகரித்து அதனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு தர கட்டுப்பாட்டு அலுவலர், கூட்டுறவுத் துறை ஆய்வு அலுவலர்கள், முதன்மைச் சங்கங்களின் நகர்வு பணியாளர்கள் ஆகியோரால் தரம் சரிபார்க்கப்பட்ட பின்னர் தரமான அரிசியினை மட்டுமே ரேசன் கடைகளுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் நலன் கருதி கடந்த 2 ஆண்டுகளில் 102 முழுநேரம் மற்றும் 11 பகுதிநேரம் ஆக மொத்தம் 113 ரேசன் கடைகள் புதியதாக ெதாடங்கப்பட்டுள்ளது. இந்த ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.
- சேலம் வழியாக இயக்கப் படும் சில ரெயில்களின் ேநரம் மாற்றப்பட்டுள்ளது.
- இந்த தகவலை சேலம் மண்டல ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
சேலம்:
சேலம் வழியாக இயக்கப் படும் சில ரெயில்களின் ேநரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சேலம்- ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு இரவு 12.12 மணிக்கு வந்து கொண்டிருந்த ஆலப்புழா- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் இரவு 12.02 மணிக்கு வந்து செல்லும். அதுேபால் இரவு 12.02 மணிக்கு வந்து கொண்டிருந்த கோவை-சில்ஷார் வாராந்திர ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் இரவு 12.25 மணிக்கு வந்து செல்லும். இதே போல் இரவு 12.02 மணிக்கு வந்து கொண்டிருந்த எர்ணாகுளம்- பாட்னா ரெயில் (வாரம் 2 முறை வரும் ரெயில்) வருகிற 21-ந்தேதி 12.12 மணிக்கு வந்து செல்லும். இந்த தகவலை சேலம் மண்டல ரெயில்வே கோட்டம் தெரிவித்து ள்ளது.
- மேச்சேரியில் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 76 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடி பேரணி முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் நடைபெற்றது.
- இப்பேரணியை மேட்டூர் டி.எஸ்.பி. மரியமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 76 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடி பேரணி முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் நடைபெற்றது.
பேரணி
இப்பேரணியை மேட்டூர் டி.எஸ்.பி. மரியமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் ராணுவ வீரர்கள், தனியார் கல்லூரியை சேர்ந்த 1000- க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தேசிய கொடியை இருபுறமும் சுமந்து பேரணியாக சென்றனர்.
இந்த பேரணி மேச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி பஸ் நிலையம் ,தேர் வீதி, கால்நடை சந்தை உள்ளிட்ட முக்கிய வீதியில் வழியாகச் சென்று மீண்டும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை வந்தடைந்தது.
மாணவிகள் தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு சென்றனர். பிரமாண்டமாக நடைபெற்ற 76-வது சுதந்திர தின கொடி அணிவகுப்பு பேரணியில் ஏராளமான பொதுமக்களும் உற்சாகமாக கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
இந்த பேரணிக்கு பாதுகாப்பாக காவல் துறையினரும் காவல்துறை வாகனங்கள் அவசர ஊர்திகள் பின் தொடர பேரணி முடிவடைந்தது. தேசியக்கொடியை நங்கவள்ளியை சேர்ந்த தறி தொழிலாளி செந்தில்குமார் வடிவமைத்தார்.பேரணியில் முன்னாள் முப்படை குடும்ப நல சங்கத்தின் சார்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
- சத்யா பதறியபடி விரைந்து வந்து தனது குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.
- ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே உள்ள எடப்பட்டி பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர் நதியா.
இவரது சகோதரி சத்யா (வயது 23). இவர் அரியலூர் மாவட்டம் செந்துறையில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவரது 2 குழந்தைகளை தனது சகோதரி நதியா வீட்டில் விட்டிருந்தார். அதில் 2½ வயது குழந்தை ஹரிகிருஷ்ணன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது தையல் மிஷினுக்கு வைத்திருந்த சுவிட்ச் பாக்ஸ் பிளக்கில் திடீரென கை வைத்தான். இதில் மின்சாரம் தாக்கி அலறியபடி கீழே விழுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நதியா குழந்தையை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து நதியா தனது சகோதரி சத்யாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சத்யா பதறியபடி விரைந்து வந்து தனது குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சூரியகுமார் (50). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் போர்டிகோவில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார்.
- மர்ம நபர்கள் சைக்கிளை திருடிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சூரியகுமார், இதுபற்றி கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி அடுத்த மகேந்திரபுரி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சூரியகுமார் (50). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் போர்டிகோவில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சைக்கிளை திருடிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சூரியகுமார், இதுபற்றி கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். இதேபோல் மகேந்திரபுரி குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் (36). இவரது வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரூ.22 ஆயிரம் மதிப்பு சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்தும் சதீஸ்குமார் கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். இந்த 2 புகார்களின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் குமாரசாமிப்பட்டி பகுதி எல்லம்மன் கோவில் வளாகத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது.
- இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீப திருவிழாவில் திருமணம் ஆகாத பெண்கள் மாங்கல்ய வரன் வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும் குடும்பம் நலம் பெறவும்,ஊர் செழிக்க வேண்டி நடைபெற்ற தீப திருவீதி உலா நடைபெற்றது.
சேலம்:
சேலம் குமாரசாமிப்பட்டி பகுதி எல்லம்மன் கோவில் வளாகத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். தொடர் நிகழ்ச்சியாக சக்தி அழைக்கும் நிகழ்ச்சி மற்றும் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், சக்தி கரகம் அக்னி கரகமும் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீப திருவிழாவில் திருமணம் ஆகாத பெண்கள் மாங்கல்ய வரன் வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும் குடும்பம் நலம் பெறவும்,ஊர் செழிக்க வேண்டி நடைபெற்ற தீப திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கைகளில் விளக்கு ஏந்தியபடி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் மீண்டும் கோவிலை வந்தடைந்த பெண்கள் அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர் நிகழ்ச்சி இறுதியில் அனைவருக்கும் மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.
- ரங்கநாயகி (50). சம்பவத்தன்று ரங்கநாயகி செவ்வாய்பேட்டை கார்கானா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
- அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ரங்கநாயகியை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் இருந்த கைப்பை மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
சேலம்:
சேலம குகை கருங்கல்பட்டி ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவரது மனைவி ரங்கநாயகி (50). சம்பவத்தன்று ரங்கநாயகி செவ்வாய்பேட்டை கார்கானா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
வழிப்பறி
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ரங்கநாயகியை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் இருந்த கைப்பை மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
ரங்கநாயகி வைத்திருந்த கைப்பையில் ரூ.85 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாயகி இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரசத்திர்வு மையம் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது.
- ஒரே நாளில் ரூ.1 கோடியே 13 லட்சம் இழப்பீடு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் சமரச தீர்வு மையம் எனும் மக்கள் நீதிமன்றம் மாதம் தோறும் முதல் வாரத்தில் நடைபெறும் அதன் அடிப்படையில் இன்று அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரசத்திர்வு மையம் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் முறையில் தீர்வு காணப்பட்டது.
அதன் அடிப்படையில் விபத்து வழக்கு குடும்ப நல வழக்கு, மின்சார வாரிய வழக்கு, காசோலை வழக்கு, உரிமையியல் மற்றும் இதர வழக்கு, சொத்துப் பிரச்சனை, உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.அதன் அடிப்படையில் கடந்த 2022 -ம்ஆண்டு மணிராஜன் என்பவர் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கு ம்போது 2 சக்கர வாகனம் மோதிய விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு கை கால்கள் செயல் இழந்தன இந்த விபத்து குறித்த வழக்கு சமரசத் தேர்வு முறையில் தீர்வு காணப்பட்டு பாதிக்கபட்ட நபருக்கு 8 லட்சம் இழப்பீடு காசோலை யை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.
இதேபோல கடந்த 2021 குரு என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் சேலம் - ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த ஆட்டோ மோதிய விபத்தில் கால் முறிவு ஏற்பட்டது இந்த வழக்கில் சமரச தீர்வு காணப்பட்டு குருவுக்கு ரூ.23 லட்சகான காசோலை வழங்கினார்.இதேபோல் செல்வம் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு லாரியை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குச் சென்றபோது பாம்பு கடித்தது. இந்த வழக்கில் சமரசத் தீர்வு காணப்பட்டு ரூ.10 லட்சம் காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்.
மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ.1 கோடியே 13 லட்சம் இழப்பீடு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.
அப்போது நீதிபதி சரண்யா மற்றும் மாவட்ட சட்டப் பணி ஆணை குழு செயலாளர் தங்கராஜ் வழக்கறிஞர்கள் ரகுபதி மற்றும் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






