என் மலர்
நீங்கள் தேடியது "நிறுவனங்கள் மீது"
- 20 நிறுவனங்களில் ஆய்வு செய்து முரண்பாடு கண்டறியப்பட்டது.
- விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
ஈரோடு:
ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞான சம்பந்தம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சட்டமுறை எடையளவு சட்டம், பொட்டல பொருட்கள் விதிகள் தொடர்பாக இம்மாதம் முழுவதும் சிறப்பாய்வு செய்தனர்.
மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல் கடைகள், நிறுவனங்கள் என 20 நிறுவனங்களில் ஆய்வு செய்து 8 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது.
காய்கறி கடை, பழக்கடை, விற்பனை கூடங்கள், சந்தை போன்றவற்றில் 25 கடை களில் ஆய்வு செய்ததில் 4 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.
பொட்டல பொருட்கள் விதிப்படி வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் 1 கடை, எலக்ட்ரி க்கல், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் 30 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 3 இடங்களிலும், பழக்கடை, காய்கறி கடைகள் என 17 இடங்களில் நடந்த ஆய்வில் 1 கடையில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து எடை யளவு சட்டம், பொட்டல பொருட்கள் விதிகளை பின்பற்றாத நிறுவன ங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழி லாளர் உதவி ஆணையர் திருஞான சம்பந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- சுதந்திர தினவிழாவை யொட்டி தொழில் நிறு வனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
- சேலம் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
சேலம்:
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது-
சேலம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை யொட்டி தொழில் நிறு வனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
திடீர் ஆய்வு
இதை தொடர்ந்து தேசிய விடுமுறையான சுதந்திர தினத்தன்று தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் தொழிலாளர்கள் பணி புரிகிறார்களா? என்று சேலம் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சேலம், மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், சங்ககிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முன் அனுமதியின்றி செயல்பட்ட 54 கடைகள், நிறுவனங்கள் மற்றும் 64 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 81 நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமல் வேலையில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
81 நிறுவனங்கள் மீது வழக்கு
இதையடுத்து அந்த 81 நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழி லாளர்நலத்து றை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், முரண்பாடு கள் கண்ட றியப்பட்டால் உரிய நடவ டிக்கை எடு க்கப்படும் என்றும் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ண வேணி தெரிவி த்துள்ளார்.






