என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு வேலை 81 நிறுவனங்கள் மீது வழக்கு
- சுதந்திர தினவிழாவை யொட்டி தொழில் நிறு வனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
- சேலம் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
சேலம்:
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது-
சேலம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை யொட்டி தொழில் நிறு வனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
திடீர் ஆய்வு
இதை தொடர்ந்து தேசிய விடுமுறையான சுதந்திர தினத்தன்று தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் தொழிலாளர்கள் பணி புரிகிறார்களா? என்று சேலம் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சேலம், மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், சங்ககிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முன் அனுமதியின்றி செயல்பட்ட 54 கடைகள், நிறுவனங்கள் மற்றும் 64 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 81 நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமல் வேலையில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
81 நிறுவனங்கள் மீது வழக்கு
இதையடுத்து அந்த 81 நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழி லாளர்நலத்து றை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், முரண்பாடு கள் கண்ட றியப்பட்டால் உரிய நடவ டிக்கை எடு க்கப்படும் என்றும் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ண வேணி தெரிவி த்துள்ளார்.






