என் மலர்tooltip icon

    சேலம்

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
    • சேலம் மாவட்டத்தில் மாம்பழ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு மாம்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது மாம்பழங்கள் தான். அந்த வகையில் தித்திக்கும் சுவை உடைய சேலம் மாம்பழங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் சேலம் மாம்பழத்தை ருசித்து வருகிறார்கள்.

    இத்தகைய சுவை வாய்ந்த சேலம் மாம்பழங்கள் சேலம் அயோத்தியாபட்டினம் குப்பனூர், வலசையூர், காரிப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், வனவாசி, ஜலகண்டாபுரம், எடப்பாடி, நங்கவள்ளி, பனமரத்துப்பட்டி, மல்லூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக சேலம் குண்டு, சேலம் பெங்களூரா, அல்போன்சா இமாம் பசந்த், பங்கணப்பள்ளி, மல்கோவா செந்தூரா, குதாதத், கிளி மூக்கு உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் அதிக அளவில் சேலத்தில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.

    விரைவில் சீசன் முடியும் தருவாயில் தற்போது சேலம் மார்க்கெட்டுகளுக்கு தினசரி 500 டன்னுக்கும் அதிகமாக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாம்பழங்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும், அரபு நாடுகளுக்கும் அதிக அளவில் ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் பெற்று அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர நேரடி விற்பனை மற்றும் பார்சல் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    நடப்பாண்டில் வழக்கத்தை விட அதிகமான விளைச்சல் காணப்பட்டதால் சேலம் மார்க்கெட்டுகளில் மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலை ஓரங்களிலும் எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டிகளிலும் வைத்து வியாபாரிகள் தெரு தெருவாக விற்பனை செய்து வருகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகள் மளிகை கடைகள் என எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் அதிக அளவில் வெயிலின் தாக்கம் இருக்கும் அந்த நேரத்தில் மாம்பழம் விற்பனை சூடு பிடிக்கும். பொதுமக்கள் மாம்பழங்களை வாங்கி ருசிப்பார்கள்.

    ஆனால் நடப்பாண்டில் வழக்கத்திற்கு மாறாக கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோசன நிலவி வருகிறது. இதனால் மாம்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பதால் பொதுமக்கள் குறைந்த அளவே மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள்.

    இதனால் அதிக அளவில் விளைச்சல் ஆன நிலையில் குறைந்த அளவிலே விற்பனையாவதால் சேலம் மாவட்டத்தில் மாம்பழ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு மாம்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் அதன் விலையும் கணிசமாக குறைந்து உள்ளது. குறிப்பாக கிளி மூக்கு மாம்பழங்கள் 100 ரூபாய்க்கு 5 கிலோ வரை கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் அதையும் வாங்க ஆட்கள் இல்லாததால் சாலையோரம் ஆங்காங்கே அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே விவசாயிகளிடம் வியாபாரிகள் 1 கிலோ 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக கூறப்படுவதால் மாம்பழ விவசாயிகள் பெரும்இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தாங்கள் செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை என்றும் வரும் காலங்களில் மாம்பழ விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கும் வகையில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும். அரசே மாம்பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அதனால் சேலத்தில் அதிக அளவில் மாம்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கோடை காலம் தொடங்கியதிலிருந்து மழை பெய்ததால் விற்பனை கணிசமாக சரிந்துள்ளது. இதனால் போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு இழப்பீடு வழங்கி மாம்பழ விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை காப்பாற்ற வேண்டும், என்று கோரிக்கை விடுத்தார். 

    • சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளின் மூலம் மக்கள் மீது சுமைகளை ஏற்றி வருகிறது.
    • மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பாலியல் கொடுமை அதிகமாக உள்ளது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டியில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வலுவான கூட்டணி. இந்த கூட்டணி குறித்து குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முயற்சி செய்கின்றனர்.

    எங்களது கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும். எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைக்கும் என சமீப காலமாக தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது.

    மக்கள் விரோத தி.மு.க. அரசை அகற்ற வேண்டும் எனில், தமிழகத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க.வின் 4 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளின் மூலம் மக்கள் மீது சுமைகளை ஏற்றி வருகிறது.

    மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பாலியல் கொடுமை அதிகமாக உள்ளது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பலத்தை இழந்து வருகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் யார் முதலமைச்சர் என்று அனைவருக்கும் தெரியும். விவசாய பயன்பாட்டிற்கான நிலத்தடி நீருக்கு கட்டணம் என்பது தவறான தகவல். இதை திட்டமிட்டு சிலர் பரப்பி வருகின்றனர்.

    சமீபத்தில் நடந்த அரசு தேர்வில் தி.மு.க. தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டும். அரசியல் கலப்பு இல்லாமல் அரசு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.
    • அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இந்த நிலையில் தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டு வருகிறது.

    கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று தமிழகத்துக்கு வினாடிக்கு 63 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று வினாடிக்கு 81 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    கபினி அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 31 ஆயிரத்து 644 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 52 ஆயிரத்து 829 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 51 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 81 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.73 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 114 அடியை எட்டியது.

    மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 43 ஆயிரத்து 892 கனஅடி தண்ணீர் வ்ந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட 81 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வரத்தொடங்கினால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 112.73 அடியாக இருந்தது.
    • பாசனத்துக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து இடைவிடாமல் கொட்டிவரும் மழையின் காரணமாக 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.90 அடியாக இருந்தது. இதே போல் கபினி அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் நேற்று தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 42 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் நேற்று மாலை முதல் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.

    இதற்கிடையே கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 33 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 63 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி நீர்பாசன அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறையினர் கரையோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 112.73 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 13,332 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 18,290 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து பாசனத்துக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 82.34 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்மெதுவாக குறைந்து வருகிறது. அதே நேரம் கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையாக வரத்தொடங்கினால் அணையின் நீர்மட்டம் உயரும்.

    • தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி.
    • தி.மு.க. கூட்டணியை உடைத்து அவர்கள் கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள் என பா.ஜ.க. கூறிக்கொண்டிருக்கிறது.

    சேலம்:

    சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

    இதில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதையொட்டி சேலத்தில் அதன் லோகோவை அறிமுகப்படுத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் லோகோவை வெளியிட்டு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது,

    அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் முக்கியமான தேர்தல். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று திரும்ப திரும்ப உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல தலைவர்களும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். கூட்டணியை பலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்கிறார்கள்.

    பா.ஜ.க. விரும்பும் கூட்டணி பலமான கூட்டணியாக அமையும், எதிரிகளால் எதிர்கொள்ள முடியாத கூட்டணியாக அமையும் என்று கற்பனையாக பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர பாரதிய ஜனதா கூட்டணி கருவே உருவாகவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார்கள்.

    தி.மு.க. கூட்டணி கட்சிகளை உடைத்து அங்கிருந்து பல கட்சிகள் எங்களுக்கு வருவார்கள் என்று பா.ஜ.க. தலைவர்களும் சொல்கிறார்கள்.

    தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. தமிழக அரசியல் வரலாற்றில் எந்த கூட்டணியும் இவ்வளவு நாள் நீடித்தது கிடையாது.

    இந்த கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல, கொள்கைக்காக அமைந்த கூட்டணி. 2 பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம். தி.மு.க. கூட்டணி ஒரு போதும் உடையாது.

    தி.மு.க. கூட்டணியை உடைத்து அவர்கள் கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள் என பா.ஜ.க. கூறிக்கொண்டிருக்கிறது.

    முருகனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது பா.ஜ.க. முருகன் மாநாட்டால் பா.ஜ.க. வெற்றிபெற முடியாது. நெருக்கடி நிர்பந்தத்தின் பேரில் அ.தி.மு.க. வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மடியில் கனம் இருந்ததால் பா.ஜ.க.வின் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து முன்னணியின் செயலை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கண்டிக்கிறது.
    • முருக பக்தர்கள் மாநாடு என்று அழைத்துவிட்டு விரும்பத்தகாத காட்சிகளை ஒளிபரப்பி இருக்கக்கூடாது.

    மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்துள்ள நிலையில், அதில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இந்து முன்னணி மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

    * இந்து முன்னணியின் செயலை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கண்டிக்கிறது.

    * எங்களின் வழிகாட்டியாக உள்ள பெரியாரையும், அண்ணாவையும் இழிவு செய்வதை ஏற்க முடியாது.

    * முருக பக்தர்கள் மாநாடு என்று அழைத்துவிட்டு விரும்பத்தகாத காட்சிகளை ஒளிபரப்பி இருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
    • ஏற்காட்டில் நேற்று மாலை 1 மணிநேரத்திற்கும் மேல் கன மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.

    குறிப்பாக சங்ககிரி, தம்மம்பட்டி, மேட்டூர், ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காட்டில் நேற்று மாலை 1 மணிநேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று மாலை 5 மணியளவில் அரை மணி நேரம் மழை பெய்தது. மழையயை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 25.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சேலம் மாநகர் 10.4, ஏற்காடு 9.8, வாழப்பாடி 2.6, ஆனைமடுவு 12, ஆத்தூர் 15, கெங்கவல்லி 11, தம்மம்பட்டி 18, கரியகோவில் 1, வீரகனூர் 12, எடப்பாடி 4, மேட்டூர் 14.6, ஓமலூர் 1.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 137.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்றும் மங்களபுரம், ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    எருமப்பட்டி-3, குமாரபாளையம்-9.20, மங்களபுரம்-23.60, நாமக்கல்-8, புதுச்சத்திரம்-17.30, ராசிபுரம்-10, சேந்தமங்கலம்-4, திருச்செங்கோடு-4, கொல்லிலை செம்மேடு-15, கலெக்டர் அலுவலகம்-2.50 என மாவட்டம் முழுவதும் 96.60 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

    • சேலத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
    • முருகன் மாநாடு அன்னைக்கே வேல் வந்துடுச்சி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

    மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமிக்கு 'வேல்' பரிசளிக்கப்பட்டது.

    இதனையடுத்து, பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "முருகன் மாநாடு அன்னைக்கே வேல் வந்துடுச்சி..." என்று தெரிவித்தார்.

    • கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.
    • தற்போது அணையில் 84.22 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் 5 ஆயிரம், 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு நேற்று 16 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. அதிகபட்சமாக நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 469 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 628 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையின் நீர்மட்டம் நேற்று 113.69 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் 84.22 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • நீர்மட்டம் 113.69 அடியாகவும், நீர் இருப்பு 83.76 டி.எம்.சி,யாகவும் உள்ளது.
    • அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சேலம்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபினி,கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 16,361 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 18,220 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 113.69 அடியாகவும், நீர் இருப்பு 83.76 டி.எம்.சி,யாகவும் உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த சேலம் 160 ரன்கள் எடுத்தது.

    சேலம்:

    டி.என்.பி.எல். தொடரின் 17-வது லீக் போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பர்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிஷேக் 47 ரன்னும், ஹரி நிஷாந்த் 31 ரன்னும், சன்னி சாந்து 30 ரன்னும் எடுத்தனர். விஜய சங்கர் 2 ரன்னில் அவுட்டானார்.

    சேப்பாக் அணி சார்பில் பிரேம் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆஷிக் 36 பந்தில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மோகித் ஹரிஹரன் 32 ரன்கள் எடுத்தார். ஜெகதீசன் அரை சதம் கடந்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சேப்பாக் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. சேப்பாக் அணி தான் ஆடிய 5 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு 100 சதவீதம் பொய்.
    • 10.5% இடஒதுக்கீட்டில் தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்கவில்லை.

    சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் நடைபெறும் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

    * என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு 100 சதவீதம் பொய்.

    * நீண்ட நாட்களாக மனதில் சுமையை சுமந்து கொண்டிருக்கிறேன்.

    * இ.பி.எஸ். ஒரு மாதத்திற்கு முன்பாக வன்னியர் இடஒதுக்கீட்டை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    * கடைசி நேரத்தில் இடஒதுக்கீடு கொடுத்ததால் அது நடைமுறைக்கு வரவில்லை.

    * 10.5% இடஒதுக்கீட்டில் தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×