என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எம்.ஜி.ஆரை விமர்சித்த திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார்- எடப்பாடி பழனிசாமி
- தி.மு.க. கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது 8 மாதத்தில் தெரியும்.
- 8 மாத காலத்தில் அ.தி.மு.க. சிறப்பான கூட்டணியை அமைக்கும்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* விவசாய தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும் திட்டத்தை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியது.
* எம்.ஜி.ஆரை பொதுமக்கள் தெய்வமாக கருதுகிறார்கள்.
* எம்.ஜி.ஆர். குறித்து பேசிய திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார்.
* வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக திருமாவளவன் இதுபோல் பேசிக்கொண்டிருக்கிறார்.
* சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க.
* தி.மு.க. கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது 8 மாதத்தில் தெரியும்.
* 8 மாத காலத்தில் அ.தி.மு.க. சிறப்பான கூட்டணியை அமைக்கும் என்றார்.
திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்.ஜி.ஆர்.என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.






