என் மலர்
சேலம்
+2
- தனது சுற்றுப்பயணம் மிகுந்த எழுச்சியுடன் நடந்து வருகிறது.
- போகும் இடமெல்லாம் தி.மு.க. ஆட்சி இருக்கக் கூடாது என மக்கள் கூறுகின்றனர்.
சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி மிக வலுவாகவே உள்ளது.
* தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறதா என உதயநிதி பார்த்து கொள்ளட்டும்.
* தனது சுற்றுப்பயணம் மிகுந்த எழுச்சியுடன் நடந்து வருகிறது.
* போகும் இடமெல்லாம் தி.மு.க. ஆட்சி இருக்கக் கூடாது என மக்கள் கூறுகின்றனர்.
* அடுத்தாண்டு தேர்தல் வருவதால் தி.மு.க. நடத்தும் நாடகம் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.
* உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்கிற பெயரில் நாடம் நடத்தப்படுகிறது.
* 4 ஆண்டுகளாக ஒன்றுமே செய்யாமல் இப்போது குறைகளை கேட்கிறார்கள்.
* அ.தி.மு.க.வுடன் மேலும் சில கட்சிகள் கூட்டணி வைக்க உள்ளன என்றார்.
- விசாரணை முடிவில் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் தங்கவேல் நெல்லை மாவட்டம் வடக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி பகுதியில் உள்ள சுண்டக்காபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவிகளிடம் வகுப்பு ஆசிரியர் தங்கவேல் (43) என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக தலைமை ஆசிரியருக்கு புகார் வந்தது.
மாணவிகளின் புகார் குறித்து தலைமை ஆசிரியர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் தங்கவேல் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அரசு பள்ளியில் 5 மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை போலீசார் பிடித்து விசாரித்து வரும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் தங்கவேல் நெல்லை மாவட்டம் வடக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியில் நீடித்து வருகிறது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் அது 42 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு வரும் உபரிநீர் 16 கண் மதகு மற்றும் நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு தொடர்ந்து வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- தற்போது அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.
- கரையோர மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம்:
கர்நாடகாவில் மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை இந்தாண்டில் 2 முறை நிரம்பியது. தற்போது அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் படிப்படியாக மழை குறைந்ததால் அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீரும் குறைந்தது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 58 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து 16 கண் மதகு மற்றும் நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 27ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் தொடர்ந்து சீறிப்பாய்ந்து செல்வதால் கரையோர மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
- மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
மேட்டூர்:
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து நீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 58,500 கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் 40,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
- அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.72 அடியாக உள்ளது.
சேலம்:
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு அதிகளவில் வரத்தொடங்கியதால் கடந்த 29-ந்தேதி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து உபரிநீர் அப்படியே 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி கரையோரம் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் படிப்படியாக மழை நின்றதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியது. அதே நேரம் பாசனம் மற்றும் 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
இதற்கிடையே தற்போது கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.72 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 31 ஆயிரத்து 624 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 35 ஆயிரத்து 860 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் 16 கண் மதகு பாலம் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரை பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர்.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணையில் தற்போது 92.83 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வந்த உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
இதையடுத்து அணைக்கு வந்த தண்ணீர் அப்படியே உபரிநீராக 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 58 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில கர்நாடகாவில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரும் குறைய தொடங்கியது.
அணைக்கு நேற்று வினாடிக்கு 18 ஆயிரத்து 615கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 19 ஆயிரத்து 286 கனஅடியாக சற்று அதிகரித்து வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் 16 கண்மதகு வழியாக தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக குறைந்தது. அணையில் தற்போது 92.83 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மாமியார் சித்ராதேவியை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
- ரிதன்யாவிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அண்ணாதுரை கூறுகையில்,
வழக்கை நீர்த்துப்போகச் செய்வதற்கு காங்கிரஸ் தரப்பில் முயற்சி நடைபெறுகிறது. இந்த வழக்கு தொடர்பாக கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகிய 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மாமியார் சித்ராதேவியை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். கவின்குமாரின் தாத்தா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கட்சி தலையிடுகின்றனர். காவல்துறையினரின் செயல்பாடு சரியில்லை. அலைக்கழிக்கிறார்கள். சிபிஐ விசாரணை வேண்டும். ரிதன்யாவிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர் அணை நிரம்பியது. மேலும் கபினி அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரிநீராக காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நேற்று மாலை தனது முழு கொள்ளளவை எட்டியது. அணை கட்டியதில் இருந்து 44-வது முறையாக நிரம்பியதால் மேட்டூர் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் காவிரி ஆற்றில் 16 கண் மதகு மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அந்த தண்ணீர் காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்து ஓடுகிறது. இதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்கள் ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை கண்டு ரசித்து செல்போனில் போட்டோ எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறக்கப்பட்டதால் கரையோரம் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் மேட்டூரில் காவிரி கரையோர பகுதியான தங்கமாபுரி பட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் இன்று 2-வது நாளாகவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அணை நிரம்பியதால் சரபங்கா நீரேற்றும் திட்டம் மூலம் 57 ஏரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் தண்ணீரை திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- ஜூன் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியது இது இரண்டாவது முறையாகும்.
- அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.
சேலம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.
அணை கட்டிய 91 ஆண்டு கால வரலாற்றில் 44வது முறையாக நிரம்பியுள்ளது.
ஜூன் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியது இது இரண்டாவது முறையாகும்.
மேட்டூர் அணை கட்டப்பட்ட 91 ஆண்டுகளில் 44வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
இதற்கு முன்பாக 1957ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. அதுன்படி, 68 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அன்புமணியால் ராமதாசுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
- தெருவில் இலந்தை பழம் விற்பது கேவலமா?
சேலத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்ட எந்த பதவிகளுக்கும் ஆசைப்படாதவர் ராமதாஸ்.
* அன்புமணியால் ராமதாசுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
* ராமதாஸ் தான் பா.ம.க.விற்கு தாய். சுயம்புவாக கட்சியை வளர்த்தவர் ராமதாஸ்.
* 5 ஆண்டுகளாக ராமதாஸ் குழந்தையாக மாறி விட்டார் என அன்புமணி சொல்கிறார். அந்த குழந்தைதானே 3 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை தலைவராக அறிவித்தது. குழந்தையின் அறிவிப்பு எப்படி செல்லும்?
* தெருவில் இலந்தைப் பழம் விற்பவர் கேவலமானவரா? ராமதாஸை அவமானப்படுத்துவதாக நினைத்து, தெருவோர வியாபாரிகளை, பாட்டாளிகளை அவமானப்படுத்தியுள்ளார் அன்புமணி.
இவ்வாறு அவர் கூறினார்.
ரோட்டில் இலந்தைப் பழம் விற்பவர்களை அழைத்து ராமதாஸ் பதவி தருவதாக அன்புமணி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மெயினருவி மற்றும் ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- வெள்ள கட்டுப்பாட்டு அறையில், நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியதால் 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 25-ந் தேதி 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 26-ந் தேதி காலை 60 ஆயிரம் கன அடியாகவும், நேற்று இரவு 8 மணியளவில் 85 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.
இரவு 8 மணி நிலவரப்படி கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய 2 அணைகளிலிருந்தும் விநாடிக்கு 86 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 2 அணைகளில் இருந்தும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 58 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் அங்குள்ள மெயினருவி மற்றும் ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 80 ஆயிரத்து 984 கன அடியில் இருந்து 68 ஆயிரமாக குறைந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக உள்ளது. முழு கொள்ளளவை 120 அடியை எட்டி உள்ளதால் இன்று காலை உபரி நீர் வெளியேறும் 16 கண் மதகிலிருந்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீர் பாசனம் பெறும் மாவட்ட கலெக்டர்களுக்கு அணை உபகோட்ட உதவி பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில், நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உபரி நீர் வெளியேறும் மதகுப்பகுதியில் ஷிப்ட் முறையில் பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதற்கேற்ப மதகுகளை இயக்குவதற்கு பணியாளர்கள் தயாராக உள்ளனர்.






