என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 31,854 கனஅடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 31,854 கனஅடியாக அதிகரிப்பு

    • கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் உபரிநீர் திறப்பும் அதிகரித்து காணப்படுகிறது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.23 அடியாக உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 5 முறை நிரம்பியது. பின்னர் நீர்வரத்து குறைந்ததாலும், அணையில் இருந்து அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

    இதற்கிடையே கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் உபரிநீர் திறப்பும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர தொடங்கியுள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 29 ஆயிரத்து 360 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 31 ஆயிரத்து 854 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 119.23 அடியாக உள்ளது. இதே போல் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 500கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 92.24 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×