என் மலர்
ராணிப்பேட்டை
அணையை பலப்படுத்தவும், பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்டவும் அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் அணையின் உறுதி குறித்து விமர்சனம் செய்து வரும் கேரளா அரசு 142 அடி தண்ணீர் வரை தேக்க முடியாது என்று கூறி வருகிறது. ஆனால், தமிழக அரசு 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கும் முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறது.
இதற்கிடையே, பருவமழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க, 139 அடி நிரம்பியதும் தமிழக அதிகாரிகள் அனுமதியுடன் கேரள அரசு அணையை திறந்தது. தமிழக அதிகாரிகள் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப் பெரியாது அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்தநிலையில் அணையை பலப்படுத்தவும், பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்டவும் அனுமதி கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணையை வலுப்படுத்த அங்குள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கை. இதற்கு முதலில் அனுமதி அளித்த கேரள அரசு பின்னர் எதிர்ப்பு கிளம்பியதால், தடைவிதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்திறப்பு, பராமரிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தமிழக கட்டுப்பாட்டிலே உள்ளது.
ஆற்காடு அருகே பெட்ரோல் பங்க்கில் தகராறு செய்த 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 55). அதேப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். நேற்று புதுப்பாடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் 500 ரூபாய் கொடுத்து விட்டு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். பின்னர் பாபுவிடம் 100 ரூபாய் வாங்கிக்கொண்டு மீதி பணத்தை தனது தம்பி அருண்குமாரிடம் கொடுத்து விடவும் என பாபுவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் அங்கு வந்த அருண்குமார் அவருடைய அண்ணன் விஜயகுமார் 500 ரூபாய் கொடுத்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதாகவும் மீதி 400 ரூபாய் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.
இதற்கு விஜயக்குமார் 100 ரூபாய் வாங்கிச்சென்று விட்டதாகவும் மீதி 300 ரூபாய்தான் தர வேண்டும் என பாபு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அருண்குமார் அவரது நண்பர் நேதாஜி ஆகிய இருவரும் பாபுவை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாபு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், நேதாஜி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 55). அதேப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். நேற்று புதுப்பாடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் 500 ரூபாய் கொடுத்து விட்டு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். பின்னர் பாபுவிடம் 100 ரூபாய் வாங்கிக்கொண்டு மீதி பணத்தை தனது தம்பி அருண்குமாரிடம் கொடுத்து விடவும் என பாபுவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் அங்கு வந்த அருண்குமார் அவருடைய அண்ணன் விஜயகுமார் 500 ரூபாய் கொடுத்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதாகவும் மீதி 400 ரூபாய் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.
இதற்கு விஜயக்குமார் 100 ரூபாய் வாங்கிச்சென்று விட்டதாகவும் மீதி 300 ரூபாய்தான் தர வேண்டும் என பாபு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அருண்குமார் அவரது நண்பர் நேதாஜி ஆகிய இருவரும் பாபுவை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாபு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், நேதாஜி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்தது. தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன். இதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு ஊடகத்தில் பார்த்திபன் பேசும்போது, எனக்கு விஜய்க்கு கதை சொல்லி அவரை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதுவும் விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோளிங்கர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று இரவு திருட்டு கும்பல் உண்டியல் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிசென்றனர்.
இதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கொண்டபாளையம் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். பிள்ளையார் கோவிலில் மாதம் ஒருமுறை உண்டியலை திறப்பார்கள். அப்போது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை காணிக்கை பணம் இருக்கும். அந்த பணத்தை கொண்டு கோவில் பழுதுபார்த்தல், சிறப்பு பூஜைகள் போன்ற பணிகள் மேற்கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் 10 மாதங்களாகியும் உண்டியல் பணம் திறக்கப்படாமல் இருந்தது குறிபிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று இரவு திருட்டு கும்பல் உண்டியல் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிசென்றனர்.
இதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கொண்டபாளையம் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். பிள்ளையார் கோவிலில் மாதம் ஒருமுறை உண்டியலை திறப்பார்கள். அப்போது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை காணிக்கை பணம் இருக்கும். அந்த பணத்தை கொண்டு கோவில் பழுதுபார்த்தல், சிறப்பு பூஜைகள் போன்ற பணிகள் மேற்கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் 10 மாதங்களாகியும் உண்டியல் பணம் திறக்கப்படாமல் இருந்தது குறிபிடத்தக்கது.
கூட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பது குறித்த தகவல்கள் வழங்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 26-ந் தேதி, காலை 10 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள அறை எண் 20ல் நடக்கிறது.விவசாயிகள், மாவட்ட கலெக்டரிடம் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.
மேலும் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க வேளாண் அலுவலர், தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகளை கொண்ட வேளாண் உதவி மையம், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த மையத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பது குறித்த தகவல்கள் வழங்கப்படும். உரிய ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து தரப்படும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரக்கோணம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 60 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணம் மற்றும் சொத்து ஆவணங்களையும் கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுதானந்தன் (வயது 50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி 3 மகள்கள் உள்ளனர்.
அரக்கோணம் அருகே உள்ள கைனூர் கிராமத்தில் இவருக்கு மற்றொரு வீடு உள்ளது.
நேற்று சுதானந்தன் மனைவி மகள்களுடன் கைனூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்றிருந்தார்.
அந்த நேரத்தில் மர்மநபர்கள் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றனர். வீட்டில் உள்ள அறை கதவை உடைத்து அங்கு பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள் ரூ.10 லட்சம் பணம் மற்றும் சொத்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
சுதானந்தன் கைனூர் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து இரவு 10 மணிக்கு செம்பேடு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிக்கப்பட்டன.
சுதானந்தன் நேற்று இரவு 10 மணிக்கு வீட்டில் கொள்ளை நடந்ததை கண்டறிந்தார். இதன் மூலம் பட்டப்பகலில் இந்த கொள்ளை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். அந்த பகுதியில் ஏதாவது கண்காணிப்பு கேமரா உள்ளதா? அதில் கொள்ளையர்கள் பதிவாகி உள்ளார்களா என ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரக்கோணம் அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுதானந்தன் (வயது 50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி 3 மகள்கள் உள்ளனர்.
அரக்கோணம் அருகே உள்ள கைனூர் கிராமத்தில் இவருக்கு மற்றொரு வீடு உள்ளது.
நேற்று சுதானந்தன் மனைவி மகள்களுடன் கைனூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்றிருந்தார்.
அந்த நேரத்தில் மர்மநபர்கள் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றனர். வீட்டில் உள்ள அறை கதவை உடைத்து அங்கு பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள் ரூ.10 லட்சம் பணம் மற்றும் சொத்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
சுதானந்தன் கைனூர் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து இரவு 10 மணிக்கு செம்பேடு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிக்கப்பட்டன.
சுதானந்தன் நேற்று இரவு 10 மணிக்கு வீட்டில் கொள்ளை நடந்ததை கண்டறிந்தார். இதன் மூலம் பட்டப்பகலில் இந்த கொள்ளை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். அந்த பகுதியில் ஏதாவது கண்காணிப்பு கேமரா உள்ளதா? அதில் கொள்ளையர்கள் பதிவாகி உள்ளார்களா என ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், சாலைகளில் ஆறுபோல தண்ணீர் ஓடியது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட கூடுதலாக பெய்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை குறைந்திருந்தது.
இந்தநிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று பகலில் சாரல் மழை பெய்தது. மாலையில் பல்வேறு இடங்களில் கனமழையும், சாரல் மழையும் பெய்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், சாலைகளில் ஆறுபோல தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
சங்கரன்கோவிலில் மட்டும் 57 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆலங்குளம் பகுதியிலும் இடி-மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி பகுதியிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அங்கு 45 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நகர்புறங்களில் சாரல் மழையும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையும் பெய்தது.
மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பாபநாசம் அணைக்கு இன்று காலை விநாடிக்கு 1,159 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1,405 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை நீர்மட்டம் 138.40 அடியாக உள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 140.91 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை விநாடிக்கு 212 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 15 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது அணை நீர்மட்டம் 93.15 அடியாக உள்ளது.
கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு ஆகிய அணைகள் நிரம்பும் நிலையை அடைந்ததால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. குண்டாறு, அடவிநயினார், நம்பியாறு அணைகள் தொடர்ந்து நிரம்பி வழிகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.
தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வெள்ளமாக செல்கிறது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் முக்காணி தடுப்பணைகளை கடந்து, ஏராளமான தண்ணீர் கடலுக்கு செல்கிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
சங்கரன்கோவில்-57, ஆய்க்குடி-46, அடவிநயினார்-31, தென்காசி-14.4, கருப்பாநதி-13, சிவகிரி-12, சேர்வலாறு-12, செங்கோட்டை-11, பாபநாசம-10, மூலக்கரைப்பட்டி-10, நாங்குநேரி-10, ராமநதி-10, கொடுமுடியாறு-10, குண்டாறு-8, மணிமுத்தாறு-7.2, கன்னடியன்கால்வாய்-6.8, பாளை-6, அம்பை-6, கடனா நதி-6, சேரன்மகாதேவி-5.4, களக்காடு-5.4, நெல்லை-4.6, ராதாபுரம்-2.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
சூரங்குடி-45, கடம்பூர்-28, கழுகுமலை-28, திருச்செந்தூர்-27, காயல்பட்டினம்-26, மணியாச்சி-22, வைப்பார்-22, விளாத்திகுளம்-16, வேடநத்தம்-15, காடல்குடி-14, குலசேகரன்பட்டிணம்-14, சாத்தான்குளம்-13.4, தூத்துக்குடி-13.4, கயத்தாறு-13, எட்டயபுரம்-11.4, ஸ்ரீவைகுண்டம்-10.5, கீழஅரசடி-7, கோவில்பட்டி-6, ஓட்டப்பிடாரம்-5.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட கூடுதலாக பெய்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை குறைந்திருந்தது.
இந்தநிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று பகலில் சாரல் மழை பெய்தது. மாலையில் பல்வேறு இடங்களில் கனமழையும், சாரல் மழையும் பெய்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், சாலைகளில் ஆறுபோல தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
சங்கரன்கோவிலில் மட்டும் 57 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆலங்குளம் பகுதியிலும் இடி-மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி பகுதியிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அங்கு 45 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நகர்புறங்களில் சாரல் மழையும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையும் பெய்தது.
மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பாபநாசம் அணைக்கு இன்று காலை விநாடிக்கு 1,159 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1,405 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை நீர்மட்டம் 138.40 அடியாக உள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 140.91 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை விநாடிக்கு 212 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 15 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது அணை நீர்மட்டம் 93.15 அடியாக உள்ளது.
கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு ஆகிய அணைகள் நிரம்பும் நிலையை அடைந்ததால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. குண்டாறு, அடவிநயினார், நம்பியாறு அணைகள் தொடர்ந்து நிரம்பி வழிகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.
தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வெள்ளமாக செல்கிறது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் முக்காணி தடுப்பணைகளை கடந்து, ஏராளமான தண்ணீர் கடலுக்கு செல்கிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
சங்கரன்கோவில்-57, ஆய்க்குடி-46, அடவிநயினார்-31, தென்காசி-14.4, கருப்பாநதி-13, சிவகிரி-12, சேர்வலாறு-12, செங்கோட்டை-11, பாபநாசம-10, மூலக்கரைப்பட்டி-10, நாங்குநேரி-10, ராமநதி-10, கொடுமுடியாறு-10, குண்டாறு-8, மணிமுத்தாறு-7.2, கன்னடியன்கால்வாய்-6.8, பாளை-6, அம்பை-6, கடனா நதி-6, சேரன்மகாதேவி-5.4, களக்காடு-5.4, நெல்லை-4.6, ராதாபுரம்-2.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
சூரங்குடி-45, கடம்பூர்-28, கழுகுமலை-28, திருச்செந்தூர்-27, காயல்பட்டினம்-26, மணியாச்சி-22, வைப்பார்-22, விளாத்திகுளம்-16, வேடநத்தம்-15, காடல்குடி-14, குலசேகரன்பட்டிணம்-14, சாத்தான்குளம்-13.4, தூத்துக்குடி-13.4, கயத்தாறு-13, எட்டயபுரம்-11.4, ஸ்ரீவைகுண்டம்-10.5, கீழஅரசடி-7, கோவில்பட்டி-6, ஓட்டப்பிடாரம்-5.
அரக்கோணம் அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 78). மிளகாய் வியாபாரம் செய்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு மிளகாய் விற்றதற்கான பணம் வசூல் செய்வதற்காக நேற்று காலை திருவள்ளூர் மாவட்டம் மனவூர் கிராமத்திற்கு செய்வதற்காக அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற ரெயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், சின்னசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இந்திய அரசு அவசரகால கையிருப்பாக மூன்று இடங்களில் 38 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் கையிருப்பு வைத்துள்ளது.
ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம், பணமதிப்பு ஆகியவற்றை நிர்ணயிப்பதில் கச்சா எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போது பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைவதுடன் விலைவாசி ஏற்றம் அடைகிறது. இது பொருளாதாரத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, தங்கள் கையில் இருக்கும் இருப்புகளில் இருந்து குறிப்பிட்ட அளவு கச்சா எண்ணெய் பேரல்களை வினியோகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக, ஐந்து மில்லியன் கச்சாய் எண்ணெய் பேரல்களை அவசர கால இருப்பில் இருந்து விடுவிக்க இருக்கிறது.
இந்தியா அவசர கால கையிருப்பாக மூன்று இடங்களில் 38 மில்லியன் பேரல்கள் (5.33 மில்லியன் டன்) கையிருப்பு வைத்துள்ளது.
‘‘திரவ ஹைட்ரோகார்பன்களின் விலை நியாயமானதாகவும், பொறுப்பானதாகவும் சந்தை சக்திகளால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா உறுதியாக நம்புகிறது’’ இந்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் செயற்கையாகவே தேவையை அதிகரித்து, விலையை உயர்த்துவது குறித்து இந்தியா தொடர்ந்து தனது கவலையை தெரிவித்து வருகிறது. இது எதிர்மறைவான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை அதிகாரிப்பூர்வமாக தேதியிட்டு வெளியாகவில்லை. இருந்தாலும் இன்னும் 10 நாட்களுக்குள் கச்சா எண்ணெய் பேரல்களை பயன்பாட்டுக்கு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் முடிவை நீட்டித்துள்ளது. இதனால் சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆகும் அளவு குறைந்துள்ளது.
உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 3-வது இட்தில் உள்ளது. சர்வதேச அளவில் தொடர் விலை ஏற்றத்தால் இந்தியா பாதிப்புள்ளாகியுள்ளது.
அரக்கோணம் அருகே ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலா என்கிற பார்த்தசாரதி (வயது 30), சுகுமார் (26) கூலி தொழிலாளர்கள்.
நேற்று இரவு இவர்கள் தக்கோலம் அருகே உள்ள சேர்ந்தமங்கலம் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். சுகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
படுகாயமடைந்த பார்த்தசாரதியை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பார்த்தசாரதி பரிதாபமாக இறந்தார்.
ரெயில்வே போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலா என்கிற பார்த்தசாரதி (வயது 30), சுகுமார் (26) கூலி தொழிலாளர்கள்.
நேற்று இரவு இவர்கள் தக்கோலம் அருகே உள்ள சேர்ந்தமங்கலம் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். சுகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
படுகாயமடைந்த பார்த்தசாரதியை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பார்த்தசாரதி பரிதாபமாக இறந்தார்.
ரெயில்வே போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆடு திருடும் கும்பலால் சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டது திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 51). 1995-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த இவர் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வேலை பார்த்துள்ளார்.
நேர்மையாக பணியாற்றி வந்த இவர் போலீஸ் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து கடந்த 1.7.2020-ல் திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்.
அப்போது முதல் தொடர்ந்து 1½ ஆண்டுகளாக இரவு ரோந்து பணியை மேற்கொண்டு வந்த பூமிநாதன் இரவு நேர குற்றசெயல்களை தடுத்தார். மேலும் இரவில் சுற்றித்திரியும் சமூக விரோத கும்பலுக்கு இவர் சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ரோந்து பணிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அவருடன் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஏட்டு சித்திரைவேல் என்பவரும் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் திருவெறும்பூரை அடுத்த சின்னசூரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு இருள் சூழ்ந்த அடர்ந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை பார்த்து உடனே தங்களது வாகனத்தை நிறுத்தினர். அந்த சமயம் அங்கு ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதால் உஷாரான பூமிநாதன் மற்றும் ஏட்டு அந்த பகுதியை நோக்கி சென்றனர்.
இதற்கிடையே 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் ஆடுகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றனர். அவர்கள் ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்த போலீசார் தொடர்ந்து துரத்தினர். ஆனால் அந்த கும்பல் நிற்காமல் வேகம் காட்டினர்.
இதற்கிடையே குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் ஏட்டு சித்திரைவேலால் கும்பலை துரத்தி செல்லமுடியவில்லை. ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மட்டும் ஆடு திருடும் கும்பலை துரத்தி சென்றார். ஒரு கட்டத்தில் அந்த கும்பல் திருச்சி மாவட்டத்தை கடந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு சென்றனர்.
கீரனூரை அடுத்த களமாவூர் ரெயில்வே கேட்டை தாண்டி பள்ளத்துப்பட்டி அருகே சென்றபோது ஒரு வாகனத்தை பூமிநாதன் தடுத்து நிறுத்தினார். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னால் சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் எஸ்.ஐ. பூமிநாதனுடன் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது பூமிநாதன் நவலூர் போலீஸ் நிலையத்தில் தன்னுடன் வேலை பார்த்து வரும் மற்றொரு சப்-இன்ஸ்பெக்டரான கீரனூரை சேர்ந்த சேகர் என்பவரை உதவிக்காக செல்போனில் அழைத்தார். இதனால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ்.ஐ. பூமிநாதனை சரமாரியாக வெட்டினர்.
தலை மற்றும் கையில் பலத்த காயம் அடைந்த பூமிநாதன் நடுரோட்டில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்தநிலையில் உதவிக்கு அழைத்த மற்றொரு எஸ்.ஐ. சேகர் அங்கு வந்து பார்த்தபோது, பூமிநாதன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருப்பதால் ஆடுகளை திருடி கறிக்கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இதுபோன்று ஆடு திருடு போன புகார்களின் அடிப்படையில் கைதானவர்கள், அதில் தொடர்புடைய நபர்களின் பட்டியலை தயாரித்த போலீசார் அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்ட மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. அதே திசையில் கொலையாளிகள் தப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் கைரேகை நிபுணர்களும் கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.
அதேபோல் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே திருச்சியில் இருந்து கொலை சம்பவம் நடந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி வரை அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் தீவிர ஆய்வு செய்து அதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 51). 1995-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த இவர் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வேலை பார்த்துள்ளார்.
நேர்மையாக பணியாற்றி வந்த இவர் போலீஸ் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து கடந்த 1.7.2020-ல் திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்.
அப்போது முதல் தொடர்ந்து 1½ ஆண்டுகளாக இரவு ரோந்து பணியை மேற்கொண்டு வந்த பூமிநாதன் இரவு நேர குற்றசெயல்களை தடுத்தார். மேலும் இரவில் சுற்றித்திரியும் சமூக விரோத கும்பலுக்கு இவர் சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ரோந்து பணிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அவருடன் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஏட்டு சித்திரைவேல் என்பவரும் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் திருவெறும்பூரை அடுத்த சின்னசூரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு இருள் சூழ்ந்த அடர்ந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை பார்த்து உடனே தங்களது வாகனத்தை நிறுத்தினர். அந்த சமயம் அங்கு ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதால் உஷாரான பூமிநாதன் மற்றும் ஏட்டு அந்த பகுதியை நோக்கி சென்றனர்.
இதற்கிடையே 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் ஆடுகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றனர். அவர்கள் ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்த போலீசார் தொடர்ந்து துரத்தினர். ஆனால் அந்த கும்பல் நிற்காமல் வேகம் காட்டினர்.
இதற்கிடையே குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் ஏட்டு சித்திரைவேலால் கும்பலை துரத்தி செல்லமுடியவில்லை. ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மட்டும் ஆடு திருடும் கும்பலை துரத்தி சென்றார். ஒரு கட்டத்தில் அந்த கும்பல் திருச்சி மாவட்டத்தை கடந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு சென்றனர்.
கீரனூரை அடுத்த களமாவூர் ரெயில்வே கேட்டை தாண்டி பள்ளத்துப்பட்டி அருகே சென்றபோது ஒரு வாகனத்தை பூமிநாதன் தடுத்து நிறுத்தினார். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னால் சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் எஸ்.ஐ. பூமிநாதனுடன் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது பூமிநாதன் நவலூர் போலீஸ் நிலையத்தில் தன்னுடன் வேலை பார்த்து வரும் மற்றொரு சப்-இன்ஸ்பெக்டரான கீரனூரை சேர்ந்த சேகர் என்பவரை உதவிக்காக செல்போனில் அழைத்தார். இதனால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ்.ஐ. பூமிநாதனை சரமாரியாக வெட்டினர்.
தலை மற்றும் கையில் பலத்த காயம் அடைந்த பூமிநாதன் நடுரோட்டில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்தநிலையில் உதவிக்கு அழைத்த மற்றொரு எஸ்.ஐ. சேகர் அங்கு வந்து பார்த்தபோது, பூமிநாதன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதிக்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. கொலையாளிகள் நிச்சயம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிரடியாக போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருப்பதால் ஆடுகளை திருடி கறிக்கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இதுபோன்று ஆடு திருடு போன புகார்களின் அடிப்படையில் கைதானவர்கள், அதில் தொடர்புடைய நபர்களின் பட்டியலை தயாரித்த போலீசார் அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்ட மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. அதே திசையில் கொலையாளிகள் தப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் கைரேகை நிபுணர்களும் கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.
அதேபோல் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே திருச்சியில் இருந்து கொலை சம்பவம் நடந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி வரை அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் தீவிர ஆய்வு செய்து அதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலையுண்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆடு திருடும் கும்பலால் சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டது திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்...மாணவர்கள் போராட்ட அறிவிப்பால் மெரினாவில் போலீஸ் குவிப்பு
தற்காலிகமாக ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகப்படியான வெள்ள நீர் செல்கிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் ஆற்காடு நகர் பகுதியில் இருந்த மொத்த காய்கறி மார்க்கெட் கடைகள் ஆற்காடு செய்யாறு பைபாஸ் சாலையில் உள்ள பாலாற்றின் கரையோரம் அமைத்து விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்தது.
இந்த நிலையில் ஆற்காடு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படுவதால் காய்கறி கடைகள் நடத்தப்படும் இடங்கள் முழுவதும் பாலாற்றின் வெள்ள நீர் செல்வதால் அங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் தற்காலிகமாக ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.






