search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train Collide death"

    அரக்கோணம் அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 78). மிளகாய் வியாபாரம் செய்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு மிளகாய் விற்றதற்கான பணம் வசூல் செய்வதற்காக நேற்று காலை திருவள்ளூர் மாவட்டம் மனவூர் கிராமத்திற்கு செய்வதற்காக அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற ரெயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், சின்னசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    கோவையில் ரெயில் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை கணபதி டெக்ஸ்டூல்ஸ் பாலம் பகுதியில் நேற்று இரவு 70 வயது மதிக்க தக்க ஆண் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் 60 வயது மதிக்க தக்க ஆண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ரெயிலில் அடிபட்டு இறந்த 2 பேர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×