என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்காட்டில் மொத்த காய்கறி கடைகள் தண்ணீரில் மூழ்கியது
Byமாலை மலர்20 Nov 2021 12:51 PM GMT (Updated: 20 Nov 2021 12:51 PM GMT)
தற்காலிகமாக ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகப்படியான வெள்ள நீர் செல்கிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் ஆற்காடு நகர் பகுதியில் இருந்த மொத்த காய்கறி மார்க்கெட் கடைகள் ஆற்காடு செய்யாறு பைபாஸ் சாலையில் உள்ள பாலாற்றின் கரையோரம் அமைத்து விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்தது.
இந்த நிலையில் ஆற்காடு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படுவதால் காய்கறி கடைகள் நடத்தப்படும் இடங்கள் முழுவதும் பாலாற்றின் வெள்ள நீர் செல்வதால் அங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் தற்காலிகமாக ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X