என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • சுதந்திர தினவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார்.

    ராமநாதபுரம்

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப் படவேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கலெக்டர் விஷ்ணு சந்தி ரன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் சுதந்திர தின விழாவில் தியாகிகளை கவுரவித்தல், பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவி களுக்கான கலை நிகழ்ச்சி கள் குறித்து திட்டமிடுதல், பொதுமக்கள் பங்கேற்ப தற்கான முன்னேற்பாடு களை செய்தல் ஆகிய தொடர்பாக அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோ சனை நடத்தினார். அலுவலர்கள் திட்டமிட்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவு றுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சியில் டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
    • மாவட்டத்துக்குட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.-2) ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம்" நடத்திட முடிவெடுக்கப்பட்டு, முதலாவதாக கடந்த ஜூலை 26 திருச்சியில் டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

    இதை தொடர்ந்து தென் மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.-2) பயிற்சி பாசறைக் கூட்டம்" வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று ராமநாதபுரம், தேவிப்பட்டினம் சாலை, பேராவூர் என்ற இடத்தில், முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட நடைபெற உள்ளது.

    தென் மண்டலத்துக்குட்பட்ட கீழே குறிப்பிட்டுள்ள 19 கழக மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தத்தமது மாவட்டங்களுக்குட்பட்ட 'வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.-2) கூட்டத்தை' கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.-2) அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இதில் பங்கேற்கும் மாவட்டங்கள் விவரம் வருமாறு:-

    ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் கிழக்கு திண்டுக்கல் மேற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு, மதுரை மாநகர், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு.

    இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.

    • மண்டபத்தில் மகளிர் உரிமைத்தொகை டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
    • ரேசன் கடைபொறுப்பாளர் சந்திரசேகர் குடும்ப தலைவிகளின் பெயர்களை பதிவு செய்தார்.

    மண்டபம்

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட உள்ளது.அதனையொட்டி கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் பதிவாளர் அளவில் கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளார். இதன் மூலம் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், டோக்கன் வழங்குதல், சேமிப்பு கணக்கு இல்லாத குடும்ப தலைவிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய கணக்குகள் தொடங்குதல் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி 11-வது வார்டு சேது நகரில் 150 ரேசன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், டோக்கன் கவுன்சிலர்கள் முபாரக், முகமது மீரா சாகிப், சாதிக் பாட்சா ஆகியோர் முன்னிலையில் விநியோகம் செய்யப்பட்டது. ரேசன் கடைபொறுப்பாளர் சந்திரசேகர் குடும்ப தலைவிகளின் பெயர்களை பதிவு செய்தார். இந்த விண்ணப்ப படிவங்களை நிறைவு செய்து குடும்ப தலைவிகள் வார்டுகளில் நடக்கும் சிறப்பு முகாமின் போது அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • மாணவ-மாணவிகளுக்கு ரூ.42 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் வழங்கினார்.
    • கிராமப் பகுதியில் இருந்து நகர்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்துசேரமுடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யதுஅம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் தமிழகஅரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்புமற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிவழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.

    ராமநாதபுரம் சட்டமன்றஉறுப்பினர் காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி ரூ.42 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை 850 மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

    அப்ேபாது அவர் பேசியதாவது:-

    தமிழகஅரசின் இத்திட்டம் மிகச்சிறப்பான ஒன்றாகும். இதன் மூலம் கிராமப் பகுதியில் இருந்து நகர்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்துசேரமுடியும். முன்பெல்லாம் நடந்து பள்ளிக்குவந்துசேரும் பொழுதுகாலவிரையம் ஆவதுடன் மனச்சோர்வும் உண்டாகும். இதனால் மனதைஒருநிலைப்படுத்திகல்விகற்பதுஎன்பதுகடினமாக இருந்துவந்தது. இது மட்டு மின்றி இதுபோன்றநிலையில் பலர்படிப்பைதொடர கூட முடியாமல் இருந்து வந்த காலம் அப்பொழுது உண்டு. ஆனால் இப்பொழுது அரசின் எண்ணற்ற திட்டங்களால் பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தால் போதும் உயர்கல்வி வரைபடித்துபயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெ றுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ராமநாதபுரம் நகர்மன்றதலைவர் ஆர்.கே.கார்மேகம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், மாவட்டகல்வி அலுவலர் சுதாகர் மற்றும் பள்ளி தாளாளர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    கீழக்கரை

    கீழக்கரையில் நிலவிவரும் போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக வெல்பேர் கமிட்டி சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்தால் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் போக்கு வரத்து நெரிசல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.

    போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் ஒரு பக்க பார்க்கிங் விஷயத்தில் காவல்துறை முனைப்பு காட்டுவதோடு நோ பார்க் கிங் ஏரியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் நிறுத்தும் பைக், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கையை ஏற்று கொண்ட போலீசார் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக் கும் வகையில் பிரச்சா ரம் செய்யுமாறு கேட்டு கொண்டனர்.

    பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எடுக்கப் படும் நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    முக்குரோட்டிலிருந்து குயின் டிராவல்ஸ் அலுவல கம் வரை ரோட்டின் இரு பக்கமும் உள்ள ஆக்கிர மிப்புகளை முழுமையாக அகற்றுவதோடு இனி எந்த காலத்திலும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணிக்கப்படு மென்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க படுமென்றும் தீர்மானிக்கப் பட்டது.

    கூட்டத்தில் போலீஸ் ஆய்வாளர் சரவணன், சுகா தாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா, கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி நிர்வாகி கள், நகர்மன்ற உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

    • ஓ.பி.எஸ்.-அ.ம.மு.க. அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • துணை ஒருங்கிணைப்பா ளரும், முன்னாள் அமைச்ச ருமான கு.ப.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஓ.பி.எஸ். அணி சார்பில் கோட நாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசா ரிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர்

    எம்.பி. ஏற்பாட்டில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணை ஒருங்கிணைப்பா ளரும், முன்னாள் அமைச்ச ருமான கு.ப.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    அ.ம.மு.க. கிழக்கு மாவ ட்ட செயலாளர் முனிய சாமி, மேற்கு மாவட்ட செயலாளர் முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன்,மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொகுதி செயலாளர் நவநாதன், மூக்கையா, ராமகிருஷ்ணன், முத்துப்பாண்டி, மாவட்ட துணை செயலாளர் கற்பகம் பழனிச்சாமி, இணைச்செயலாளர் சித்ரா,பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் நந்திவர்மன் (ஆர்.எஸ். மங்கலம்),முத்து முருகன் (ராமநாதபுரம் தெற்கு), உடைய தேவன் (திருப்புல்லாணி).

    சீனிமாரி ( மண்டபம் கிழக்கு),சிவக்குமார் (மண்டபம் மத்தி), அழகர்சாமி (மண்டபம் மேற்கு), ராமநாதபுரம் நகர் செயலாளர் பால சுப்பிரமணியன்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செய லாளர் திசைநாதன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராமநாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர், விவசாய அணி செயலாளர் மாரிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சோலை முருகன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சக்தி, மகளிரணி செயலாளர் சபீனா பேகம்,சிறுபான்மை பிரிவு செயலாளர் முஹமது அஸ்லாம், இளைஞரணி செயலாளர் சின்னாண்டு தேவன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை சதிஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • பெத்தெரி தெரு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தையை வெறி நாய் கடித்தது.
    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பொது மக்களை ஒன்று திரட்டி நாய்களை நகராட்சிக்குள் விடும் போராட்டத்தை நடத்துவோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பெத்தெரி தெரு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தையை வெறி நாய் கடித்தது. அதை விரட்ட சென்ற தாயாரையும் கடிக்க வந்த போது அக்கம்பக்கம் உள்ள பொதுமக்கள் நாயை விரட்டினர். கடந்த மாதத்தில் மட்டும் கீழக்கரையில் 9 நபர் களை வெறி நாய்கள் கடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்களை அச்சு றுத்தும் வெறி நாய் களை பிடிக்க கீழக் கரை நகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மாவட்ட கலெக்டர், நகராட்சி அதிகா ரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கீழக்கரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர் தலைவர் அபுதாஹிர் கூறுகையில்,

    கீழக்கரையில் தொடர்ச்சியாக வெறி நாய்கள் பொது மக்களையும் குழந்தை களையும் கடித்துக் கொண்டி ருக்கிறது. இதனை எஸ்.டிபி.ஐ. கட்சி வன்மையாக கண்டிப்ப தோடு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கீழக்கரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பொது மக்களை ஒன்று திரட்டி நாய்களை நகராட்சிக்குள் விடும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

    • 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான 130 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
    • பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தமிழகத்திலிருந்து தனுஷ் கோடி கடல் வழியாக கடல் அட்டை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இந்திய கடலோர காவல் படை மண்டபத்தை சேர்ந்த வீரர்கள் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான 130 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் அந்த கடல் அட்டைகளை பதுக்கி வைத்தவர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    • இலங்கைக்கு கடத்திச் செல்லும் போதை பொருட்களுக்கு பணத்தை இலங்கையைச் சேர்ந்தவர்கள் நேரடியாக படகோட்டியிடம் கொடுக்க மாட்டார்கள்.
    • ஏழை, எளிய மீனவர்கள் மத்தியில் பணத்தாசையைத் தூண்டி அவர்களைக் கடத்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்பட கடலோர மாவட்டங்கள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு போதைப்பொருள் உள்ளிட்டவை தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் சர்வதேச கடல் எல்லை வழியாக சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகம் நடைபெறுகிறது.

    இதனை தடுக்க இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பல்கள் மணல்திட்டு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வான்வெளியிலும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள், முழு வீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறது.

    இந்த நிலையில் நேற்று இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு கடத்தி வந்த 9 கிலோ தங்கம் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.6 கோடியாகும். இது தொடர்பாக தங்கச்சிமடத்தை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்பட்ட 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். சமீபகாலமாக அதிக அளவு கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவது பெரும் சவாலாக உள்ளது.

    இதற்கிடையே இதுபோன்ற கடத்தல் தொழிலுக்கு ஏழை, எளிய மீனவர்களை கடத்தல்காரர்கள் மூளை சலவை செய்து மீன்பிடி படகுகளை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறுதான் இலங்கையில் இருந்து போதைப் பொருட்களைக் கச்சிதமாக கடத்தி செல்வதும், பதிலுக்கு தங்கம் கடத்தி வருவதும் தொடர்கிறது.

    ராமேசுவரம் கடல் பகுதியில் நடக்கும் கடத்தல் குறித்து விசாரித்தபோது, குறைந்த நாட்களில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் வசதி படைத்தவர்கள் கூட கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், தமிழக கடற்கரையில் இருந்து படகில் ஏற்றி விடும் பொருட்களை நடுக்கடலில் நிற்கும் இலங்கை படகிற்கு கை மாற்றி விட்டால் மட்டும் போதும், குறிப்பிட்ட பணம் அல்லது தங்கம் கைமாறாக கொடுத்துவிடுவார்கள்.

    அந்த வகையில்தான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மீறி சர்வதேச கடல் வழியாக தமிழகத்திற்குள் படகில் பல கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:-

    சில நேரங்களில் கடற்படை துரத்தும்போது சில படகுகள் நடுக்கடலில் கவிழ்ந்து படகில் செல்பவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இலங்கையில் இருந்து இத்தனை கிலோ கஞ்சா தேவை என்ற தகவல் முதலில் குறுஞ்செய்தியாக வரும். ஆனால் இப்போது வாட்ஸ்அப் அழைப்பு மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. இந்த அழைப்பை போலீசார் இடைமறித்துக் கேட்க முடியாது என்பதால் அதன் மூலம் தொடர்பு கொள்கின்றனர்.

    இலங்கைக்கு கடத்திச் செல்லும் போதை பொருட்களுக்கு பணத்தை இலங்கையைச் சேர்ந்தவர்கள் நேரடியாக படகோட்டியிடம் கொடுக்க மாட்டார்கள். கஞ்சாவுக்கு பணத்தை தமிழகத்தில் உள்ள சில நபர்களின் தொடர்பு எண்ணைக் கொடுத்து அவர்களைத் தொடர்பு கொண்டு பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு சொல்வார்கள். அந்த எண்ணைத் தொடர்பு கொண்டால், குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி அங்கு வைத்து அந்தப் பணத்தை வாங்கி கொள்வது பழக்கமாக இருந்து வருகிறது.

    ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தொலைபேசி எண்கள், வெவ்வேறு நபர்களிடம் இருந்து பணம் பெற்று கொள்வார்கள். ஆனால் பல நேரங்களில் பணத்திற்குப் பதிலாக அதற்கு நிகரான மதிப்பு கொண்ட தங்க கட்டிகள் இலங்கையிலிருந்து கொடுத்து விடப்படும். பண நெருக்கடியில் இருக்கும் ஏழை, எளிய மீனவர்கள் மத்தியில் பணத்தாசையைத் தூண்டி அவர்களைக் கடத்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பது வேதனைக்குரியது.

    பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மீறி சர்வதேச கடல் வழியாக தமிழகத்திற்குள் படகில் தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தில் மண்டபம் அருகே வேதாளையை சேர்ந்த நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்பதால் அவர்களது வீடுகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • பசுமை உரம் வினியோகம் தொடங்கியது.
    • உத–ய–கு–மார், சர–வண–கு–மார் உள்–பட பலர் கலந்து ெகாண்–டனர்.

    கீழக்–கரை

    கீழக்–கரை நக–ராட்–சிக்கு உட்–பட்ட 21 வார்–டு–க–ளி–லும் தின–சரி சேக–ரிக்–கும் குப்–பை–கள் பள்–ள–ேமார்–கு–ளம் நுண் உர–மாக்–கும் ைமயத்–தில் இயற்ைக உர–மாக மாற–றப்–பட்டு வரு–கிறது. அதில் இருந்து தயா–ரிக்–கப்–பட்ட இயற்கை உரம், ேவளாண்மை துைற–யின் மூலம் ெசழிப்பு என்ற ெபய–ரில் வினி–ேயா–கம் செய்ய உரி–மம் ெபறப்–பட்டு நக–ராட்சி அலு–வ–ல–கத்–தில் இயற்ைக உரம் வினி–யோக ெதாடக்க நிகழ்ச்சி நடந்தது.

    3 கிேலா எடை ெகாண்ட உரம் நூற்றுக்கும் ேமற்–பட்ட ெபாது–மக்–க–ளுக்கு இல–வ–சமாக வழங்–கப்–பட்–டது. ேமலும், தின–மும் நக–ராட்–சி–யில் 3 கிேலா எைட ெகாண்ட உரம் ரூ.20-க்கு விற்பைன ெசய்–யப்–படும் என்று நக–ராட்சி ஆணை–யர் செல்வராஜ் ெதரி–வித்–துள்–ளார்.

    இந்–நி–கழ்ச்–சிைய நகர்–மன்ற தலை–வர் ெசஹா–னாஸ் ஆபிதா ெதாடங்கி ைவத்–தார். நக–ராட்சி சுகா–தார ஆய்–வாளர் பரக்–கத்–துல்லா, 4-வது வார்டு கவுன்–சி–லர் சூரி–ய–கலா, 7-வது வார்டு கவுன்–சி–லர் மீரான் அலி, நக–ராட்சி பணி ேமற்–பார்–ைவ–யா–ளர் ெசந்–தில்–கு–மார், இள–நிைல உத–வி–யா–ளர்–கள் தமிழ்–ெசல்–வன், உத–ய–கு–மார், சர–வண–கு–மார் உள்–பட பலர் கலந்து ெகாண்–ட–னர்.

    • ஆபத்தான நிலையில் தொங்கும் வழிகாட்டி பலகையை அப்புறப்படுத்த வேண்டும்.
    • ராமநாதபுரம் மாவட்டம் நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் ஆன்மிக புனித தலமாகவும் திகழ்கி–றது. மேலும் ஏர்வாடி, உத்தர–கோசமங்கை, திருப்புல்லாணி, தேவி பட்டினம் உள் ளிட்ட தலங்களுக்கு அனைத்து மாநிலத்தவர்கள் அதிக–ளவில் வந்து செல்கின் றனர். இவர்கள் தெரிந்து கொள்வதற்காக ஊர்களின் பெயர், கி.மீ. கொண்ட வழிகாட்டி பெயர் பலகை–கள் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் சிக்னல் போஸ்ட்டில் வைக்கப்பட் டுள்ளது. இப்படி வைத் துள்ள பெயர் பலகையை முறையாக நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்ப–தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனால் பல இடங்களில் ரோட்டின் நடுவே சேதம–டைந்து தொங்குகின்றன. அதிக காற்று வீசும் போது அறுந்து வாகன ஓட்டிகளின் தலையில் விழும் அபாயம் உள்ளது. ராமநாதபுரம்-மதுரை ரோடு இ.சி.ஆர்., சுற்றுச்சாலை நடுவே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை அறுந்து தொங்கு–வதால் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடக்கின்றனர்.

    எனவே தேசிய நெடுஞ் சாலை துறையினர் உடன–டியாக ஆபத்தான பெயர் பலகையை அகற்றி முறை–யாக பாராமரிக்க பொது–மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சி.எம்.டி.ராஜாஸ் சேதுபதி தலைமையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    • சுற்றுப்பயணத்தின் போது பெண்கள் இளைஞர்கள் எழுச்சியுடன் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    பரமக்குடி

    மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாநில நிர்வாகி சி.எம்.டி.ராஜாஸ் சேதுபதி தலைமை–யில் என் மண், என் மக்கள் நடைபயணமாக பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகு–திக்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வெடி வெடித்து, மேல தாளம் முழங்க, மாலை, சால்வை அணி–வித்து கும்ப மரியாதை–யுடன் வரவேற்பு அளிக்கப் பட்டது.

    பின்னர் வோந்தோனி ரோட்டில் அமைக்கப்பட்டி–ருந்த பாரதிய ஜனதா கட்சி கொடியை மாநிலத் தலை–வர் அண்ணாமலை ஏற்றி வைத்தார். பின்னர் ராஜாஸ் சேதுபதி தலைமையில் மாற்று கட்சியில் இருந்து விலகி 3,000 பேர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா–மலை முன்னிலையில் தங் களை இணைத்துக் கொண்ட–னர்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் மத்திய அரசின் 9 ஆண்டு–கால சாதனைகளை நேரடி–யாக தமிழ க மக்களின் மனதை கவரும் வகையில் தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவ–தும் நகர் பகுதிகளில் நடந்து சுமார் 1,700 கிலோ மீட்டர் தூரமும் மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்து மூலம் சுமார் 900 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல் கிறார்.

    ஐந்து கட்டங்களாக 168 நாட்களில் 236 தொகுதிக–ளுக்கும் செல்லும் வகையில் யாத்திரை தொடங்கி நடை–பெற்று வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணத்தின் போது பெண்கள் இளைஞர்கள் எழுச்சியுடன் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    ×