search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
    X

    மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவ-மாணவிகளுக்கு ரூ.42 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் வழங்கினார்.
    • கிராமப் பகுதியில் இருந்து நகர்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்துசேரமுடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யதுஅம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் தமிழகஅரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்புமற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிவழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.

    ராமநாதபுரம் சட்டமன்றஉறுப்பினர் காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி ரூ.42 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை 850 மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

    அப்ேபாது அவர் பேசியதாவது:-

    தமிழகஅரசின் இத்திட்டம் மிகச்சிறப்பான ஒன்றாகும். இதன் மூலம் கிராமப் பகுதியில் இருந்து நகர்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்துசேரமுடியும். முன்பெல்லாம் நடந்து பள்ளிக்குவந்துசேரும் பொழுதுகாலவிரையம் ஆவதுடன் மனச்சோர்வும் உண்டாகும். இதனால் மனதைஒருநிலைப்படுத்திகல்விகற்பதுஎன்பதுகடினமாக இருந்துவந்தது. இது மட்டு மின்றி இதுபோன்றநிலையில் பலர்படிப்பைதொடர கூட முடியாமல் இருந்து வந்த காலம் அப்பொழுது உண்டு. ஆனால் இப்பொழுது அரசின் எண்ணற்ற திட்டங்களால் பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தால் போதும் உயர்கல்வி வரைபடித்துபயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெ றுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ராமநாதபுரம் நகர்மன்றதலைவர் ஆர்.கே.கார்மேகம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், மாவட்டகல்வி அலுவலர் சுதாகர் மற்றும் பள்ளி தாளாளர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×