என் மலர்
புதுக்கோட்டை
- குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது
- அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் ஏதும் இல்லை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் நகராட்சி குப்பை கிடங்கில் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் பலமணி நேரம் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, திமுக நகர செயலாளர் செந்தில், கவுன்சிலர் கவிவேந்தன், மற்றும் பிரேம் ஆனந்த் நகராட்சி அலுவலர்கள் விரைந்து வந்து தீயை கட்டுபடுத்து பணியை துரிதப்படுத்தினர். தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரா;களுக்கு தகவல் தரப்பட்டவுடன் இரண்டு வாகனத்திற்கும் மேலாக கொண்டு வரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். விடிய,விடிய தீயை அணைக்க போராடி வருகின்றனர் . வருடத்திற்கு இரண்டு முறை இதுபோல் தீ விபத்து நடப்பது தொடர் கதையாக வருகிறது என அப்பகுதியின் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் தொpவிக்கின்றனர் . நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர் கள் தங்கள் இஷ்டம் போல் குப்பைகள் போட்டு வருவதால் இதுபோன்று தீ விபத்துக்கள் நடைப்பெறுவதாகவும் குற்றசாட்டுகின்றர் . தமிழக வாழ்வுரிமை கட்சி நியாஸ் இதற்கு கடுமையான கண்டனம் தொpவித்துள்ளார். குப்பை கிடங்கிற்கு சாpயான இடத்தை தோ;வு செய்யாத காரணமும், குப்பைகளை கையாளும் முறையே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்றும் சமூக விரோதிகள் செயல் என்று சொல்லி கடந்து விடமுடியாது, அதிகாரிகளும் சமூக விரோதிகளாவர் கள் என்கிறார். எனவே மாவட்ட நிர்வாகம் நகராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு குப்பை கிடங்கை சரிவர பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
- ஆலங்குடி வம்பன் அற்புதா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் அற்புதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜான் மார்ட்டின் தலைமை வகித்தார். துணை முதல்வர் பக்சிமெட்டில்டா வரவேற்றார். கருத்தரங்கில் ஆலங்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் நல்லதம்பி, நகர வட்டார போக்கு வரத்து காவல் ஆய்வாளர் பாஸ்கர் இந்தியன் ரெட் கிராஸ் கிளை சேர்மன் மருத்துவர் முத்தையா, பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர் லட்சுமி நாராயணன், துணைப் பொருளாளர் முருகேசன் செயற்குழு உறுப்பினர் சிவ ஆனந்தன், அருட்சகோதரி மார்கரேர் மேரி உட்பட பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினர். இன்னாசிமுத்து நன்றி கூறினார்.
- கந்தர்வகோட்டையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
- சாலை வசதி, பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது.ஒன்றியக் குழு துணை தலைவர் செந்தாமரை குமார், ஆணையர்கள் பால் பிரான்சிஸ், திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கந்தர்வகோ ட்டை பேருந்து நிலையத்தில் சுகாதார கழிப்பிட வசதி, கெண்டை யன் பட்டியில் அங்கன்வாடி மையம், கல்லா க்கோட்டை ஊராட்சியி ல் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.நிறைவாக ஒன்றிய குழு தலைவர் பேசும் பொழுது நிதி நிலைமைக்கு ஏற்ப கோரிக்கைகள் நிறைவேற்ற ப்படும் என்றார்.கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன் பாண்டியன், திருப்பதி, முருகேசன், கோவிந்தராஜ், பாரதி பிரியா, சுதா, மலர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வேங்கை வயலை சேர்ந்த ஒரு சிறுவன், இறையூர் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் என 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை கோர்ட்டில் அனுமதி பெற்றனர். இதையடுத்து இன்று பலத்த பாதுகாப்புடன் 4 சிறுவர்களும் தங்கள் பெற்றோர்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரி முன்னிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
- லாரி தீயில் எரிந்து நாசம் ஆனது.
- சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்தது
கரூர்
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியை சேர்ந்தவர் பத்மசேகர் (வயது50). இவர் தனக்கு சொந்தமான லாரியில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காட்பாடி நோக்கி மதுரை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தார். அந்த லாரி கரூர் மாவட்டம் புகழூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, லாரியின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மசேகர் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பினார். அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் லாரியின் முன்பக்கம் முழுவதும் தீயில் எரிந்து பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் மோதி விவசாயி பலியானார்.
- வீட்டிற்கு வந்தபோது சம்பவம்
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதியை சேர்ந்தவர் அரங்கன் (வயது 70). விவசாயி. இவர் தனது மொபட்டில் ஆலங்குடி சந்தைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கல்லாலங்குடி மாரியம்மன் கோவில் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அரங்கனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அரங்கன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முருகன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடக்கிறது.
- 1,000 பெண்கள் பங்கேற்றனர்
புதுக்கோட்டை
கறம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், சிவபெருமான், தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் உள்ளிட்ட சுவாமிகளின் சன்னதிகளும் உள்ளன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை குத்து விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான குத்து விளக்கு பூஜை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி 2 கட்டங்களாக மாலை வரை நடக்கிறது. இதில் 1000 பெண்கள் கலந்துகொண்டு குத்து விளக்கிற்கு பூஜை செய்கின்றனர். இதே போல் ஆடி மாதம் 4 வெள்ளிக்கிழமைகளிலும் குத்து விளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொள்கின்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை சுற்று வட்டார பழனி பாதயாத்திரை குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
- கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகில் கல்லுடைக்கும் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ) சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் அன்புமணவாளன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ரெத்தினவேல் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், நலவாரிய கூட்ட முடிவின்படியும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பணப்பலன்கள் கிடைக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். நிலுவை மனுக்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும். பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 1-ம் வகுப்பு முதல் கல்வி நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
- மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
புதுக்கோட்டை:
அன்னவாசல் அருகே புதூர் குளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் தினேஷ் (வயது 21). இவரது நண்பர் இலுப்பூர் பாப்பான்குடியை சேர்ந்த அஜீத்குமார் (22). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அஜீத்குமார் ஓட்டினார்.
புல்வயல் அருகே புதுக்கோட்டை-வயலோகம் சாலையில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் தினேஷ், அஜீத்குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அந்தவழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜீத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆலங்குடி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
புதுக்கோட்டை
ஆலங்குடியில் உள்ள வக்கீல்கள் மாவட்ட நீதிபதிகளை கண்டித்து ஆலங்குடி கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஆலங்குடி வக்கீல்கள் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, சார்பு நீதிபதி (கூடுதல்), மாவட்ட நீதிபதிகள், இவர்களுக்கு வருகின்ற குற்ற வழக்குகளுக்கு எதிரிகளிடம் இருந்து முன் தொகையாக குறிப்பிட்ட அளவு பணம் கட்ட வேண்டும் என உத்தரவு விடுகின்றனர். குற்றவாளிகளை பிணையில் விடும்போது அவர்கள் அந்தந்த பகுதிகளில் கையெழுத்து போடவிடாமல், மாவட்டம் விட்டு மாவட்டமும், தாலுகா விட்டு தாலுகாவும் மாற்றம் செய்யப்படுகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள நீதிபதி காலிபணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். புதுக்கோட்டை கூடுதல் மகிளா கோர்ட்டு புதுக்கோட்டை தாலுகா அதிகார எல்லை வரம்பிலிருந்து புதுக்கோட்டை மாவட்ட அதிகார எல்லைவரை நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிமன்ற பணியாளர்கள் வக்கீல்களுக்கு உரிய மரியாதை அளிக்க அறிவுரைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இன்றி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டதால் ஆலங்குடி கோர்ட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
- ஒலியமங்கலத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் தனியார் ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதை கண்டித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
- ஆக்கிரமிப்பை அகற்றிட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஒலியமங்கலத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சொந்தமான இடம் தனி நபர் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் அதனை அகற்றி, சுற்று சுவர் எழுப்பிட வேண்டும் என்று பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் வருவாய் துறையினருக்கு மனு அளித்தனர். இதனையடுத்து வருவாய் துறையினர் பள்ளி இடத்தை அளந்து அத்து கல் ஊன்ற வந்த போது தனிநபர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு உள்ளது. இது குறித்து பெற்றோர்கள் கூறும்போது, மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி சுற்று சுவர் கட்டித்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- கந்தர்வகோட்டை அருகே துணை மின் நிலையத்தில் தீ விபத்து
- தீ விபத்தில் 30 மின்கலன்கள் எரிந்து நாசமானது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை- வெள்ளாள விடுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான 440 கேவி துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள பேட்டரி குடோனில் இன்று அதிகாலை தீ பிடித்து எரிந்தது.இதனை பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவும் சூழல் ஏற்பட்ட நிலையில், கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறையினர் உடனடியாக அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீரர்கள் தண்ணீர் மற்றும் மணல்களை கொண்டு போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் 30 மின்கலன்கள் தீயில் எரிந்து நாசமாகின.துணை மின் நிலையத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ள சூழலில் இது குறித்து மின்துறை அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






