என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கஞ்சா பறிமுதல்
- விராலிமலை அருகே காரில் கடத்தி வந்த 141 கிலோ கஞ்சா பறிமுதல்
- 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை
விராலிமலை,
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அனுமதியின்றி விற்பதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் விராலிமலை தாலுகா கொடும்பாளூர் அருகே உள்ள லஞ்சமேடு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக எடுத்து சென்ற அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 141கிலோ 923கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த சேலம் மாவட்டம் வாழப்பாடி கொட்டவாடிப் பகுதியைச் சேர்ந்த கலியன் மகன் பெரியசாமி(வயது 41) மற்றும் விராலிமலை தாலுகா லஞ்சமேடு பகுதியைச் சேர்ந்த கருத்தக்கண்ணு மகன் பிரசன்ன வெங்கடேஷ்(28) ஆகிய இருவரையும் போலீசார் விராலிமலை போலீஸ் நிலையம் அழைத்து வந்து 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமிருந்தும் 3 செல்போன், புகையிலை பொருள்களுக்கான ரசீது மற்றும் ரொக்க பணம் ரூ.10ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்