என் மலர்
புதுக்கோட்டை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்தது. இதையொட்டி தடை செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தகுந்த மாற்று பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்டன.
தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் (நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி) ஒப்படைக்க வேண்டும்.
எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும். அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் வழங்க வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள முனிப்பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் மாத்தூர் நோக்கி சென்றார். மண்டையூர் சாலை அருகே சென்றபோது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை மறித்து, ரவியின் கழுத்தில் அரிவாள் மற்றும் கத்தியை வைத்து மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.1,600-ஐ பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி, அக்கம், பக்கத்தினர் உதவியுடன் 2 வாலிபர்களையும் விரட்டி சென்றார். அப்போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட மண்டையூர் போலீசார், 2 வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிளை மறித்தனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதால், போலீசார் விரட்டிச்சென்று அவர்களை மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து அந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த செல்வக்குமார்(34), திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி(35) என்பதும், அவர்கள் மாத்தூர் சிதம்பரம் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த வினோத்குமாருடன்(35) சேர்ந்து கடந்த 7 மாதங்களாக கொள்ளை உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார், அவர்களை சிதம்பரம் நகர் வீட்டிற்கு அழைத்து சென்று, அங்கிருந்த வினோத்குமாரை பிடித்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து, கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள், புதுக்கோட்டை , திருச்சி, பெரம்பலூரில் திருட்டு உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் சுந்தரபாண்டி மீது 7 கொலை வழக்குகளும், 3 கொள்ளை வழக்குகளும், செல்வக்குமார் மீது 4 கொள்ளை முயற்சி வழக்குகளும், 6 வழிப்பறி வழக்குகளும், 7 கொலை வழக்குகளும், வினோத்குமார் மீது 2 கார் திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது. மேலும் 3 பேருக்கும் மாத்தூர் பகுதியை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. இளை ஞரணி துணைஅமைப்பாளர் பாலச்சந்தர், வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தது உள்பட பல்வேறு உதவிகளை செய்ததும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செல்வக்குமார், சுந்தரபாண்டி, வினோத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 32 பவுன் நகைகள் மற்றும் ரூ.44 ஆயிரம், 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பாலச்சந்தர் மீது மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த சுப்பிரமணியபுரத்தில் கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்தும், நிவாரணம் வழங்ககோரியும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி எம்.எல்.ஏ., மெய்யநாதன் தலைமை தாங்கி பேசினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணைச்செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாரபட்சமாக நிவாரணம் வழங்கப்படுவதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் நேற்று மாலை தனியார் பேருந்து கவிழ்ந்து 30 பேர் காயமடைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் விபத்துகளை குறைப்பதற்காக அவசர கால சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75 இடங்களில் 190 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் சென்னையில் மட்டும் கடந்த 11 மாதங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக விபத்து கால சிகிச்சை இறப்பு சதவீதம் என்பது 8.5 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் மொபைல் சி.டி. ஸ்கேன் தமிழகத்தில் 15 கோடி மதிப்பில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழக சுகாதாரத்துறை உலக நாடுகள் சுகாதாரத்துறைக்கு இணையாக வளர்ந்து வருகிறது.

தி.மு.க. ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறைக்கு என எதுவுமே செய்யவில்லை. ஒரு சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. தற்போது சுகாதாரத்துறை குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருவது கண்டனத்துக்குரியது. அவருக்கு சுகாதாரத்துறை குறித்து விமர்சனம் செய்வதற்கு எந்த வித அருகதையும் கிடையாது
சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் மனதிற்கு மிகவும் வேதனை தரக்கூடிய சம்பவமாக இருந்தாலும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள். இதை வைத்து அரசியல் செய்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான்.
இவ்வாறு அவர் கூறினார். #ministervijayabaskar #mkstalin #hivblood
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே உள்ள வீரமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (45). இவரது மனைவி கலா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணேஷ் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கலா தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கலா தனது குழந்கைளுடன் வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று இரவு வீடு திரும்பினார். வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது பீரோ திறந்து கிடந்தது. அதை சோதனை செய்த போது அதில் இருந்த 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை:
பெரியாரின் 45-வது நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரியாரின் கொள்கைகளையும், சிந்தனைகளையும் அனைவரும் செயல்படுத்த வேண்டும். அவரது கொள்கைக்கு ஏற்ப மதவாத சக்தியை இன்றைக்கு ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு பகல் வேடம் போடுகிறது. கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செயல்பட்டு அணை கட்ட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட வைக்கிறார்கள்.
ஆனால் இன்றைக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை வைத்து தமிழகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாக கூறி பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளனர். பா.ஜ.க.விற்கு கர்நாடகாவிலும் வாக்கு வங்கி போகக்கூடாது. தமிழகத்திலும் வாக்கு வங்கி சிதறக் கூடாது என்ற நோக்கில் தான் மோடி மேகதாது விவகாரத்தில் பகல் வேடம் போடுகிறார்.
ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்ற தி.மு.க. வின் நிலைப்பாட்டை மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை அனைத்து கட்சிகளும் மறுக்கவில்லை. தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்து தான் வேறு கட்சிகள் பிரதமர் வேட்பாளரை யாரும் முன்மொழியவில்லை.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் இறந்தவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தான் தெரிய வருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றைக்கு கூடும் அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட், மேகதாது அணை பிரச்சினைகள் தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றமே தடையில்லை என்று கூறிய பிறகு வேண்டு மென்றே மோடியின் அனும திக்காக ஆளுநர் காத்திருக்கி றார். உடனடியாக இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.
வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். எவ்வளவுதான் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரசாரம் செய்தாலும் மக்கள் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கஜா புயல் நிவாரண பணிகளில் அரசு முழு கவனம் செலுத்தவில்லை. அரசு என்று ஒன்று இருப்பதாகவே இன்றைக்கு தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்று வழங்கக் கூடாது, நஷ்டஈடு என்று கூறி அதிக தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #mekedatuissue






