என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பூக்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • இந்த நிலையில் நாமக்கல் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் நாமக்கல் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:- மல்லிகை பூ (1 கிலோ)- ரூ.600, பச்சை முல்லை - ரூ.400, வெள்ளை முல்லை - ரூ.350, சாமந்தி - ரூ.450, கோழிக்கொண்டை ஒரு கட்டு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது என்றார்.

    • தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
    • தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 742 தலைமையாசிரியர் பணியி டங்கள் 2 ஆண்டுகளாக காலியாக இருந்து வந்தன.

    நாமக்கல்:

    தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநிலத்த லைவர் ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    வேண்டுகோள்

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 742 தலைமையாசிரியர் பணியி டங்கள் 2 ஆண்டுகளாக காலியாக இருந்து வந்தன.

    மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பணியிடங்களை உடன டியாக நிரப்ப நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கும், அமைச்ச ருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் வழக்கில் பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தர வரிசை அடிப்படையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

    கலந்தாய்வு

    அதனைத் தொடர்ந்து கடந்த 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் 742 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு 182 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 637 மூத்த முதுகலை ஆசிரியர்கள் என 819 பேர் கொண்ட முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது.

    697 பேர்

    இதில் 697 பேர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக தங்களுக்கு விருப்பமான மேல்நிலைப்பள்ளியைத் தேர்ந்தெடுத்தனர். 122 பேர் பதவி உயர்வு வேண்டாம் என்று மறுத்து விட்டனர்.

    இன்னும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13, திருவண்ணா மலை மாவட்டத்தில் 12, விழுப்புரம் மாவட்டத்தில் 6, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5, நீலகிரி மாவட்டத்தில் 5, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3, வேலூர் மாவட்டத்தில் 1 என 45 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றையும் விரைந்து நிரப்ப பள்ளிக்கல்வித் துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மூத்த முதுகலை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வில் சென்றுள்ளதால், தற்பொழுது ஏற்பட்டுள்ள 600-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு துணை பொதுமாறுதல் கலந்தாய்வையும் ஆன்லைன் வழியாக நடத்த பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நன்றி

    மேலும் 3 நாட்களாக நடைபெற்ற மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு மிகவும் வெளிப்படை தன்மையுடனும் எந்த ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணி யிடமும் மறைக்கப்படாமலும் நேர்மையாகவும் நடந்தது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கும், பள்ளி கல்வி அமைச்சருக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

    • செல்வராஜ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து சாந்தியிடம் தகராறு செய்து அவரை தாக்கி வந்துள்ளார்.
    • 2 குடிசை வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு, தானும் அதன் உள்ளே நுழைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    பரமத்திவேலூர், ஆக.21-

    நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள சேந்தமங்கலம் ஆர்.பி.புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற மணி (60). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி.

    இவர்களுக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். செல்வராஜ் மனைவி சாந்தி, தாய் பெரியம்மாவுடன் சேந்தமங்கலத்தில் வசித்து வந்தார்.

    குடித்துவிட்டு தகராறு

    இந்நிலையில் செல்வராஜ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து சாந்தியிடம் தகராறு செய்து அவரை தாக்கி வந்துள்ளார். இதனால் செல்வராஜின் தொந்தரவு தாங்க முடியாமல் சாந்தி கோபித்துக் கொண்டு வேலகவுண்டம்பட்டி அருகே பெருக்கம்பாளையத்தில் உள்ள மூத்த மகள் முத்துலட்சுமியின் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்று விட்டார்.

    இதனால் செல்வராஜ் மூத்த மகள் வீட்டிற்கு சென்று மனைவியை அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து சாந்தி அங்கிருந்து சேலத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது.

    மகள் வீட்டில் மனைவி இல்லாததால் சாந்தி எங்கே இருக்கிறார் எனக்கேட்டு மகள் முத்துலட்சுமியிடம் செல்வராஜ் பிரச்சனை செய்துள்ளார்.

    குடிசைக்கு தீ வைப்பு

    இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பெருக்கம்பாளையம் வந்த செல்வராஜ் தனது மகளுக்கு சொந்தமான பூட்டி வைக்கப்பட்டிருந்த 2 குடிசை வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு, தானும் அதன் உள்ளே நுழைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 45 சதவீத தீக்காயத்துடன் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டன்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 1800 மூட்டைகள் ரூ.1கோடியே 50லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10622 முதல்ரூ.17042 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10558 முதல் ரூ.15212 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.12199 முதல் ரூ 15022 வரையிலும் விலை போனது.மொத்தம் 1800 மூட்டைகள் ரூ.1கோடியே 50லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
    • அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரை யொருவர் தாக்கிக்கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே வையப்பமலையில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் கடையில் இருந்தபோது மல்லசமுத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவர் வந்து மது வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை சிவக்குமார் கேட்டபோது என்னிடம் பணம் இல்லை, ஏ.டி.எம். கார்டு தான் உள்ளது, மிஷினில் ஸ்வைப் செய்து பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு செந்தில்குமார் தெரிவித் துள்ளார். அதற்கு விற்பனை யாளர் ஸ்வைப்பிங் மிஷின் பழுதடைந்துள்ளதால் பணமாக கொடுக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரை யொருவர் தாக்கிக்கொண்ட னர். திடீரென செந்தில்கு மார் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து டாஸ்மாக் விற்பனையாளர் சிவக்குமார் தலையில் தாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து அவர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறி செந்தில்குமாரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வழக்குப்பதிவு

    இது குறித்த புகாரின்பேரில் எலச்சிப்பா ளையம் ேபாலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • நாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை மறு நாள் (23-ந் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள படுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை மறு நாள் (23-ந் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகர பகுதி கள், நல்லிபாளையம், கொண்டிசெட்டிபட்டி, அய்யம்பாளையம், உத்தமபாளையம், வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டி பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுபட்டி, என்.ஜி.ஓ. காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆகிய பகுதி களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

    • பரமத்தி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வழங்கப்பட்டது.
    • ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மத்திய, மாநில அரசு மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கரும்பு பயிரில் ஒரு பரு கரணை நாற்று உற்பத்தி தொழில்நுட்பம், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மத்திய, மாநில அரசு மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது. இப்பயிற்சியில் பொன்னி சர்க்கரை ஆலை கரும்பு மேலாளர் பழனிச்சாமி, கரும்பு ஆய்வாளர்கள் அல்லிமுத்து மற்றும் மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்ப உரை வழங்கினார்கள். இதில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவினா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி கோழிப் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.
    • ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் ரூ. 4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி கோழிப் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 14-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் விலை படிப்படியாக குறைந்து 450 காசுகளாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் ரூ. 4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலை இன்று அமலுக்கு வந்தது.

    கோழிவிலை

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 123 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று பல்லடத்தில் கறிகோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 5 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 123 ரூபாயில் இருந்த கறிக்கோழி விலை 118 ரூபாயாக குறைந்தது . முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக நீடிக்கிறது.

    • பரமத்திவேலூர் -கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது.
    • கடும் வெயில் காரணமாக முளைத்திருந்த புற்கள், செடி, கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் -கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. அதன் அருகே விவசாயம் செய்யப்படாமல் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் பல்வேறு வகையான மரங்களும், செடி, கொடிகளும் முளைத்துள்ளது. கடும் வெயில் காரணமாக முளைத்திருந்த புற்கள், செடி, கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் அந்த செடி, கொடிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் காரணமாக தீ வேகமாக பரவியது. அதை பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்களும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடிய வில்லை.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    • மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • வருகிற 25-ந்தேதி முதல் இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது.

    நாமக்கல்:

    அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5- ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 25-ந்தேதி முதல் இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது.

    அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 பேரூராட்சிகள் மற்றும் 15 வட்டாரத்தில் 1 முதல் 5 -ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற 25-ந்தேதி முதல் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

    மாவட்டத்தில் மொத்தம் 773 அரசு பள்ளிகளில் 32 ஆயிரத்து 467 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளன. திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை தோறும் உப்புமா வழங்கப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ேதாறும் கிச்சடி, புதன்கிழமை பொங்கல் வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து நாட்களும் காய்கறி சாம்பார் வழங்கப்பட உள்ளன. கொல்லிமலையில்உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • செந்தில்குமார் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து டாஸ்மாக் விற்பனையாளர் சிவக்குமார் தலையில் தாக்கினார்.
    • போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே வையப்பமலையில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் கடையில் இருந்தபோது மல்லசமுத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவர் வந்து மது வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை சிவக்குமார் கேட்டபோது என்னிடம் பணம் இல்லை, ஏ.டி.எம். கார்டு தான் உள்ளது, மிஷினில் ஸ்வைப் செய்து பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அதற்கு விற்பனையாளர் ஸ்வைப்பிங் மிஷின் பழுதடைந்துள்ளதால் பணமாக கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். திடீரென செந்தில்குமார் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து டாஸ்மாக் விற்பனையாளர் சிவக்குமார் தலையில் தாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவர் ராசிபுரம் அரசுஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதேபோல் தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறி செந்தில்குமாரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின்பேரில் எலச்சிப்பாளையம் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நீட் தேர்வு ரத்து செய்ய மறுக்கும் மத்தியஅரசு மற்றும், தமிழக கவர்னரை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி, மருத்துவர் அணி, மாணவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு ரத்து செய்ய மறுக்கும் மத்தியஅரசு மற்றும், தமிழக கவர்னரை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தனர். இளைஞரணி மாநில துணை செயலாளர் ஆனந்த்குமார் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் நீட்தேர்வை கொண்டு வர வேண்டும். தமிழக ஆளுநர் ரவி இடையூறாக இருக்க கூடாது என வலியுறுத்தினர்.

    போராட்டத்தில் பார் இளங்கோவன், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், துணை அமைப்பாளர் இளம்பருதி, மருத்துவர் அமைப்பாளர் தீபக்குமார் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, துணை அமைப்பாளர்கள் சுந்தர், நவலடி ராஜா , கதிர், ஜெகதீசன், மருத்துவரணி தலைவர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×