என் மலர்
நாமக்கல்
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் 2-ம் நிலை காவலர் 3 ஆயிரத்து 359 காலிபணியிடங் களில் 5 சதவீதம் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஓய்வு பெறவுள்ள படைப்பணியில் உள்ள படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு 17.09.2023-க்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
5 சதவீதம் ஒதுக்கீடு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் 2-ம் நிலை காவலர் (மாவட்ட, மாநகர ஆயுதப்படை) பெண்கள் 780 காலிபணியிடங்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 2-ம் நிலைக் காவலர் 1,819 காலிபணியிடங்கள், சிறைத்துறையில் 2-ம் நிலை சிறைக் காவலர் ஆண்கள் -83, பெண்கள் -3 காலிபணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பாளர்- 674 காலி பணியிடங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 359 காலிபணியிடங்களில் 5 சதவீதம் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் வீரர்கள்
இப்பணியிடங்களை நிரப்பிட 47 வயது மேற்படாத முன்னாள் படைவீ ரர்கள் மற்றும் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைவீரர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எனவே நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 1.7.2023 அன்று 47 வயது பூர்த்தி செய்திடாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் 1.7.2023-க்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைப்பணியில் உள்ள படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு 17.09.2023-க்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.
விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் தாங்கள் விண்ணப்பித்த விபரத்தை உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், நாமக்கல் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் “பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது-2023" அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக “பால சக்தி புரஷ்கார்” என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
புதிய கண்டுபிடிப்பு
மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் "பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது-2023" அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல்புரிந்த தனிதகுதி வாய்ந்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக "பால சக்தி புரஷ்கார்" என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகி யவற்றை கொண்டதாகும்.
குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம் போன்ற துறைகளில், குழந்தைகளுக்கான சேவை களில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக "பால கல்யாண் புரஷ்கார்" என்னும் தேசிய விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதிற்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.
விண்ணப்பம்
இவ்விருதிற்கான விண்ணப்பங்களை https://awards.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப் பித்தல் வேண்டும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணை யதளம் வழியாக சமர்ப்பிக்க கடைசி நாள் 31.08.2023 ஆகும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- சுற்றுலா பயணகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு தமிழகம்மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காட்சி முனையம், அறப்பரளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், மாசி பெரியசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்த்து மகிழ்வார்கள்.
இந்த நிலையில் இங்குள்ள மாசிலா அருவி பசுமை சுற்றுச் சூழல் திட்டத்தின் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு வனத்துறை மூலம் நடைபாதை, பொழுது போக்கு பூங்கா, உடைமாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தற்சமயம் சுற்றுலா பயணகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
விடுமுறை நாட்களில் கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ள மாசிலா அருவிக்கு சென்று குளிப்பது, செல்பி மற்றும் வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில நேரங்களில் பாறைகளில் வழுக்கி தவறி விழுந்து அடிப்படுவது போன்ற சம்பவங்களும் நடப்பது உண்டு.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த கார்த்திகைப்பட்டி பகுதியை சேர்ந்த சபாபதி மகன் குணால் (வயது 22) என்பவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 6 பேருடன் மோட்டார் சைக்கிளில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தார்.
அவர் தடைசெய்யப்பட்ட மாசிலா அருவியின் மேல் பகுதிக்கு வனப்பகுதி வழியாக சென்று குளித்துள்ளார். அப்போது குணால் குளித்துக் கொண்டே வீடியோ கால் மூலமாக தனது ஊரில் உள்ள நண்பர்களுடன் பேசியுள்ளார். அப்போது திடீரென கால் வழுக்கி அங்குள்ள 70 அடி பள்ளத்தில் விழுந்து குணால் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கல்யாணம். இவரது மகன்கள் நவீன்காந்த் (23), நிதிஷ்காந்த் (21). இருவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகின்றனர். நேற்று மதியம் இருவரும் மோட்டார் சைக்கிளில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர். அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றனர்.
அப்போது அங்கு நுழைவு வாயில் பகுதியில் இருந்து சுமார் 500 படிக்கட்டுகளை கடந்து சென்றபோது, நிதிஷ்காந்துக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நவீன்காந்த், இதுகுறித்து வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடம் வந்து நிதிஷ்காந்தை மீட்டு சேம்மேடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலைதடுமாறி கீழே விழுந்த வரதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மரூர்பட்டி அடுத்த குமாரகவுண்டனூரை சேர்ந்தவர் முனியன் மகன் வரதராஜ் (வயது 72).
மாட்டு வியாபாரியான இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பொம்மைகுட்டை மேடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் வரதராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வரதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீசார் வரதராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஜேடர்பாளையம் மணல்மேடு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் மைதீஸ்வரன் (21). கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்த முருகானந்தன் மகன் சுரேந்திரன் (23) ஆகியோர் நேற்று மோட்டார் சைக்கிளில் நாமக்கல்-பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வள்ளிபுரம் மேம்பாலம் பகுதியில் செல்லும்போது பின்னால் வந்த டாரஸ் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மைதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சுரேந்திரன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சுரேந்திரனை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனார். பின்னர் அவர் மேல்சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெங்கமேடு பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த பரமத்தி வேலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (70) என்பவரை கைது செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் அருேக உள்ள வெங்கமேடு பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த பரமத்தி வேலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (70) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 50 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூக்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
- இந்த நிலையில் நாமக்கல் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் நாமக்கல் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:- மல்லிகை பூ (1 கிலோ)- ரூ.600, பச்சை முல்லை - ரூ.400, வெள்ளை முல்லை - ரூ.350, சாமந்தி - ரூ.450, கோழிக்கொண்டை ஒரு கட்டு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது என்றார்.
- தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
- தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 742 தலைமையாசிரியர் பணியி டங்கள் 2 ஆண்டுகளாக காலியாக இருந்து வந்தன.
நாமக்கல்:
தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநிலத்த லைவர் ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
வேண்டுகோள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 742 தலைமையாசிரியர் பணியி டங்கள் 2 ஆண்டுகளாக காலியாக இருந்து வந்தன.
மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பணியிடங்களை உடன டியாக நிரப்ப நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கும், அமைச்ச ருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கில் பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தர வரிசை அடிப்படையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
கலந்தாய்வு
அதனைத் தொடர்ந்து கடந்த 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் 742 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு 182 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 637 மூத்த முதுகலை ஆசிரியர்கள் என 819 பேர் கொண்ட முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது.
697 பேர்
இதில் 697 பேர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக தங்களுக்கு விருப்பமான மேல்நிலைப்பள்ளியைத் தேர்ந்தெடுத்தனர். 122 பேர் பதவி உயர்வு வேண்டாம் என்று மறுத்து விட்டனர்.
இன்னும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13, திருவண்ணா மலை மாவட்டத்தில் 12, விழுப்புரம் மாவட்டத்தில் 6, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5, நீலகிரி மாவட்டத்தில் 5, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3, வேலூர் மாவட்டத்தில் 1 என 45 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றையும் விரைந்து நிரப்ப பள்ளிக்கல்வித் துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மூத்த முதுகலை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வில் சென்றுள்ளதால், தற்பொழுது ஏற்பட்டுள்ள 600-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு துணை பொதுமாறுதல் கலந்தாய்வையும் ஆன்லைன் வழியாக நடத்த பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி
மேலும் 3 நாட்களாக நடைபெற்ற மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு மிகவும் வெளிப்படை தன்மையுடனும் எந்த ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணி யிடமும் மறைக்கப்படாமலும் நேர்மையாகவும் நடந்தது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கும், பள்ளி கல்வி அமைச்சருக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- செல்வராஜ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து சாந்தியிடம் தகராறு செய்து அவரை தாக்கி வந்துள்ளார்.
- 2 குடிசை வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு, தானும் அதன் உள்ளே நுழைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
பரமத்திவேலூர், ஆக.21-
நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள சேந்தமங்கலம் ஆர்.பி.புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற மணி (60). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி.
இவர்களுக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். செல்வராஜ் மனைவி சாந்தி, தாய் பெரியம்மாவுடன் சேந்தமங்கலத்தில் வசித்து வந்தார்.
குடித்துவிட்டு தகராறு
இந்நிலையில் செல்வராஜ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து சாந்தியிடம் தகராறு செய்து அவரை தாக்கி வந்துள்ளார். இதனால் செல்வராஜின் தொந்தரவு தாங்க முடியாமல் சாந்தி கோபித்துக் கொண்டு வேலகவுண்டம்பட்டி அருகே பெருக்கம்பாளையத்தில் உள்ள மூத்த மகள் முத்துலட்சுமியின் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்று விட்டார்.
இதனால் செல்வராஜ் மூத்த மகள் வீட்டிற்கு சென்று மனைவியை அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து சாந்தி அங்கிருந்து சேலத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது.
மகள் வீட்டில் மனைவி இல்லாததால் சாந்தி எங்கே இருக்கிறார் எனக்கேட்டு மகள் முத்துலட்சுமியிடம் செல்வராஜ் பிரச்சனை செய்துள்ளார்.
குடிசைக்கு தீ வைப்பு
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பெருக்கம்பாளையம் வந்த செல்வராஜ் தனது மகளுக்கு சொந்தமான பூட்டி வைக்கப்பட்டிருந்த 2 குடிசை வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு, தானும் அதன் உள்ளே நுழைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 45 சதவீத தீக்காயத்துடன் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டன்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் 1800 மூட்டைகள் ரூ.1கோடியே 50லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10622 முதல்ரூ.17042 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10558 முதல் ரூ.15212 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.12199 முதல் ரூ 15022 வரையிலும் விலை போனது.மொத்தம் 1800 மூட்டைகள் ரூ.1கோடியே 50லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
- அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரை யொருவர் தாக்கிக்கொண்டனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே வையப்பமலையில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று அவர் கடையில் இருந்தபோது மல்லசமுத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவர் வந்து மது வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை சிவக்குமார் கேட்டபோது என்னிடம் பணம் இல்லை, ஏ.டி.எம். கார்டு தான் உள்ளது, மிஷினில் ஸ்வைப் செய்து பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு செந்தில்குமார் தெரிவித் துள்ளார். அதற்கு விற்பனை யாளர் ஸ்வைப்பிங் மிஷின் பழுதடைந்துள்ளதால் பணமாக கொடுக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரை யொருவர் தாக்கிக்கொண்ட னர். திடீரென செந்தில்கு மார் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து டாஸ்மாக் விற்பனையாளர் சிவக்குமார் தலையில் தாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து அவர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறி செந்தில்குமாரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்குப்பதிவு
இது குறித்த புகாரின்பேரில் எலச்சிப்பா ளையம் ேபாலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை மறு நாள் (23-ந் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள படுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை மறு நாள் (23-ந் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகர பகுதி கள், நல்லிபாளையம், கொண்டிசெட்டிபட்டி, அய்யம்பாளையம், உத்தமபாளையம், வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டி பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுபட்டி, என்.ஜி.ஓ. காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆகிய பகுதி களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
- பரமத்தி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வழங்கப்பட்டது.
- ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மத்திய, மாநில அரசு மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கரும்பு பயிரில் ஒரு பரு கரணை நாற்று உற்பத்தி தொழில்நுட்பம், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மத்திய, மாநில அரசு மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது. இப்பயிற்சியில் பொன்னி சர்க்கரை ஆலை கரும்பு மேலாளர் பழனிச்சாமி, கரும்பு ஆய்வாளர்கள் அல்லிமுத்து மற்றும் மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்ப உரை வழங்கினார்கள். இதில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவினா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.






