search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கட்டிட மேஸ்திரி பலி
    X

    நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கட்டிட மேஸ்திரி பலி

    • பொய்யேரிக்கரை சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செல்லிபாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மகன் பெரியசாமி (வயது 37). கட்டிட மேஸ்திரி. இருவருக்கு பிரேமா என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பிரேமாவுக்கு திடீரென காதில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவியை அழைத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் மோகனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக பெரியசாமி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பொய்யேரிக்கரை சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த பெரியசாமி மனைவி கண்முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி பிரேமா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×