search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lottery ticket seller arrested"

    • வெங்கமேடு பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த பரமத்தி வேலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (70) என்பவரை கைது செய்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் அருேக உள்ள வெங்கமேடு பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த பரமத்தி வேலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (70) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 50 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காளைமாடு சிலை அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சூரம்பட்டி பாரதிபுரம் யுவராஜ் (வயது 37), என்பவரை போலீசார் கைது செய்தனர். மூலப்பாளையம் பழனி குமார் என்பவர் தலைமறைவாகி விட்டார்.

    மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×