search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Minister's Breakfast Program"

    • மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • வருகிற 25-ந்தேதி முதல் இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது.

    நாமக்கல்:

    அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5- ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 25-ந்தேதி முதல் இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது.

    அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 பேரூராட்சிகள் மற்றும் 15 வட்டாரத்தில் 1 முதல் 5 -ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற 25-ந்தேதி முதல் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

    மாவட்டத்தில் மொத்தம் 773 அரசு பள்ளிகளில் 32 ஆயிரத்து 467 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளன. திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை தோறும் உப்புமா வழங்கப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ேதாறும் கிச்சடி, புதன்கிழமை பொங்கல் வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து நாட்களும் காய்கறி சாம்பார் வழங்கப்பட உள்ளன. கொல்லிமலையில்உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் வழங்கப்படுகிறது.
    • செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

    குண்டடம் :

    தமிழ்நாட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் என்.காஞ்சிபுரம் மற்றும் ஜோதியம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

    திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நகர்புறம் மற்றும் கிராமப் பகுதிகளில் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திங்கட்கிழமையன்று சேமியா உப்புமா - காய்கறி சாம்பாரும், செவ்வாய்க்கிழமை ரவா-காய்கறி கிச்சடியும், புதன்கிழமை வெண்பொங்கல்- காய்கறி சாம்பாரும், வியாழக்கிழமை சேமியா உப்புமா -காய்கறி சாம்பாரும், வெள்ளிக்கிழமை கோதுமை ரவா - காய்கறி சாம்பாரும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். 

    ×