search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 773 அரசு தொடக்கப்பள்ளிகளில்  முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
    X

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 773 அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்

    • மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • வருகிற 25-ந்தேதி முதல் இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது.

    நாமக்கல்:

    அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5- ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 25-ந்தேதி முதல் இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது.

    அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 பேரூராட்சிகள் மற்றும் 15 வட்டாரத்தில் 1 முதல் 5 -ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற 25-ந்தேதி முதல் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

    மாவட்டத்தில் மொத்தம் 773 அரசு பள்ளிகளில் 32 ஆயிரத்து 467 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளன. திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை தோறும் உப்புமா வழங்கப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ேதாறும் கிச்சடி, புதன்கிழமை பொங்கல் வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து நாட்களும் காய்கறி சாம்பார் வழங்கப்பட உள்ளன. கொல்லிமலையில்உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×