search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் தி.மு.க உண்ணாவிரத போராட்டம்
    X

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    நாமக்கல்லில் தி.மு.க உண்ணாவிரத போராட்டம்

    • நீட் தேர்வு ரத்து செய்ய மறுக்கும் மத்தியஅரசு மற்றும், தமிழக கவர்னரை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி, மருத்துவர் அணி, மாணவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு ரத்து செய்ய மறுக்கும் மத்தியஅரசு மற்றும், தமிழக கவர்னரை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தனர். இளைஞரணி மாநில துணை செயலாளர் ஆனந்த்குமார் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் நீட்தேர்வை கொண்டு வர வேண்டும். தமிழக ஆளுநர் ரவி இடையூறாக இருக்க கூடாது என வலியுறுத்தினர்.

    போராட்டத்தில் பார் இளங்கோவன், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், துணை அமைப்பாளர் இளம்பருதி, மருத்துவர் அமைப்பாளர் தீபக்குமார் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, துணை அமைப்பாளர்கள் சுந்தர், நவலடி ராஜா , கதிர், ஜெகதீசன், மருத்துவரணி தலைவர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×