என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வண்ண மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
    • இப்பயிற்சிக்கு முதலில் பதிவு செய்யும் 28 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். குறைந்தது 10-ம் வகுப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவாது:-

    நாமக்கல் மோகனூர் ரோட்டில் கால்நடை மருத்து வக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வண்ண மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

    இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், முதுநிலை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம்.

    இதேபோல் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இம்மாத இறுதியில் கிராமப்புற இளைஞர்களுக்கான எதிர் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சானக் கொல்லிகள் உற்பத்தி செய்தல் பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி அட்மா திட்டத்தின் நிதியுதவியுடன் 6 நாட்கள் இலவசமாக நடைபெற உள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமப்புற இளைஞர்களுக்கும் இப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு முதலில் பதிவு செய்யும் 28 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். குறைந்தது 10-ம் வகுப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    மேற்கண்ட பயிற்சிகளில் கலந்துகொள்ள விரும்பு பவர்கள் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி எண்களை தொடர்புகொண்டோ முன்பதிவு செய்து கொள்ள லாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • சம்பளம் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. ஊதியக் குழு அறிவிக்கும் சம்பளத்தையும் மாநில அரசு அறிவிப்பதில்லை.
    • அமைச்சுப் பணியாளர்களுக்கு 1992 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சம்பளத்தை விட கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது.

    நாமக்கல்:

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் தொழில் நுட்ப பணியாளர்கள் (கல்லூரி ஆய்வக உதவியாளர்கள்) மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும் என மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோது உறுதியளித்தார். அந்த சம்பளம் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. ஊதியக் குழு அறிவிக்கும் சம்பளத்தையும் மாநில அரசு அறிவிப்பதில்லை.

    ஆனால் அமைச்சுப் பணியாளர்களுக்கு 1992 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சம்பளத்தை விட கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது. அதே நேரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களையும், ஆய்வக உதவியாளர்களையும் அரசு அலட்சியப்படுத்துகிறது.

    தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு கல்லூரி ஆய்வக உதவியாளர்களுக்கு, அரசுப் பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • பிரீத்தி சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
    • திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடிப்படியில் அமர்ந்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரியோடு பாலசுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பிரீத்தி (27).

    இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பா ளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 1/2 வருடங்களாக நர்சாக பணியாற்றி வந்தார். இவர் சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பால்காரர் அழைத்தபோது பால் வாங்குவதற்காக பிரீத்தி மாடியில் இருந்து இறங்கி வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடிப்படியில் அமர்ந்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரீத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிரீத்தியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் பிரீத்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகு றித்து பிரீத்தியின் சகோதரர் ராதா (51) நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பார்த்தசாரதி வீட்டில் சிலிண்டரை தனியார் கியாஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் என்பவர் மாற்றி உள்ளார்.
    • தீ விபத்தில் தனலட்சுமி, அருண்குமார் ஆகிய இருவரும் உடல் கருகி படுகாயம் அடைந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள நரசிம்மர் சன்னதி தெருவில் கோபால்சாமி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது.

    இதில் ஒரு வீட்டில் தனலட்சுமி (வயது 62) என்பவரும் மற்றொரு வீட்டில் பார்த்தசாரதி (70) என்பவரும் வசித்து வந்தனர். இவர்கள் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஊழியராக பணியாற்றி வந்தனர்.

    இன்று காலை பார்த்தசாரதி வீட்டில் சிலிண்டரை தனியார் கியாஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் என்பவர் மாற்றி உள்ளார்.

    அப்போது பக்கத்து வீட்டில் இருந்த தனலட்சமி தனது வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரில் கியாஸ் கசிவு இருப்பதாக கூறி சோதனை செய்து பார்க்கும்படி கூறியுள்ளார்.

    இதையடுத்து அருண்குமார் சமையல் அறைக்கு சென்று கியாஸ் கசிவு ஏற்பட்ட சிலிண்டரை மாற்ற முயற்சி செய்தார். அருகில் தனலட்சுமி நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அதிகமாக கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் கொளுந்து வீட்டு எரிந்தது. கதவு, ஜன்னல், துணிகள் அனைத்தும் எரிந்தது.

    இந்த தீ விபத்தில் தனலட்சுமி, அருண்குமார் ஆகிய இருவரும் உடல் கருகி படுகாயம் அடைந்தனர்.

    தனலட்சுமியின் வீட்டில் பிடித்த தீ மளமளவென பக்கத்து வீட்டை சேர்ந்த பார்த்தசாரதி வீட்டில் பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இதில் பார்த்தசாரதியும் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    வீட்டிற்குள் தீயில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த தனலட்சுமி, கியாஸ் நிறுவன ஊழியர் அருண்குமார், பார்த்தசாரதி மற்றும் இவரது மனைவி லதா ஆகியோரை மீட்டு போலீசார் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தனலட்சுமி, பார்த்தசாரதி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். அருண்குமார், லதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தீ பிடித்த வீட்டின் அருகே யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கம்பர் விருது வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி நாமக்கல் நளா ஓட்டலில் நடைபெறுகிறது.
    • கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் கம்பர் விருது வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி நாமக்கல் நளா ஓட்டலில் நடைபெறுகிறது. கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார். செயலாளர் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் வரவேற்கிறார். நிர்வாகிகள் நல்லுசாமி, கோபால், சரவணன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    தமிழிசை சவுந்தரராஜன்

    புதுச்சேரி, தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மதுரை பேராசிரியர் சுந்தரத்துக்கு கம்பர் விருதும், பெங்களூரு ராமசாமிக்கு கம்பர் மாமணி விருதும் வழங்கப்படுகிறது.

    என்.பி.எஸ்.சுந்தராஜன், டாக்டர். ராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சார்பில் கல்லாதது கம்பன் அளவு என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து ராசிபுரம் பரமேஸ்வரனுக்கு நற்றமிழ் நாயகர் விருதும், கந்தசாமிக்கு சமூக ஆர்வலர் விருதும், இயற்கை விவசாயி கண்ணகிக்கு வேளாண் வித்தகர் விருதும், கிருஷ்ணமூர்த்திக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது.

    வரும் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடுவர் ராஜா தலைமையில் இலங்கை வேந்தன் ராவணனின் வீழ்ச்சிக்கு காரணம் முடிவில்லா ஆனவமா, முறையற்ற காமமா என்ற தலைப்பி ல் பட்டி மன்றம் நடக்கிறது.

    அதில் ராஜ பாளையம் ராஜ்கு மார், திருச்சி மாது, மதுரை ரேவதி சுப்புலட்சுமி, சென்னை பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் கம்பன் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    • நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அதிவேக மாக வந்த கார் பழனி மீது மோதியது.
    • இதில் பழனிக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 65). கூலிதொழிலாளி.

    விபத்தில் பலி

    இவர் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பரமத்திவேலூர்- நாமக்கல் செல்லும் சாலையை கடந்த போது நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அதிவேக மாக வந்த கார் பழனி மீது மோதியது. இதில் பழனிக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பழனியை பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனி பரிதாபமாக இறந்தார்.

    டிரைவர் ஓட்டம்

    விபத்து ஏற்பட்டதும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து காரை பறிமுதல் செய்து டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றார்.

    • விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.
    • பரமத்தி வேலூரில் கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். இந்த வெற்றிலைகளை பறித்து உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் , பாண்டமங்கலம் ெபாத்தனூர், பரமத்திவேலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்தி வேலூரில் கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.5000-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் சுமை ஒன்று ரூ.5000-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.3,500-க்கும் ஏலத்தில் எடுத்து சென்றனர்.

    நேற்று முன்தினம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.1,500-க்கும் ஏலம் போனது. நடப்பு மாதத்தில் அதிக அளவில் கோவில் திருவிழா மற்றும் திருமண விசேஷங்கள் நடைபெறாததால் வெற்றிலை தேவை குறைந்து வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • அம்மன்நகர் பகு தியில் செல்லும் ஓடையின் குறுக்கே மழை நீரை சேமிக்க வைக்கும் வகையில் ஒரிரு மாதங்களுக்கு முன்பு ரூ 15 லட்சத்தில் தடுப்பணை கடப்பட்டது.
    • தொடர்ந்து மழை பெய்தத தால் ஓடையின் வழியாக தடுப்பணை நீர்தேக்கம் பகுதிக்கு மழை நீர் வந்து சேர்ந்தது. தற்போது முழு மையாக நிரம்பி விட்டது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் அருகே வெப்படை அடுத்த சவுதா புரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அம்மன்நகர் பகு தியில் செல்லும் ஓடையின் குறுக்கே மழை நீரை சேமிக்க வைக்கும் வகையில் ஒரிரு மாதங்களுக்கு முன்பு ரூ 15 லட்சத்தில் தடுப்பணை கடப்பட்டது.

    கடந்த சில வாரமாக தொடர்ந்து மழை பெய்தத தால் ஓடையின் வழியாக தடுப்பணை நீர்தேக்கம் பகுதிக்கு மழை நீர் வந்து சேர்ந்தது. தற்போது முழு மையாக நிரம்பி விட்டது. நிரம்பி தடுப்பணை நீர் தேக்கத்தை பார்த்தால் கடல் போல காணப்படுகிறது. கொடிவேரி போல தடுப்பணை வழியாக தண்ணீர் செல்கிறது.

    கடந்த சில நாட்களாக தொடர் விடுமுறை என்ப தால், சுற்று வட்டாரத்தைv சேர்ந்த ஏராளமான பொது மக்கள், சிறுவர்கள தடுப்ப ணையில் உற்சாகமாக குளித்தனர். தற்போது இந்த தடுப்பணை நீர் தேக்கம், அந்த பகுதியின் பொழுது போக்கு இடமாக மாறியுள்ளது.

    • காரை ஓட்டி பழகிவிட்டு மீண்டும் தோட்டத்தில் காரை நிறுத்த ராஜேந்திரன் முயன்றுள்ளார்.
    • ராஜேந்திரன் நீச்சல் தெரியாததால் காருடன் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    சேந்தமங்கலம்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பெரியகுளம் பஞ்சாயத்து திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (50). இவருக்கு சொந்தமாக விவசாய தோட்டம் உள்ளது.

    சண்முகத்தின் தோட்டத்தை கொல்லிமலை வளப்பூர்நாடு பஞ்சாயத்து புளியம்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (50) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு கலைமணி என்ற மனைவியும், கோபி (23) என்ற மகன், மாலனி என்ற மகளும் உள்ளனர்.

    ராஜேந்திரன் கார் ஓட்ட ஆசைப்பட்டதால் தனது மகன் கோபியிடம் கார் ஓட்டி பழகி வந்தார். நேற்று மாலை தனது உறவினரின் காரை ஓட்டி கற்றுக்கொள்ள மகன் கோபியுடன் ராஜேந்திரன் சென்றார்.

    காரை ஓட்டி பழகிவிட்டு மீண்டும் தோட்டத்தில் காரை நிறுத்த ராஜேந்திரன் முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரில் இருந்த 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றுக்குள் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு பாய்ந்தது.

    சுதாரித்துக் கொண்ட கோபி கார் கண்ணாடியை உடைத்து வெளியே வந்து உயிர் தப்பினார். ராஜேந்திரன் நீச்சல் தெரியாததால் காருடன் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 5 மணிநேரம் போராடி கிரேன் எந்திரத்தின் உதவியுடன் கார் மற்றும் ராஜேந்திரனை மீட்டனர்.

    சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. தனராசு தலைமையில் சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராசன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா உள்ளிட்ட போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் வந்தனர். விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • காந்திஜெயந்தியை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
    • மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் திருநந்தன் உத்தரவின் பேரில் 60 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாமக்கல்:

    காந்திஜெயந்தியை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    ஆய்வு

    காந்திஜெயந்தியை முன்னிட்டு இவ்விதிமுறைகள் முைறயாக பின்பற்றப்படுகிறதா? என்பது தொடர்பாக நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் திருநந்தன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதன்படி ஓட்டல்கள், வாகன பழுது பார்க்கும் பட்டறைகள், கடைகள் உள்ளிட்ட மொத்தம் 82 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 60 நிறுவனத்தினர் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் திருநந்தன் உத்தரவின் பேரில் 60 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • நாமக்கல் பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரின் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஜெகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் 15 பேருடன் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளிப்பதற்காக வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 32).

    இவர் நாமக்கல் பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரின் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    தடுப்பணையில் குளித்தார்

    இந்த நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஜெகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் 15 பேருடன் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளிப்பதற்காக வந்தனர். அப்போது அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

    ஜெகநாதன் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜெகநாதன் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் பரிசல், படகு மூலமாக ஜெகநாதனை வெகு நேரமாக தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இரவு நேரமாகி விட்டதால் தேடுதல் பணியை நிறுத்தினர்.

    2-வது நாளாக...

    இதையடுத்து 2-வது நாளாக இன்று காலை முதல் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் பரிசல், மீன்பிடி படகுகள் பயன்படுத்தி ஜெகநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆற்றில் மூழ்கிய அவரது கதி என்ன? என தெரியாமல் உறவினர்கள் ேசாகத்தில் மூழ்கியுள்ளனர்.

    மேலும் இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்தி பழைய கோர்ட்டு அருகே ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ரவிக்குமார் (வயது 50) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    பரமத்திவேலுார்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி பழைய கோர்ட்டு அருகே ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் பரமத்தி போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பரமத்தி பழைய கோர்ட்டு வீதி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 50) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 205 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஒருவர் கைது

    அதேபோல் பிலிக்கல்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மது பாட்டில்களை விற்பனை செய்த வள்ளியம்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த பழனி (55) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×