search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே மது விற்ற 2 பேர் கைது
    X

    பரமத்திவேலூர் அருகே மது விற்ற 2 பேர் கைது

    • பரமத்தி பழைய கோர்ட்டு அருகே ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ரவிக்குமார் (வயது 50) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    பரமத்திவேலுார்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி பழைய கோர்ட்டு அருகே ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் பரமத்தி போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பரமத்தி பழைய கோர்ட்டு வீதி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 50) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 205 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஒருவர் கைது

    அதேபோல் பிலிக்கல்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மது பாட்டில்களை விற்பனை செய்த வள்ளியம்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த பழனி (55) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×