search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pay"

    • சம்பளம் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. ஊதியக் குழு அறிவிக்கும் சம்பளத்தையும் மாநில அரசு அறிவிப்பதில்லை.
    • அமைச்சுப் பணியாளர்களுக்கு 1992 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சம்பளத்தை விட கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது.

    நாமக்கல்:

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் தொழில் நுட்ப பணியாளர்கள் (கல்லூரி ஆய்வக உதவியாளர்கள்) மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும் என மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோது உறுதியளித்தார். அந்த சம்பளம் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. ஊதியக் குழு அறிவிக்கும் சம்பளத்தையும் மாநில அரசு அறிவிப்பதில்லை.

    ஆனால் அமைச்சுப் பணியாளர்களுக்கு 1992 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சம்பளத்தை விட கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது. அதே நேரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களையும், ஆய்வக உதவியாளர்களையும் அரசு அலட்சியப்படுத்துகிறது.

    தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு கல்லூரி ஆய்வக உதவியாளர்களுக்கு, அரசுப் பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • மாதத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை பணி இருக்கும்.
    • எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் தற்காலிக மாவட்ட வள நபர் (பண்ணை சாரா) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதற்கு இளங்கலை பட்டபடிப்பு - ரூரல் டெவலப்மண்ட், சமூக வேலை, பிஸ்னஸ் மேனேஜ்மண்ட் மற்றும் முதுகலை பட்டபடிப்பு- பிஸ்னஸ் மேனேஜ்மண்ட் கல்வி தகுதியாகும்.

    தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதன்மை பணி கிராமப்புறங்களில் இருப்பதால், தமிழில் நல்ல வாய்மொழி மற்றும் எழுத்து தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் அலுவலக நடைமுறைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆங்கில அறிவு இருத்தல் அவசியம்

    கணினி இயக்குவதில் போதுமான அறிவு இருத்தல் அவசியம். 10 அல்லது அதற்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு தினமும் ரூ.3500 ஊதியமும், 6 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களுக்கு தினமும் ரூ.2500, 2 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.2500 ஊதியமும் வழங்கப்படும்.

    மாதத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை பணி இருக்கும்.

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 2-ந் தேதி ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி- இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், எண்.223, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தஞ்சாவூர்-613010.

    மேற்குறிப்பிட்டுள்ள தற்காலிக காலிபணியிடத்திற்கு மாவட்ட தேர்வுக்குழு வாயிலாக எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும்.

    தகுதிவாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியல் சென்னை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்படும்.

    உரிய காலத்திற்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சையில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 825 கடைகள் திறக்கப்படவில்லை. 72 கடைகள் மட்டுமே திறக்கபட்டது.

    தஞ்சாவூர்:

    பொது வினியோக திட்டத்திற்காக தனித்துறையை உருவாக்க வேண்டும். 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை, நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

    ஒரே மாதிரியான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சரியான எடையில் தரமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும்.

    மாத இறுதி தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் 4 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தஞ்சை பாலாஜி நகரில் உள்ள மண்டல இணைபதிவாளர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேப்போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில துணை தலைவர் ராமலிங்கம் கூறும்போது:-

    தஞ்சை மாவட்டத்தில் 1,184 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் இன்று 897 கடைகள் திறந்திருக்க வேண்டும். ஆனால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 825 கடைகள் திறக்கப்படவில்லை. 72 கடைகள் மட்டுமே திறக்கபட்டது என்றார்.

    ரேஷன் கடை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

    பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி வேளாங்கண்ணியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கலைந்து சென்றனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நாகைமாலி, தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் பூவைமுருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கடந்த 2016-2017-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியபோக்கை கண்டித்தும், காப்பீடு தொகை வழங்காத கொளப்பாடு கூட்டுறவு கடன் சங்கத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதுகுறித்து தகவலறிந்த நாகை நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவன அலுவலர் தினேஷ், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வருகிற ஜூன் மாதம் 15-ந்தேதிக்குள் விடுப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். 

    இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த முத்துபெருமாள், ஜீவானந்தம், வரதன் உள்பட விவசாயிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். 
    ×