search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி ஆய்வக உதவியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்க வலியுறுத்தல்
    X

    கல்லூரி ஆய்வக உதவியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்க வலியுறுத்தல்

    • சம்பளம் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. ஊதியக் குழு அறிவிக்கும் சம்பளத்தையும் மாநில அரசு அறிவிப்பதில்லை.
    • அமைச்சுப் பணியாளர்களுக்கு 1992 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சம்பளத்தை விட கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது.

    நாமக்கல்:

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் தொழில் நுட்ப பணியாளர்கள் (கல்லூரி ஆய்வக உதவியாளர்கள்) மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும் என மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோது உறுதியளித்தார். அந்த சம்பளம் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. ஊதியக் குழு அறிவிக்கும் சம்பளத்தையும் மாநில அரசு அறிவிப்பதில்லை.

    ஆனால் அமைச்சுப் பணியாளர்களுக்கு 1992 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சம்பளத்தை விட கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது. அதே நேரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களையும், ஆய்வக உதவியாளர்களையும் அரசு அலட்சியப்படுத்துகிறது.

    தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு கல்லூரி ஆய்வக உதவியாளர்களுக்கு, அரசுப் பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×