என் மலர்
நாமக்கல்
- நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
- இன்று மாலை யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது.
நாமக்கல்:
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து கோவில் அருகில் யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
யாக சாைல பூஜை
இன்று மாலை யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது. ஆச்சார்ய அழைப்பு, இறைவனிடம் அனுமதி பெறுதல், வருண தீர்த்தம் புனிதப்படுத்தி வேள்வி சாலையை சுத்தப்படுத்துதல், திருமண் பரிசோதித்து எழுந்தருளல், திருமுலை இடுதல், பாலிகை தெளித்தல், அக்னி பகவானை கடைந்து எடுத்தல், ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி தொடங்கப்படுகிறது.
கும்ப பூஜை (கலசபூஜை) திருமாண்பு ஈர்ப்பு செய்தல், கலசத்தில் இறைவனை அமரச்செய்தல், ஐப்பெரும் பூதங்களின் வேள்வி வளர்த்தல் ஆகியவை நடக்கிறது. பின்னர் அனுதின பெருவேள்வி, வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய ப்ரபந்த சமர்ப்பணம், செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்
நாளை (31-ந்தேதி) காலை 8 மணி முதல் 12. 30 மணிக்குள் வருண தீர்த்தம் புனித படுத்துதல், அக்னி பகவான் பூஜை, ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய ப்ரபந்த வேள்வி, அனுதின ெபருவிழா மற்றும் அஷ்ட பந்தன மருத்து சாற்றுதல் நடக்கிறது.
தொடர்ந்து பிம்ப வாஸ்து, மகாசாந்தி வேள்வியை நிறைவு செய்தல் ஆகியவை நடக்கிறது.
கும்பாபிேஷகம்
நாளை மறுநாள் (1-ந்தேதி) காலை 7.15 மணிக்கு வருண தீர்த்தம், புனித படுத்துதல் ஆகியவை நடக்கிறது. பின்னர் காலை 10 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகமே மின்ஒளியில் ஜொலிக்கிறது. மேலும் கோவிலில் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ேபாடப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாமக்கல் நகரமே திருவிழா போல் களை கட்டியுள்ளது.
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம். எல்.ஏ.க்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், டாக்டர் மல்லிகை செல்வா, சீராளன், ரமேஷ் பாபு, அறநிலைய துறை உதவி ஆணையாளர் இளையராஜா, கண்காணிப்பாளர் அம்சா உள்ளிட்டோர் செய்து வருகின்றன.நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
- காவிரி ஆற்றின் மேல் உள்ள பாலம் அடுத்த இடத்தில் சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் நிலை தடுமாறி டிவைடரில் மோதி நின்றது தெரியவந்தது.
- சேலம் - கோவை புறவழிச்சாலையில் நேற்று மாலை வாகனங்கள் செல்ல முடியாதபடி நீண்ட வரிசையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலையில் நேற்று மாலை வாகனங்கள் செல்ல முடியாதபடி நீண்ட வரிசையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது. மேலும் விடுமுறை நாள் என்பதால் நேரம் ஆக ஆக வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து குமாரபாளையம் போக்குவரத்து போலீசார் நேரில் சென்று பார்த்த போது காவிரி ஆற்றின் மேல் உள்ள பாலம் அடுத்த இடத்தில் சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் நிலை தடுமாறி டிவைடரில் மோதி நின்றது தெரியவந்தது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
இதையடுத்து போக்குவரத்து போலீசார் பஸ்சை மீட்டு மற்ற வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இந்த விபத்தால் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.,
- தனது மொபட்டில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார்.
- கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் கலா சென்ற மொபட் மீது மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கலா (வயது 55). இவர் கூலி வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று மதியம் கீரம்பூரில் இருந்து குஞ்சாம்பாளையம் செல்வதற்காக தனது மொபட்டில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார். அப்போது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் கலா சென்ற மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கலாவை அவ்வழியாக வந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கலா வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து பற்றி பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு முதல்-அமைச்சர் கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட ஆணை பிறப்பித்து உள்ளார்.
- முகாம்கள் இந்த மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் நிறைவு பெற உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப்பெறாத கிராமங்களில் கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட ஆணை பிறப்பித்து உள்ளார்.
அதன்படி 2023-24-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 20 முகாம்கள் வீதம் 300 முகாம்கள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
முகாம்கள் இந்த மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இம்முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும்.
நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கிராமங்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது.
முகாம்கள் நடத்தப்படும் நாள் மற்றும் இடம் அந்தந்த கால்நடை உதவி மருத்து வர்களால் அறிவிக்கப்படும். அந்த நாளில் கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகளை அழைத்து சென்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- தற்போது இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது.
ராசிபுரம்:
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டம் 91-வது தொகுதியாக ராசிபுரத்தில் நடைபயணம் மேற்கொண்டார்.
ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே தொடங்கிய யாத்திரையானது நகரின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற்று புதிய பஸ் நிலையம் சென்றடைந்தது.
பின்னர் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்று பேசினார். பா.ஜ.க. மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் வரவேற்றார். மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, நரேந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை பேசியதாவது:-
ஆட்சி தத்தளிக்கிறது
கடந்த தேர்தலில் 511 வாக்குறுதிகளை கொடுத்த தி.மு.க., கடந்த 30 மாதத்தில் 20 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பலை போல தி.மு.க. ஆட்சி தத்தளிக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவில் 3-வது அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. ரூ.5½ லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது ரூ.7 லட்சத்து 53 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒவ்வொருவர் தலையிலும் ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது.
இப்போது இருந்து கடனை வாங்காமல் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த ஆரம்பித்தாலும் அதை அடைக்க 35 ஆண்டுகளாகும். ஆனால் கடன் வாங்காமல் அரசை இயக்க முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது.
எதிர்காலம் பாதிப்பு
டாஸ்மாக்கால் இளை ஞர்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. அரசுக்கு டாஸ்மாக் மூலம் ரூ.44 ஆயிரம் கோடி ஆண்டு வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானம் ரூ.50 ஆயிரம் கோடியாக உயரும். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை 3-வது முறையாக ஆட்சியில் அமர வைக்கவும் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவும் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
பல்லடத்தில் 4 பேர் வெட்டி கொல்லப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் அரசு நஷ்டஈடு வழங்குகிறது. அதை வாங்குவதற்கு கூட அங்கு ஆள் இல்லை. ஆனால் கள்ளச்சாராயத்தை குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்கிறார்கள். இதுபோன்ற ஆட்சியை இந்திய துணை கண்டத்தில் பார்த்ததில்லை. ராசிபுரம் நெய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க தேவையான முயற்சியை எடுப்போம்.
மருத்துவ கல்லூரிகள்
நீட் வந்தால் தி.மு.க.வினரின் கல்லூரிகளில் கேபிடேஷன் வைத்து சீட் விற்க முடியாது. தமிழகத்தில் தி.மு.க. தற்போது 6-வது முறையாக ஆட்சி செய்கிறது. இதுவரை அவர்கள் 5 அரசு கல்லூரிகளை மட்டுமே தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
பிரதமர் மோடி ஒரே முறையில் 11 மருத்துவ கல்லூரி களை தமிழகத்தில் கொண்டு வந்துள்ளார். ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளை அதிக அளவில் கொண்டு வந்துள்ளனர். இதில் இருந்தே அவர்களின் நீட்டுக்கான எதிர்ப்பு புரியும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
முடிவில் ராசிபுரம் நகர தலைவர் வேலு நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் சேதுராமன், வெளிநாடு வாழும் தமிழர் பிரிவு நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 50 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த அரசு சார்பில் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டு செயல்படுகிறது.
- பல்வேறு மக்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்திலே பேசி அவற்றை நிறைவேற்றுகின்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றேன்.
திருச்செங்கோடு:
தமிழகம் முழுவதும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின்போது பொதுமக்களை சந்தித்து பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுகிறார். குறிப்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் மாலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சட்டமன்ற உரைகளை பற்றியும், தொகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் விமர்சித்து இருந்தார்.
இதற்கு பதிலளித்து ஈஸ்வரன் எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 30 மாதங்களில் பலமுறை நான் சட்டமன்றத்திலே பேசியிருக்கிறேன். திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைப்பதை பற்றி சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். ரோப் கார் என்பது சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டு திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைக்க முடியுமா என்பதை ஒரு குழு ஆய்வு செய்து சாத்தியக்கூறு இல்லை என்பதை அறிவித்த பின் இந்து சமய அறநிலையத்துறை மாற்று சாலையை அமைப்பதற்கு நெடுஞ்சாலை துறையிடம் கருத்துரு அனுப்பி இருக்கிறது. இது நெடுஞ்சாலைத்துறை ஆய்வில் தற்போது இருக்கிறது.
50 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த அரசு சார்பில் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டு செயல்படுகிறது. திருச்செங்கோடு புறவழிச்சாலை 50 சதவீதம் முடிக்கப்பட்டு மீதி பகுதிகளுக்கு ஒப்பந்ததாரர் பணிகளை தொடங்க இருக்கிறார். 9 கோடி ரூபாய் செலவில் வாரச்சந்தை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 5 கோடி ரூபாய் செலவில் தினசரி சந்தை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 17 வழித்தடங்களில் புதிதாக பஸ்கள் விடப்பட்டு இருக்கின்றன.
இன்னும் பல்வேறு பணிகள் தொகுதி முழுவதும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இன்னும் பல்வேறு மக்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்திலே பேசி அவற்றை நிறைவேற்றுகின்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றேன்.
எதுவுமே தெரியாமல் திருச்செங்கோட்டிலே வந்து பொய்யான கருத்துக்களை பேசி இருப்பது நியாயமா? என்னுடைய செயல்பாடுகளை கேள்வி கேட்க ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை இருக்கிறது. அதே சமயம் பதில் சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது.
என்னுடைய சட்டமன்ற உரைகளைப் பற்றியும் சட்டமன்ற உறுப்பினராக என் செயல்பாடுகள் பற்றியும் அண்ணாமலை என்னோடு விவாதிக்க தயாரா? தேதியையும், நேரமும், இடமும் குறிப்பிடுங்கள் விவாதத்திற்கு நான் தயார்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- இப்பகுதியில் உள்ள 52 கிராமங்கள் ஜேடர்பா ளையம் போலீஸ் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ளது.
- இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இப்பகு தியில் விவசாயம், நெசவு பட்டு தொழிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் அணைக்கட்டில் அண்ணா பூங்கா உள்ளது. இப்பகுதியில் உள்ள 52 கிராமங்கள் ஜேடர்பா ளையம் போலீஸ் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடம் நீண்ட வருடங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது வரை பரமத்தி போலீஸ் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் ஜேடர்பாளையம் பொறுப்பு பதவியில் உள்ளார்.
இளம்பெண் கொலை
ஜேடர்பாளையம் அருகே கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜேடர்பாளையத்தில் தீ வைப்பு சம்பவம், மரங்கள் வெட்டி சாய்ப்பு சம்பவம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2,000 க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் மற்றும் பாக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர். தொடர்ந்து இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டரை நேரில் சந்திக்க 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பரமத்திக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
கோரிக்கை
மேலும் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமதி, கையெ ழுத்துக்காகவும் காத்திருக்கும் எப்.ஐ.ஆர். மற்றும் இதர கோப்புகள் கால தாமதமாக ஆகிறது. இதனால் நேர விரையம் ஆகின்றது. ஆகவே ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு நிரந்தர போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் என 52 கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
போலீஸ் சூப்பிரண்டு உறுதி
இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனிடம் கேட்டபோது, கடந்த காலங்களில் ஜேடர்பாளையம் அமைதியான ஏரியாவாக இருந்தது. மேலும் ஜேடர்பாளையம் சிறிய ஏரியாவாகவும் உள்ளது. அங்கு அதிக குற்றங்கள் பதிவாகவில்லை. தற்போது கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட அசம்பாவிதங்களால் இத்தகைய சூழ்நிலை உள்ளது. வரும் காலங்களில் அரசு உத்தரவுபடி தற்போது உள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்ட ராக பதவி உயர்வு ஏற்படும்போது ஜேடர்பாளையத்திற்கு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்க வாய்ப்பு உள்ளது என கூறினார்.
- ழந்தைவேல் (வயது 55). இவரது மனைவி வளர்மதி (48). இருவரும் தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தனர்.
- அதிவேகமாக ஓட்டி வந்து மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் குழந்தைவேல் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.
பரமத்திவேலூர்:
ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 55). இவரது மனைவி வளர்மதி (48). இருவரும் தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் தனது வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள அவர்களது உறவினர் வீடு கிரகப்பிர வேசத்திற்கு செல்வதற்காக திருச்செங்கோடு வந்து அங்கிருந்து பரமத்தி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
லாரி மோதியது
அப்போது நல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது குமாரபாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் (34) என்பவர் லாரியை அதிவேகமாக ஓட்டி வந்து மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் குழந்தைவேல் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். இதில் குழந்தைவேலுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல் அவரது மனைவி வளர்மதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
பரிதாபமாக இறந்தார்
அதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது குழந்தைவேல் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். சிறிது நேரத்திலேயே மனைவி கண் முன்னே அவர் பரிதாபமாக இறந்தார்.
வளர்மதியை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டிைரவர் கைது
இது குறித்து குழந்தைவேலின் மகன் கவுதம் கொடுத்த புகாரின்பேரில் நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் லாரி டிரைவர் ரவிக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
- ஓவிய ஆசிரியரை கண்டித்து திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
ஓவிய ஆசிரியர்
இந்த பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
இதுபற்றி ெதரிய வந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டனர். பின்னர் அவர்கள் ஓவிய ஆசிரியரை கண்டித்து திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போலீசுக்கு தகவல்
இதுபற்றி தெரிய வந்ததும் நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி சுமன், மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தனராசு, முத்து கிருஷ்ணன், மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
வாக்குவாதம்
பொதுமக்கள் சமசரம் அடையாமல் ஆசிரியர் ராமமூர்த்தியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வாக்கு வாதம் செய்தனர். இந்த நிலையில் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை ஒரு அறையில் இருந்து வெளியே கொண்டு வர முயன்றனர்.
கைது
இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி னர். பின்னர் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் கேட்டு கொண்டனர். பின்னர் வகுப்பறைக்குள் இருந்த ஆசிரியர் ராமமூர்த்தியை இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து அழைத்து சென்றனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் ஆசிரியர் ராமமூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை சஸ்பெண்டு செய்யவும் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- மாரிமுத்து (வயது 36). இவர் அந்த பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- கணவன்- மனைவி இடையே தொடர்ந்து குடும்ப பிரச்சினை இருந்து வந்ததன் காரணமாக மனைவி அவரிடம் இருந்து பிரிந்து தனியாக சென்று விட்டார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவர் அந்த பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கணவன்- மனைவி இடையே தொடர்ந்து குடும்ப பிரச்சினை இருந்து வந்ததன் காரணமாக மனைவி அவரிடம் இருந்து பிரிந்து தனியாக சென்று விட்டார்.
தற்கொலை
இந்த நிலையில் மாரிமுத்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது . ஏற்கனவே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் இருந்த மாரிமுத்து நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாரிமுத்து தற்கொலையில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு பரமேஸ்வரருக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து தயார் செய்யப்பட்ட சாதத்தை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் முழுகும் அளவிற்கு அன்னத்தை சாத்தினார்கள். பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு பரமேஸ்வரருக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தயார் செய்யப்பட்ட சாதத்தை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் முழுகும் அளவிற்கு அன்னத்தை சாத்தினார்கள். பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பரமேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சியளித்தனர். அதனை தொடர்ந்து பரமேஸ் வரர் திருமேனியில் உள்ள அன்னத்தை எடுத்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப் பட்டது.
மீதமுள்ள சாதத்தை அருகிலுள்ள காவிரி ஆறு மற்றும் நீர் நிலை களுக்கு கொண்டு சென்று நீர் நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கு உணவாக வழங்கினார்கள். அன்னாபிஷேக விழா வில் கலந்து கொண்டு இறைவனை வழிபடுபவர் களுக்கு வாழ்வில் வறுமை நீங்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
அதே போல் பாண்ட மங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பழைய காசிவிஸ் வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரர், வேலூர் செட்டியார் தெருவில் உள்ள எல்லையம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரர், வல்லப விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள பானலிங்கேஸ்வரர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனி யாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள மருந்தீ ஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிவபெரு மான் அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
வாழப்பாடி
சேலம் மாவட்டம் வாழப் பாடி அருகே உள்ள பேளூர் தான்தோன்றீஸ்வரர், வாழப்பாடி அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர், விலாரி பாளையம் மோட்டூர் சொர்ணாம்பிகை உடனுறை ஈஸ்வரமூர்த்தீஸ்வரர் கோவில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கைலாசநாதர் கோவில்
திருச்செங்கோடு நகரின் மத்தியில் அமைந்துள்ள மிகப் பழமையான சுகுந்தகுந் தலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
கைலாசநாதர் சாமிக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னம் சாற்றப்பட்டு அன்னாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர் கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இரவு 8 மணிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, குங்குமம், உள்ளிட்ட 18 வகையான மங்கல பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர் .
- நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது.
- தற்போது விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகளை ராஜேஷ்குமார் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போது விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகளை ராஜேஷ்குமார் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆலோசனை
அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் கும்பாபிஷேக விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.
இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், எம்.எல்.ஏ. ராமலிங்கம், கோவில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டி யன் நல்லுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.பி. பங்கேற்று பேசியதாவது:-
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை முதல் வருகிற 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நாளை முதல் யாகசாலை தொடங்கப்பட்டு நாளை மறுநாள் மாலை வரை நடைபெறும். 1-ந்தேதி அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்திட வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்கள் தடையின்றி செல்ல மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும்.
குடிநீர் வசதி
பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவம் மற்றும் தற்காலிக கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். விழா நடைபெறும் 1-ந்தேதி அன்று பக்தர்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் மருத்துவமனை ஒன்று கோவில் அருகில் அமைக்க வேண்டும்.
அரங்கநாதர் கோவில் முன்பு 108 ஆன்புலன்ஸ் சேவை முதலுதவி வசதிகளுடன் அதிகாலை 3 மணி முதல் வைத்திருக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமரா
தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட வேண்டும். கோவில் வளாகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தேவைப்படும் வழித்தடங்களில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, வருவாய் கோட்டாட்சியர் சரவணன், இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் பரஞ்சோதி, உதவி கமிஷனர் இளையராஜா, நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன், அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா ஸ்ரீநிவாசன், செல்வசீராளன், ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






