என் மலர்
உள்ளூர் செய்திகள்

கீரம்பூர் அருகே கார் மோதி பெண் பலி
- தனது மொபட்டில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார்.
- கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் கலா சென்ற மொபட் மீது மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கலா (வயது 55). இவர் கூலி வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று மதியம் கீரம்பூரில் இருந்து குஞ்சாம்பாளையம் செல்வதற்காக தனது மொபட்டில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார். அப்போது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் கலா சென்ற மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கலாவை அவ்வழியாக வந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கலா வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து பற்றி பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






