search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு  இன்ஸ்பெக்டரை நியமிக்க  52 கிராம மக்கள் கோரிக்கை
    X

    ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டரை நியமிக்க 52 கிராம மக்கள் கோரிக்கை

    • இப்பகுதியில் உள்ள 52 கிராமங்கள் ஜேடர்பா ளையம் போலீஸ் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ளது.
    • இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இப்பகு தியில் விவசாயம், நெசவு பட்டு தொழிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் அணைக்கட்டில் அண்ணா பூங்கா உள்ளது. இப்பகுதியில் உள்ள 52 கிராமங்கள் ஜேடர்பா ளையம் போலீஸ் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடம் நீண்ட வருடங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது வரை பரமத்தி போலீஸ் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் ஜேடர்பாளையம் பொறுப்பு பதவியில் உள்ளார்.

    இளம்பெண் கொலை

    ஜேடர்பாளையம் அருகே கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜேடர்பாளையத்தில் தீ வைப்பு சம்பவம், மரங்கள் வெட்டி சாய்ப்பு சம்பவம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2,000 க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் மற்றும் பாக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர். தொடர்ந்து இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டரை நேரில் சந்திக்க 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பரமத்திக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    கோரிக்கை

    மேலும் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமதி, கையெ ழுத்துக்காகவும் காத்திருக்கும் எப்.ஐ.ஆர். மற்றும் இதர கோப்புகள் கால தாமதமாக ஆகிறது. இதனால் நேர விரையம் ஆகின்றது. ஆகவே ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு நிரந்தர போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் என 52 கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    போலீஸ் சூப்பிரண்டு உறுதி

    இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனிடம் கேட்டபோது, கடந்த காலங்களில் ஜேடர்பாளையம் அமைதியான ஏரியாவாக இருந்தது. மேலும் ஜேடர்பாளையம் சிறிய ஏரியாவாகவும் உள்ளது. அங்கு அதிக குற்றங்கள் பதிவாகவில்லை. தற்போது கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட அசம்பாவிதங்களால் இத்தகைய சூழ்நிலை உள்ளது. வரும் காலங்களில் அரசு உத்தரவுபடி தற்போது உள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்ட ராக பதவி உயர்வு ஏற்படும்போது ஜேடர்பாளையத்திற்கு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்க வாய்ப்பு உள்ளது என கூறினார்.

    Next Story
    ×