என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சுமார் 750-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி அரசினர் மேல்நிலை பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வட்டார அளவிலான கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமை செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுனர் லியாக்கத் அலி வரவேற்றார்.

    முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை, எலும்பு சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வரவழைக்கப்பட்டு மக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.

    முகாமில் திட்டச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 750-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    இதில் காசநோய் பிரிவு துணை இயக்குனர் சங்கீதா, தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் சங்கரி, பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வை–யாளர் கற்பகம் நன்றி கூறினார்.

    • கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 500 பேர் கண்தானம் செய்தனர்.
    • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மலர் துவியும் மரியாதை செலுத்தபட்டது.

    நாகப்பட்டினம்:

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனங்கள் சார்பாக தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும், கண் தானம் செய்ய வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் தொடக்கி வைத்தார். பேரணி திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி நகராட்சி அலுவலகம் வரை சென்றது.

    இறுதியில் பேரணியை திருவாரூர் நகர இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் முடித்து வைத்தார்.

    பேரணியில் திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள், மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மகாத்மாகாந்தி, பண்டிதர் ஜவகர்லால் நேரு, மகாகவி பாரதியார், லால் பகதூர் சாஸ்திரி போன்ற தேச தலைவர்கள் வேடமிட்டு சென்றனர்.

    கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 500 பேர் கண்தானம் செய்தனர்.

    முன்னதாக தேசிய கொடி ஏற்றியும், தேசபக்தி பாடல்கள் பாடியும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மலர் துவியும் மரியாதை செலுத்தபட்டது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் வெங்கட்ராஜு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கல்வி குழுமத்தின் இயக்குநர் விஜயசுந்தாரம், நிர்வாக அலுவலர் சீதா கோபாலன், கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள் சிவகுருநாதன், கலைமகள், சுமித்தரா மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ.10 லட்சம் செலவில் கல்வெட்டு பாலம் கட்டப்பட்டது.
    • ரூ. 10.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பகுதி நேர கூட்டுறவு அங்காடி கட்டிடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேம்பதேவன்காடு பகுதிலிருந்து அருகிலுள்ள பக்தர்குளம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் இணைப்பு சாலையில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட கல்வெட்டு பாலத்தையும், அதே பகுதியில் ரூ. 10.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பகுதி நேர கூட்டுறவு அங்காடி கட்டிடத்தையும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், நகராட்சி கவுன்சிலர் நமசிவாயம், முன்னாள் கவுன்சிலர்கள் சுரேஷ்பாபு, ராஜகிளி, மாரியப்பன் உள்பட பிரமுகர்கள், கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

    • சேதமடைந்த 2 வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
    • புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த 2 வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டும் சிறப்பு திட்டம் 2022-23 கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு உறுப்பினர் இளஞ்செழியன் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றிய பொறியாளர் சுரேஷ், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்த வல்லி, ஊராட்சி செயலர் அன்பழகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பைபர், விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
    • வேதாரண்யம் பகுதி கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்பட்டதால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.

    இவர்கள் பைபர், விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வேதாரண்யம் பகுதி கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்பட்டதால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று 3-வது நாளாகவும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதுடன் படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. சில அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் இன்றும் 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுககளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

    • பயிற்சி வகுப்புகள் வருகிற பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து மூன்று மாதம் நடைபெற உள்ளது.
    • கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடல் படையால் நவிக்பொது மற்றும் மாலுமி பணிகளிலும் இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து மூன்று மாத காலத்திற்கு கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக நடைபெற உள்ளது.

    இதில் கலந்துகொள்ள தகுதியான மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்படி, விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களிலும், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், ரேசன் கடைகள் ஆகிய இடங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் அருகாமையில் உள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவார்.

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும்.

    மேலும், பயிற்சிகளுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் தலா ரூ. 1000 வழங்கப்படும். எனவே, 12-ம் வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களிலும் கூட்டு தொகையில் 50 சதவீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இத் தகவல் இந்திய கடலோர காவல் படை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • காரையூர் பகுதியில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை பணி நடந்து வருகிறது.
    • வசாயிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் பகுதியில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது இங்கு அறுவடை பணி நடைபெற்று வருகிறது.அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிட்டது.இந்நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி காரையூர் பகுதியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாராணி உத்திராபதி தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் முன்னிலை வகித்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

    இதில் வார்டு உறுப்பினர் கார்த்திக் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 3 மணி நேரம் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு செல்போனில் செல்பி எடுத்து கொடுத்தார்.
    • மாணவர்கள் தாங்கள் எடுத்த செல்பி போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி சார்பில் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    பின்பு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள வந்த நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது மாணவர்கள் கலெக்டரிடம், தங்களது செல்போனை கொண்டு வந்து கொடுத்து செல்பி எடுக்க கூறினர். சற்றும் சளைக்காமல் புன்னகையுடன் 3 மணி நேரம் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு செல்போனில் செல்பி எடுத்து கொடுத்தார்.

    மாணவர்கள் தாங்கள் எடுத்த செல்பி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுமார் 3 மணி நேரம் செல்பி எடுத்து மாணவர்களை மகிழ்வித்த கலெக்டர் அருண்தம்புராஜ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    • ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதினங்குடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27).

    இவர் கடந்த 1-ம் தேதி இரவு திருமருகல் முடிக்கொண்டான் ஆற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் ராஜேஷ் தலையில் பலத்த காயமடைந்தார்.

    காயமடைந்த ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாணவ- மாணவிகளை கல்வி சுற்றுலா கட்டாயம் அழைத்து செல்ல வேண்டும்.
    • தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு பூங்கா வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளை உறுப்பினராக கொண்டு பாலர்சபை கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்த பாலர் சபையில் சிறப்பு பார்வையாளராக நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பள்ளி மேம்பாடு, பகுதி வாழ் மேம்பாடு மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து அதற்குண்டான தீர்வுகளை விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    பிரதாபராமபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, செருதூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி, புனித மிக்கெல் அரசினர் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த குழந்தைகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழுவில் மாணவ பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும், பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள், நூலகம் மற்றும் கழிப்பறைகள் வேண்டும் வேண்டும்,

    அரசு போட்டித் தேர்வுகளுக்கு பள்ளியில் பயிற்சி அளிக்க வேண்டும், மாணவ மாணவிகளை கல்வி சுற்றுலா கட்டாயம் அழைத்து செல்ல வேண்டும், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு பூங்கா வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் குழந்தைகளால் பாலர் சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதில் நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், கிராம ஊராட்சி தலைவர் சிவராசு, துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    • 50 குழந்தைகளுக்கு கம்பு, நெய் உள்ளிட்ட 7 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த பில்லாளி ஊராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பில் புதிதாய் கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.

    பின் 50 குழந்தைகளுக்கு கம்பு, நெய் உள்ளிட்ட 7 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்:-

    மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 20 மாதம் சிறப்பாக நடத்தி வருவதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும் என்றார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், ஷா நவாஸ் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அத்தியாவசிய பொருட்களான தேங்காய் எண்ணெய், சீயாக்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.
    • இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டையில் அன்னை அமைந்துள்ள அனுபவம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மக்கள் முன்னேற்ற பொதுநல சங்கத்தின் மாநில தலைவர் சமூக சேவகர் டாக்டர் என் விஜயராகவன், தலைமையில், மாவட்ட ஆலோசகர் பழனிவேல் முன்னிலையில் வேஷ்டி, சர்ட், பனியன், துண்டுகள், மருத்துவ பொருட்கள், வலி நிவாரணி தைலங்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், தேங்காய் எண்ணெய், சீயாக்காய், ஷாம்பு, துணிசோப், குளியல் சோப், பற்பசை, பிரஷ், உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழங்கினர்

    இந்நிகழ்வில்.மாவட்ட ஓட்டுனர் அணி தலைவர் திருமலை ஐய்யப்பன், மாவட்ட மீனவரனி, தலைவர் ராஜீ மாவட்ட மகளிரணி செயலாளர், காணிக்கை மேரி ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர், மாரியம்மாள் ஒன்றிய மீனவரணி தலைவர், சூர்ய மூர்த்தி திருமருகல் ஒன்றிய இணைச்செயலாளர், சந்தோஷ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×