என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தூய்மைக்கான மக்கள் இயக்க பணிக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
    • குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்து விளக்கவுரை நகராட்சி ஆணையர் ஹேமலதா நடத்தினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி யில் நகரங்களின் தூய்மை க்கான மக்கள் இயக்கம் சார்பாக வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட அரசினர் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி கஸ்தூரிபா காந்தி கன்னியா குருகுலம் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தோப்புத்துறை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி காயிதே மில்லத் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேதாரண்யம் நகராட்சி ஆணையா் ஹேமலதா முன்னிலையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க பணிக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

    பின்னர் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்து விளக்கஉரை நகராட்சி ஆணையர் ஹேமலதா நடத்தினார். நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தையும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர்.
    • நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை நகர போலீஸ் நிலையத்தின் அருகில் டாஸ்மாக் கடை செயல்படுவதற்கு அப்பகுதி மக்கள் பல மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் சாலையோரத்தில்நின்று மது அருந்துவதுபோன்ற சட்ட விரோத செயல்க ளில் ஈடுபடுவதால்கோவி லுக்கு, பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாண விகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தையும் இன் ல்களையும் சந்தித்து வருகி ன்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடையை உடனடி யாக மூட வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் எனபோலீசார் கூறியதை தொட ர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • பாரம்பரிய உணவுகளில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
    • மாணவர்கள் தங்கள் வீடுகளில் தயாரித்து எடுத்து வந்த விதவிதமான பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திரும ருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையின் சார்பாக பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்ல ம்மாள் தலைமை தாங்கினார். பள்ளியின் கணித ஆசிரியர் சண்முகநாதன் பாரம்பரிய உணவு பொருட்களின் முக்கியத்துவம் பற்றியும் அதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.ஆசிரியர்கள் தமிழ்செல்வி, கோகிலா ஆகியோர் துரித உணவினால் ஏற்படும் பாதிப்புகளை மாணவர்களிடம் எடுத்துக் கூறினர்.மாணவர்கள் தங்கள் வீடுகளில் தயாரித்து எடுத்து வந்த விதவிதமான பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினர்.மாணவர்கள் அனை வருக்கும் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது.பள்ளியின் தேசிய பசுமை ப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் பவித்ரா நன்றி கூறினார். 

    • வேலை அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை ஆர்.டி.ஓ.விடம் மனுக்களாக அளித்தனர்.
    • மாற்றுத்திறனாளிக்கு ஏற்ப வேலை மற்றும் 4 மணி நேரம் மட்டும் பணி போன்ற கோரிக்கை பரிசீலித்து நிர்வாக அனுமதி பெற்று நடைமுறைபடுத்துவதாக தெரிவித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள குறைபாபாடுகள் தொடர்பாக மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேதாரண்யம் ஆர்.டி.ஓ ஜெயராஜ்பவுலின் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

    முகாமில் அனைத்து ஊராட்சிகளிலும் வேலை அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் முகாமில் கலந்து கொண்டு தங்கள்குறைகளை ஆர்.டி.ஓ.விடம் மனுக்களாக அளித்தனர்.முகாமில் வேதாரண்யம் தாலுகா நாகக்குடையான் பகுதியை சேர்ந்த சுந்தரேசன்மாற்றுதிறனாளி ்பார்வையில்லாதவர் மனு எழுதாமல் வந்துவிட்டார்

    அவரிடம் ஆர்.டி.ஓ குறைகளை கேட்டு அவருக்காக தானே மனு எழுதினார். பின்பு அவரிடம் படித்து காண்பித்தார். பின்பு அவர் மாற்று திறனாளிக்கு ஏற்ப வேலை மற்றும் 4 மணி நேரம் மட்டும் பணி போன்ற கோரிக்கை பரிசீலித்து நிர்வாக அனுமதி பெற்று நடைமுறைபடுத்துவதாக தெரிவித்தார்.பொதுவாக அரசு அலுவலகங்களில் மனு எழுதி கொண்டு சென்றாலே அதை அலட்சியமாக வாங்கி அலையவிடுவது வழக்கம்.ஆ னால் பொதுமக்களுக்காக மனுவை கேட்டு ஆர்.டிஓ எழுதிதை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

    • ஊரக வேலை திட்ட நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்த வேண்டும்.
    • தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூ.100 சேர்த்து ரூ.381 ஆக கூலியை உயரத்தி வழங்கிட வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிய செயலர் இளைய பெருமாள் தலைமையில் ஊரக வேலைத்திட்டத்தை சிதைக்காமல் செயல்ப டுத்திட கோரியும், தேர்தல் வாக்குறுதிப்படி ஊரக வேலைத் திட்ட நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்த வேண்டும் எனவும். தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூ.100 சேர்த்து ரூ.381 ஆக கூலியை உயரத்தி வழங்கிட வேண்டும் எனவும், காலை 7 மணிக்கு வேலைத் தளத்திற்க்கு வரச் சொல்லி கட்டபப்படுத்துவதை கைவிட வலியுறித்தியும், தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தை தொடர்ந்திட கோரியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதே போன்று தலை ஞாயிறு ஊராட்சிஒன்றிய அலுவலகம் முன்பு அலெக்சாண்டர் தலைமை யில் 80 பேர் கோரி க்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்டதுடன் உடனடியாக ஒன்றிய, தமிழக அரசுகள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

    • யாழை பழித்த மொழியம்மை என்று அழைக்கப்படும் வேதநாயகி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
    • வீணையின் ஒலியைவிட அம்மனின் குரலோசை இனிமையாக இருந்ததால் சரஸ்வதி வீணை இல்லாமல் தனி சன்னதி கொண்டுள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் வரலாற்று சிறப்புடையது.இந்த கோவிலில் யாழைப் பழித்த மொழியம்மை என்று அழைக்கப்படும் வேதநாயகி அம்மன் அருள்பாலித்து வருகிறார். சரஸ்வதிக்கும் இந்த அம்மனுக்கும் வீட்டின் ஒளி சிறந்ததா அல்லது அம்மனின் குரலோசை சிறந்ததா என போட்டி ஏற்பட்டு வீணையின் ஒலியைவிட அம்மனின் குரலோசை இனிமையாக இருந்ததால் சரஸ்வதி வீணை இல்லாமல் தனி சன்னதி கொண்டுள்ளார்.

    வேத நாயகி அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆடிப்பூர திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதற்காக நேற்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, சமஸ்தார்கள் கயிலைமணி வேதரத்தினம் ,கேடிலியப்பன், உபயதாரர்கள் தேவி, பாலு, ராஜேந்திரன், ஓதுவார் மூர்த்தி, பரஞ்சோதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இந்த விழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
    • வருகிற 15-ந்தேதி விழா நிறைவடைகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. பிரசித்திப்பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் உத்திரியமாதா திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழாவானது நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. வருகிற 15-ந் தேதி விழா நிறைவடைகிறது. கொடியேற்றத்தையொட்டி நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து கொடி பவனி புறப்பட்டது.

    கடற்கரை சாலை, ஆரியநாட்டுசாலை வழியாக நடைபெற்ற பவனி, மீண்டும் பேராலயத்தை அடைந்தது. அங்கு பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் கொடி புனிதம் செய்யப்பட்டு பேராலயத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றிவைக்கபட்டது.

    இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருள் சகோதரர்கள், சகோதரிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மாதாவை தரிசனம் செய்தனர் .விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    • திருமருகல் அருகே ஆதலையூர் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
    • இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திரும ருகல் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமு தல் செய்தனர்.

    திருக்கண்ணபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் திருமருகல் அருகே ஆதலையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.ஆதலையூர் சுடுகாடு அருகே சாராயம் விற்ற கீழசன்னாநல்லூர் பாப்பா குளத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் (வயது 28) அந்த பகுதியில் சாராயம் விற்றது தெரியவந்தது.

    மேலும் இவர் காரை க்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்துவருவது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து திருக்கண்ணபுரம் போலீ சார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • குடிநீர் அதிக அளவில் வெளியேறி சாலையிலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ஓடி குளம் போல் தேங்கி வீணாகிறது.
    • பள்ளி மாணவர்கள் எந்நேரத்திலும் குழியில் தவறி விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி சன்னதி தெருவிலிருந்து கல்லுளி திருவாசல் சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் நாகூர், நாகப்பட்டினம், வேளா ங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதும க்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருமரு கல் சன்னதி தெருவில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ள்ளது.

    இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி சாலையிலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ஓடி குளம் போல் தேங்கி வீணாகிறது. இந்த குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்ய குழிதோண்ட பட்டு சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    மேலும் சரி செய்வதற்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது.இதனால் குழிக்கு அருகில் தனியார் மழலையர் பள்ளி மற்றும் அரசு மாணவியர் விடுதிக்கு செல்லும் மாணவர்கள் இந்நேரத்திலும் குழியில் தவறி விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கல்லுளி திருவாசல் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சீரமைத்து குழியினை மூட கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஓட்டல்களில் காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும் எனவும் சூடான உணவுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
    • குடிநீர் குழாயில் உடைப்பு அல்லது கசிவு இருந்தால் உடன் பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

    வேதாரண்யம்:

    காரைக்கால் பகுதிகளில் காலரா நோய் தொற்று எற்பட்டுள்ளதை தொடர்ந்து தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள உணவகங்களில் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக செயல் அலுவலர் குகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஓட்டல்களில் காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும் எனவும் சூடான உணவுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் சமையலறை தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். தூய்மையாக பராமரிக்க தவறினால் உரிமம் ரத்து செய்யப் படும் என தெரிவித்துள்ளார்.

    காலரா முன்னெச்ச ரிக்கை குறித்து செயல் அலுவலர் குகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,

    பொது மக்கள்திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது எனவும் , கழிவ றைக்கு சென்று வந்த பின்னர் கைகளை கழுவ வேண்டும் எனவும் குறைந்தபட்சம் தண்ணீரை 20 நிமிடம்காய்ச்சிய பிறகே குடிக்க வேண்டும் எனவும் காலரா அறிகுறிகள் காண ப்பாட்டில்அரிசி கஞ்சி நீர் மோர் இளநீர் நீராகாரம் என்ற பானங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம் இந்த காலரா அறிகுறிதென்பட்ட அருகில் உள்ள மூத்த குடிம க்களுக்கு உதவி செய்யுங்கள் எனவும் குடிநீர் குழாயில் உடைப்பு அல்லது கசிவு இருந்தால் உடன் பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

    மேலும் வயிற்று வலி, வயிற்று போக்கு மற்றும் வாந்தி அறிகுறி இருப்பின் உடன் அரசு மருத்துவமனயை அணுக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆய்வின்போது இளநிலை உதவியா ளர் குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் சென்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புத்தக திருவிழாவின் பயனாக மாணவர்களுக்கு கதை புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
    • மாணவர்களுக்கு பத்தாயிரம் குடைகள், பாட புத்தகங்கள், உணவு, உடைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை தனது சொந்த செலவில் செய்து வருகிறார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் வசந்தாஇல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும்த ன்னார்வலர்கள் மைய ங்களுக்கு, வரும் மாணவர்களுக்கு கதை சொல்லிக் கொடுப்பதற்கான கதைப் புத்தகங்களை தனது சொந்த செலவில் வாங்கி பரிசளித்திருக்கிறார் .

    நாகப்பட்டினத்தில் ஜூன் 24-ம்தேதி முதலாவது புத்தக கண்காட்சி தொடங்கியது. அதில் ஒவ்வொரு நாளும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியைச் சிறப்பித்தனர். முதல் முதலாக நடத்தப்பட்ட இந்த புத்தகத் திருவிழாவை இந்த பகுதி மக்கள் வெகுவாக ரசித்து பெருமளவில் புத்தகங்களை வாங்கி சென்றனர். அந்த புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் புத்தகக் கண்காட்சியில் புத்தகமும் வாங்க வேண்டும், அது மாணவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்று சிந்தித்த அண்டர்காடு பள்ளி ஆசிரியை வசந்தா, தன்னுடைய சொந்த செலவில் ரூ 30,000த்துக்கு 2500 கதை புத்தகங்கள் வாங்கினார். ஆசிரியை வசந்தா மாணவர்களுக்கு பத்தாயிரம் குடைகள், பாட புத்தகங்கள், உணவு, உடைகள் கொரோனா பரவலை கட்டுபடுத்த சுமார் 5 லட்சம்மாஸ்க்உள்ளிட்ட பல்வேறு தேவைகளைத் தொடர்ந்து தனது சொந்த செலவில் செய்து வருகிறார். இந்த புத்தகத் திருவிழாவின் பயனாக மாணவர்களுக்கு கதைப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

    நேற்று முன்தினம்இரவு நடைபெற்ற நிறைவு விழாவில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர், திருமருகல் மற்றும் நாகப்பட்டினம் வட்டாரங்களில் செயல்பட்டு வரும் 2365 இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கும் தலா ஒரு கதை புத்தகம் வீதம் வழங்கிடுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்விடம் வழங்கினர்

    அவற்றை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர்களிடம் அந்த புத்தகங்களை வழங்கினார்.

    இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நாகை மாவட்ட தலைவர் ஆரிப், செயலாளர் பால இரணியன், வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கதைப் புத்தகங்களை வழங்கிய ஆசிரியர் வசந்தாவுக்கு அனைவரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

    • பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மீன்வள பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை.
    • இவர்களுக்கு பல்கலைக்கழகமும், தமிழக அரசும் எவ்வித வேலைவாய்ப்பையும் இதுவரை ஏற்படுத்தி தரவில்லை.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் கடந்த 2015 முதல் மீன்வள பொறியியல் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு இதுவரை ஐந்து பேட்ச் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியே வந்துள்ளனர். இதில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் பிளஸ்-2-வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கவுன்சிலிங் அடிப்படையில் சேர்ந்து மிகுந்த எதிர்காலம் இருக்கும் என்று கனவோடு படித்து முடித்த உடன் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வெளியேறினர். ஆனால், இவர்களுக்கு பல்கலைக்கழகமும், தமிழக அரசும் எவ்வித வேலைவாய்ப்பையும் இதுவரை ஏற்படுத்தி தரவில்லை.

    சுமார் 150 பொறியியல் பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக காத்துள்ளனர். எனவே, தமிழக அரசும், மீன்வள பல்கலைக்கழகமும் மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்தினுடைய ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மற்றும் மீன் வளர்ச்சி கழகத்தினுடைய தலைவர் ஆகியோர் இந்த வாழ்வாதார பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் இராமசாமி தமிழக அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இதுகுறித்து மீன்வள பொறியாளர்களை ஒன்றுதிரட்டி விரைவில் முதல்-அமைச்சரை சந்தித்து நேரிடையாக கோரிக்கை தெரிவிப்பது எனவும் தெரிவித்தார்.

    ×