search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளியின் குறைகளை தானே எழுதிக் கொண்ட ஆர்.டி.ஓ
    X

    முகாமில் மாற்றுத்திறனாளியின் குறையை ஆர்.டி.ஓ ஜெயராஜ்பவுலின் தானே எழுதினார்.

    மாற்றுத்திறனாளியின் குறைகளை தானே எழுதிக் கொண்ட ஆர்.டி.ஓ

    • வேலை அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை ஆர்.டி.ஓ.விடம் மனுக்களாக அளித்தனர்.
    • மாற்றுத்திறனாளிக்கு ஏற்ப வேலை மற்றும் 4 மணி நேரம் மட்டும் பணி போன்ற கோரிக்கை பரிசீலித்து நிர்வாக அனுமதி பெற்று நடைமுறைபடுத்துவதாக தெரிவித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள குறைபாபாடுகள் தொடர்பாக மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேதாரண்யம் ஆர்.டி.ஓ ஜெயராஜ்பவுலின் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

    முகாமில் அனைத்து ஊராட்சிகளிலும் வேலை அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் முகாமில் கலந்து கொண்டு தங்கள்குறைகளை ஆர்.டி.ஓ.விடம் மனுக்களாக அளித்தனர்.முகாமில் வேதாரண்யம் தாலுகா நாகக்குடையான் பகுதியை சேர்ந்த சுந்தரேசன்மாற்றுதிறனாளி ்பார்வையில்லாதவர் மனு எழுதாமல் வந்துவிட்டார்

    அவரிடம் ஆர்.டி.ஓ குறைகளை கேட்டு அவருக்காக தானே மனு எழுதினார். பின்பு அவரிடம் படித்து காண்பித்தார். பின்பு அவர் மாற்று திறனாளிக்கு ஏற்ப வேலை மற்றும் 4 மணி நேரம் மட்டும் பணி போன்ற கோரிக்கை பரிசீலித்து நிர்வாக அனுமதி பெற்று நடைமுறைபடுத்துவதாக தெரிவித்தார்.பொதுவாக அரசு அலுவலகங்களில் மனு எழுதி கொண்டு சென்றாலே அதை அலட்சியமாக வாங்கி அலையவிடுவது வழக்கம்.ஆ னால் பொதுமக்களுக்காக மனுவை கேட்டு ஆர்.டிஓ எழுதிதை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

    Next Story
    ×