search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girls dead"

    • 3 சிறுமிகளும் கோவில் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தபோது திடீரென தவறி குளத்தில் விழுந்தனர்.
    • குளத்தில் விழுந்த 3 சிறுமிகளும் தங்களை காப்பாற்றும்படி அபய குரல் எழுப்பினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பைரெட்டி பள்ளியை சேர்ந்தவர் கதிரப்பா.

    இவரது உறவினர்கள் வேலூர் மாவட்டம் அரவட்லா பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம், அவரது மகள் பவ்யா (16), மணிமேகலை மற்றும் அவரது மகள் மவுனிகா (8), கதிரப்பா மகள் கவுதமி (13) மற்றும் உறவினர்கள் நேற்று காலை பைரெட்டி பள்ளி அருகே உள்ள நிகி தேவாடி காலபைரவர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

    தற்போது கால பைரவர் கோவில் அருகே உள்ள காட்டேரம்மா கோவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதன் அருகில் குளம் ஒன்று உள்ளது. கதிரப்பா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் கோவிலில் பூஜை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது 3 சிறுமிகளும் கோவில் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தபோது திடீரென தவறி குளத்தில் விழுந்தனர். குளத்தில் விழுந்த 3 சிறுமிகளும் தங்களை காப்பாற்றும்படி அபய குரல் எழுப்பினர்.

    அவர்களது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமிகளை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் 3 சிறுமிகளும் தண்ணீரில் மூழ்கினர். அங்கிருந்த சிலர் குளத்தில் இறங்கி சிறுமிகளை தேடிய போது நீண்ட நேரத்திற்கு பிறகு 3 சிறுமிகளின் உடல்களும் பிணமாக மீட்கப்பட்டன.

    இது குறித்து பைரெட்டி பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுற்றுலா பயணிகளில் சிலர் கடலுக்குள் நீந்தி சென்று மயங்கிய நிலையில் இருந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடல்களை பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர்.

    நாகப்பட்டினம்:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜகம்பீரம் கிராமத்தை சேர்ந்தவர் சேவியர். இவரது மகள்கள் ஆரோக்கியா ஷெரீன் (வயது 18), ரியானா (13). அதே பகுதியை சேர்ந்த பெஞ்சமின் மகள் சஹானா (14). இவர்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்த 12 பேருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் தேவாலயத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கினர்.

    இன்று காலை அவர்கள் அனைவரும் வேளாங்கண்ணியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு கடலில் குளித்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் ஆரோக்கியாஷெரீன், ரியானா, சஹானா ஆகிய 3 பேரும் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினர்.

    அதிர்ச்சியடைந்த உடன் வந்தவர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர்.

    இதையடுத்து சுற்றுலா பயணிகளில் சிலர் கடலுக்குள் நீந்தி சென்று மயங்கிய நிலையில் இருந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடல்களை பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து கீழையூர் கடற்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி விடுமுறை என்பதால் 2 சிறுமிகளையும் சேத்துக்குழி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் பெற்றோர் விட்டு, விட்டு சென்று விட்டனர்.
    • காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர்:

    காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் அறிவு செல்வன். இவருடைய அண்ணன் தமிழ்செல்வன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    அறிவு செல்வன் மகள் சுஜித்ரா (வயது 11) 6-ம் வகுப்பு படித்து வந்தாள். இதேபோல் தமிழ்செல்வன் மகள் சசிரேகா (வயது 7). 2-ம் வகுப்பு மாணவி.

    இவர்களுடைய பாட்டி பாப்பாத்தி வீடு சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை அடுத்த பண்ணவாடி அருகே உள்ள சேத்துக்குழி கிராமத்தில் உள்ளது.

    இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் 2 சிறுமிகளையும் சேத்துக்குழி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் பெற்றோர் விட்டு, விட்டு சென்று விட்டனர்.

    இன்று காலை பாப்பாத்தி துணி துவைப்பதற்காக அருகில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்றார். அப்போது உடன் 2 சிறுமிகளையும் அழைத்து சென்றார். 2 சிறுமிகளும் ஆற்றில் இறங்கி விளையாடினர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதை கண்டு பாப்பாத்தி அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து ஆற்றில் இறங்கினர். அதற்குள் சுஜித்ரா, சசிரேகா தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். அவர்களது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்னர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×