என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுகிறது.
    • பனைஓலை மற்றும் தார்பாய்களை கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

    ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை 9 மாத காலம் உப்பு உற்பத்தி நடைபெறும் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திரா, கர்நாடக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் மற்றும் தமிழகம் முழுவதும் லாரி மூலம் அனுப்பிவைக்கபடுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு உற்பத்தி துவங்கி முதல் செப்டம்பர் மாதம் வரை விட்டு விட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முனபு பெய்த மழைக்கு பின்பு கடந்த ஒரு வாரத்திற்கு பின் உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் துவங்கபட்டது கடந்த சில நாட்களாக பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கபட்டது.

    மழைக்காலம் துவங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மீண்டும் உப்பு உற்பத்தி மீண்டும் துவங்க சத்தியமில்லாத நிலையில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சேமித்து வைத்துள்ள உப்பை மழையில் இருந்து பாதுகாக்க பனைஓலை மற்றும் தார்பாய்களைக் கொண்டு மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    குறைந்த அளவே உப்பு கையிருப்பில் உள்ளதால் நல்ல விலை போகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    • காப்பாற்றுதல் மற்றும் முதலுதவி அளித்தல் பற்றி தத்ரூபமாக விளக்கம் அளிக்கப்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் மிதக்கும் கருவிகளை கொண்டு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள பேரிடர் மேலாண்மை குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் நடந்தது.

    பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள கோவில் குளத்தில் தத்ரூபமாக நடைபெற்ற மீட்பு ஒத்திகையை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    ஐந்து 108 வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு சைரன் சத்தம் ஒலிக்க பரபரப்பாக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் நீரில் மூழ்கியவர்களை ரப்பர் படகு உள்ளிட்ட உபகரணஙகள் மூலம் வெள்ளத்தில் சிக்கிய வர்களை காப்பாற்றுதல் மற்றும் முதலுதவி அளித்தல் பற்றி தத்ரூபமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    ரத்த காயங்களுடன் அடிபட்டவர்களை தூக்குதல், மூச்சுக்குழல் அடைப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி அளிப்பது, வெள்ளத்தில் சிக்கிய–வர்களை கண்டுபிடித்து காயத்தின் தன்மைக்கு ஏற்றவாறு கைகளில் வண்ண ரிப்பன்களை கட்டுதல் போன்ற மீட்பு நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

    ஸ்கூபா போன்ற அதி நவீன மிதக்கும் கருவிகளை கொண்டு நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தண்ணீரில் தத்தளித்த கால்நடையை காப்பாற்றி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பின்னர் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மையின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர கால பெட்டக உபகரணங்களை ஆய்வு செய்த வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வளர்களை பாராட்டினார்.

    ஏராளமான வாகனங்கள் சைரன் ஒளி எழுப்பி நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் முதலுதவி பயிற்சிகள் செய்முறை அளிக்கப்பட்டது.
    • சிறப்பு விருந்தினர் மூலமாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றிய அளவில் ஜே.ஆர்.சி ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவர் ரேவதி ஜே.ஆர்.சி கொடியினை ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார்.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் சௌந்தர்ராஜன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜீவ் காந்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முகம்மது யாசீன், வவ்வாலடி பள்ளியின் தலைமையாசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

    ஜே.ஆர்.சி யின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ ஆலோசகர் லியாக்கத் அலி திருப்பயத்தங்குடி, ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர் ஏசுநாதன் ஆகியோர் சுகாதாரம் தொடர்பான அறிவுரைகளை வழங்கினா்.

    திருமருகல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அலுவலர்கள் மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் முதலுதவி பயிற்சிகளை செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டினர்.

    திருமருகல் வட்டார கல்வி அலுவலர் ரவி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    சிறப்பு விருந்தினர் மூலமாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    கொட்டாரக்குடி கிராமத்தைச் சுற்றிலும் 250 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

    முடிவில் பள்ளியின் ஜே.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

    • விழுந்தமாவடி அரசு பள்ளி 14 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்களை கொண்டதாகும்.
    • மாணவர்களின் நலன் கருதி பள்ளியை மறவாமல் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி தம்பிரான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான நாகராஜன்.

    இவர் விழுந்தமாவடியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 35 ஆண்டுகளாக தொழில் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் இதே பள்ளியில் பயின்று தற்பொழுது ஓய்வு பெற உள்ள நிலையில் தான் பயின்ற மற்றும் பணிபுரிந்த பள்ளிக்கு ஏதாவது செய்ய நினைத்த ஆசிரியர் 14 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகம் உள்ள பள்ளி கட்டிடத்திற்கு சுமார் 1.25 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் நலன் கருதியும் வெள்ளை அடித்து வர்ணம் பூசி வருகிறார்.

    இன்னும் பத்து நாட்களில் பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில் இந்தப் பணி தனக்கு மன நிறைவை அளிப்பதாகவும் மன மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதே போல் மாணவர்கள் தங்கள் பயின்று பல்வேறு துறைகளுக்கு சென்றாலும் தன் பயின்ற பள்ளிகளுக்கு மாணவர்களின் நலன் கருதி பள்ளியை மறவாமல் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என ஆசிரியர் வேண்கோள் விடுத்தார்.

    ஆசிரியரின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுலை தெரிவித்தனர்.

    • சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
    • நெல் ரகங்கள் 100 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றிய பகுதியில் 2 நாள் மழையால் 100 ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

    நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருமருகல் வட்டாரத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது குறுவை அறுவடை பணிகள் துவங்கியது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவில் பெய்த கனமழையால் கீழப்பூதனூர், திருச்செங்காட்டங்குடி, திருமருகல், திருக்கண்ண புரம், திருப்–புகலூர், வடகரை, கோட்டூர், விற்குடி, அம்பல், பொறக்குடி, மருங்கூர், நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல் மழைநீர் சூழ்ந்தது.நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கோ.46,1009,பிபிடி நெல் ரகங்கள் 100 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.தற்போது மழை நீர் வடிய தொடங்கி வருகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்

    ஏக்கருக்கு 25 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் அறுவடை நேரத்தில் இப்படி ஆகி விட்டது என்றும் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறைப்படி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை கணக்கிடாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணி.
    • அப்பகுதி மக்கள் ஆற்றை கடக்க குழாய் கொண்டு தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி வளப்பாற்றின் குறுக்கே நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த பாலம் வழியாக திருப்பயத்தங்குடி, பில்லாளி, திருச்செங்காட்டங்குடி, தென்னமரக்குடி, கீழப்பூதனூர், நத்தம், வீரபெருமாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் சென்று வர முக்கிய வழியாக உள்ளது.

    மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வரவும் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் காவிரி நீர் கடைமடை பகுதியான திருமருகல் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தது.

    இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றைக் கடக்க குழாய் கொண்டு தற்காலிக அமைக்கப்பட்டு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.

    அதில் அப்பகுதி மக்கள் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக பாலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.

    இதனால் ஆற்றை கடக்க முடியாமல் அப்பகுதி மக்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி வந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கின்றனர்.

    எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
    • மயிலாடுதுறை மாவட்ட மாணவ- மாணவிகளுக்கு வன உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.

    நாகப்பட்டினம்:

    நாகூரில் வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நாகூர் தனியார் பள்ளியில் நடந்தது.

    மாணவர்களுக்கு ஓவிய போட்டி, வண்ணம் தீட்டுதல், வினாடி வினா, ஆங்கில பேச்சு போட்டி தமிழ் பேச்சு போட்டி, ஆங்கில கட்டுரை போட்டி, தமிழ் கட்டுரை போட்டிகள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்டன.

    இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற முதல் இடம் பிடித்த மாணவர்கள் சென்னையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான போட்டி களில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா ஆலோசனையின் பேரில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மாணவ மாணவிகளுக்கு வன உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.

    வனத்துறை வனச்சரகர் ஆதி லிங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

    முன்னதாக நடைபெற்ற விழாவில் நாகை மாவட்டதேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தேசியபசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் உயிரின வார விழா அனுசரிப்பதின் அவசியத்தை எடுத்துக் கூறினர்.

    விழாவில் பள்ளி முதல்வர் பெனெட் மேரி, காரைக்கால் சுந்தரபாண்டியன், மரம் சௌந்தரராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நடுவர்களாக அசோக் மணிவண்ணன் பாஸ்கரன் செங்குட்டுவன், ஐசக் காட்சன், பிரியா ஆகியோர் செயல்பட்டனர்.

    பள்ளி ஆசிரியர்கள் சிவா, ரகு, பாஸ்கர் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். அ

    க்டோபர் 2 முதல் அக்டோபர் எட்டு வரை நடைபெற இருக்கின்ற வன உயிரின வாரத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன என்று வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா தெரிவித்தார்.

    • பா.ஜ.க பிரமுகர்களின் வீடுகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • சமஸ்கிருத மொழியே இல்லாத போது, கண்டிப்பாக மனுதர்மத்தை பின்பற்றியே ஆக வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், இந்துக்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசாவை கண்டித்தும் முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் வீடுகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ ஆகிய இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    காந்தி ஜெயந்தியை ஒட்டி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று சொல்லிக் கொள்ளும் திமுக தலைமையிலான அரசு ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? இந்த ஊர்வல அனுமதியை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடக்கின்றன.

    மேலும் இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஆ.ராசாவை வன்மையாக கண்டிக்கிறேன்.

    3000 ஆண்டுகளுக்கு முன் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மனுஸ்மிருதி நூலை குறிப்பிட்டு,

    இவ்வாறு மிக மோசமாக பேசி உள்ளார்.

    சமஸ்கிருத மொழியே இல்லாத போது, கண்டிப்பாக மனுதர்மத்தை பின்பற்றியே ஆக வேண்டும் என்று யாரும் நிர்பந்தம் செய்யாத போது எதற்காக இதை பேச வேண்டும்?

    மற்ற மதத்தினரின் நூல்களில் உள்ள குறைகளை பற்றி ஆ.ராசா பேசுவாரா?

    தொடர்ச்சியாக இந்து மதத்தை இழிவு படுத்துவோர், மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.

    • திருமாளம் தெற்கு தெருவை சேர்ந்த இருவர் சாராயம் விற்றுக் கொண்டிருந்தனர்.
    • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே கங்களாஞ்சேரி பகுதியில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருமாளம் தெற்கு தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 20), சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி ஆகிய 2 பேரும் சாராயம் விற்று கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    இதனை பார்த்த ராஜீவ்காந்தி தப்பி தலைமறைவாகி விட்டார்.

    இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்தனர். ராஜீவ்காந்தியை தேடி வருகின்றனர்.

    அதேபோல் மற்றொரு வழக்கில் சாராயம் விற்ற கேதாரிமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தை (40) கைது செய்தனர்.

    • பஸ்சை வழிமறித்து ஏன் இப்படி பஸ் ஓட்டுகிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • ஆத்திரமடைந்து பஸ் முன், பின் கண்ணாடிகளை உடைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக திருவாரூர் செல்லும் அரசு பஸ்சை வைப்பூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார்.

    அப்போது கங்களாஞ்சேரி கடைத்தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்த கங்களாஞ்சேரி புளியந்தோப்பு விஜய் (23) என்பவர் பஸ்சை வழிமறித்து ஏன் இப்படி பஸ் ஓட்டுகிறீர்கள் என்று டிரைவர் திருநாவுக்கரசுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    வாக்குவாதம் முற்றி விஜய் ஆத்திரம் அடைந்து செங்கல்லை எடுத்து பஸ்சின் முன்பக்கம், பின்பக்க கண்ணாடிகளை உடைத்தார்.

    கண்ணாடி துகள்கள் பட்டு டிரைவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு திருவாரூர் அரச மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.

    • மாணவிகள் கொடுத்த புகார் நாகை மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
    • பள்ளிக்கு வந்த கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி, வி.ஏ.ஓ. ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அசோகன் (வயது 38) பணியாற்றி வந்தார். இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் சிலரின் மொபைல் எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் ஆபாச தகவல் அனுப்பி உள்ளார். மேலும் பாலியல் ரீதியாக அடிக்கடி குறுந்தகவல் அனுப்பினார். மேலும் ஆசிரியர் அசோகன் தனது வீட்டின் அருகே டியூசனும் நடத்தி வந்துள்ளார். அங்கு படிக்க வரும் மாணவிகளுக்கு நேரடியாக பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்ததாகவும் மாணவிகள் குற்றம் சாட்டினர்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் பள்ளி தலைமை ஆசிரியர் குமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து மாணவிகள் கொடுத்த புகார் நாகை மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    அதன்பேரில் பள்ளிக்கு வந்த கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி, வி.ஏ.ஓ. ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புகார் கொடுத்த மாணவி உள்ளிட்ட மற்ற மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் மாணவிகள் உடற்கல்வி ஆசிரியர் அசோகன் அடிக்கடி வாட்ஸ் அப்பில் பாலியல் ரீதியாக மெசேஜ், படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்துக்கு இடையே உடற்கல்வி ஆசிரியர் அசோகன் கடந்த 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். இதனால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அவர் எடுக்கவில்லை.

    புகார் குறித்து அவரிடம் விளக்க கடிதம் கேட்டு அவரது வீட்டு முகவரிக்கு விரைவு தபால்மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இது தொடர்பாக கரியாப்பட்டினம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அசோகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாளொன்றுக்கு 5 முதல் 20 டன் வரையில் மீன்கள் பிடிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
    • தங்கி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு தங்குமிடம், குடிதண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்,வேதாரண்யம் தாலுகா கோடியக்க ரையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

    இக்காலத்தில் நாகை, காரைக்கால், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடித்து அண்டைய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திராவுக்கு மினி வேன்களில் விற்பனைக்காக அனுப்பி வைப்பார்கள்.

    நாளொன்றுக்கு 5 முதல் 20 டன் வரையில் மீன்கள் பிடிக்கப்பட்டு இங்கிருந்து அனுப்பி வைக்கப்படும்.

    இந்த ஆண்டு முன்கூ ட்டியே மீன்பிடி சீசன் காலம் தொடங்கியதால் வானகிரி, சின்ன மேடு, பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, சாமாத்தான்பேட்டை, காரை க்கால், மடவாய்மேடு, அக்கம்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட படகுகள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர்.

    மீனவர்கள் வருகையால் களை இழந்து காணப்பட்ட கோடியக்கரை மீன் பிடிதளம் தற்போது சுறுசுறுப்பாக காணப்படுகிறது.

    வெளியூ ரிலிருந்து வந்து தங்கி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு தங்குமிடம், குடிதண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கோடி யக்கரை மீனவர்நல சங்க முன்னாள் செயலா ளர் சித்திரவேல் கூறியதாவது:-

    நடப்பாண்டு முன் கூட்டியே மீன்பிடி சீசன் தொடங்கியதால் அதிகளவில் வெளியூர் படகுகள் வந்துள்ளன.

    வெளியூரிலிருந்து வரும் மீனவ குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளும் கிராமத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    இந்தாண்டு மீன்பிடி சீசன் நன்றாக இருக்கும் என்றும் சுமார் ரூ. 200 கோடிக்கு மீன் வர்த்தகம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×