என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மழை காலங்களில் நீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்படும்.
    • சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை முதல் திருவாரூர் வரை சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் தற்போது மேற்கொள்ளப்ப ட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் முதல் கழனிவாசல் இடையே புறவழிச் சாலை அமைக்கப்ப டுகிறது.

    இதற்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலங்கள் கையகப் படுத்தப்படுகின்றன.

    வடக்கு தெற்க்காக அமையும் இந்த புறவழிச்சாலை காரணமாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மழைக் காலங்களில் தண்ணீர் வடிவதற்கு சிரமம் ஏற்படும் என்றும் இதன் காரணமாக மேலமங்க நல்லூர் கழனிவாசல் வேலங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 2000 ஏக்கர் விளை நிலங்கள் பருவமழை காலங்களில் நீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்படும் என்றும் பல கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் அப்புறப்படுத்தக்கூடிய நிலைமை உருவாகி உள்ளதாகவும் இதனை தவிர்க்க இப்பகுதியில் புறவழிச் சாலையை முழுவதுமாக பாலமாக கட்டி தர வேண்டும் என்றும், சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கோரியும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதற்காக நூற்றுக்கு மேற்பட்ட மனுக்களின் நகல்களை தோரணமாக கட்டி கையில் கருப்புக்கொ டியுடன் கழனிவாசல் வயல்வெளியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    தங்களது கோரிக்கை நிறைவேற்ற படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் விவசாயி சம்பந்தம் கூறுகையில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் பயிர்கள் அதிகப்படியாக விவசாயம் செய்து வருகிறார்கள்.

    இதனை அழித்து சாலை அமைப்பதால் பெரும் வரலாற்று பிழை ஏற்படும்.

    இங்கே உள்ள தத்தங்குடி கிராமத்தில் தான் நெல் ஆராய்ச்சி நிலையம் வைக்க முற்பட்டது விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் ஆடுதுறையில் மாற்றியமைக்கப்பட்டனர்.

    எனவே மத்திய மாநில மாவட்ட அரசுகள் இப்பகுதியில் மாற்று அமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும் விவசாயம் அழிவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டாம் என அப்பகுதி விவசாயிகளின் சார்பில் கேட்டுக்கொண்டனர்.

    • விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தினர்.
    • அவரை வெண்டை, கத்திரிக்காய் போன்ற காய்கறி தோட்டத்தை வேளாண் புல மாணவிகள் அமைத்து கொடுத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருதே உள்ள செம்மங்குடி கிராமத்தில் தங்கி பயிற்சி வரும் வேளாண் புல இறுதியாண்டு மாணவிகள் (குழு எண் -14) அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு "இயற்கை விவசாயம்" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் , வேளாண் புல மாணவிகள் மகாலட்சுமி, , சுஷ்மிதா, சுருதி, சுகிர்தா, சுமித்ரா, ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    வேளாண் புல மாணவிகள் செம்மங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தினர்.

    இப்போது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இதேபோல் செம்மங்குடியில் உள்ள முதியோர் இல்லத்தில் அவரை வெண்டை, கத்திரிக்காய் போன்ற காய்கறி தோட்டம் வேளாண் புல மாணவிகள் அமைத்துக் கொடுத்தனர்.

    • பேரணியை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
    • தீயணைப்பு நிலைய வளாகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் தீ தொண்டு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார்.

    மாவட்ட அலுவலர் சரவணபாபு முன்னிலை வகித்தனர். தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் மணிமாறன் வரவேற்றார். வருவாய் கோட்டாட்சியர் யுரேகா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மரகதவல்லி செந்தில், மணிமேகலை, சுமதி கண்ணன், குத்தாலம் சிறப்பு நிலை நிலைய அலுவலர் சீனிவாசன், கவிஞர் ராதாகிருஷ்ணன், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர், சமுதாயக் கல்லூரி மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தீயணைப்பு வளாகத்தில் புறப்பட்ட மிதிவண்டி உட்பட்ட பேரணி நகர முக்கிய வழியாக கச்சேரி சாலை, காந்திஜி சாலை, பட்டமங்கல தெரு, பெரிய கடை தெரு, மகாதான தெரு, கண்ணார தெரு வழியாக பேரணியாக சென்று தீயணைப்பு நிலையம் வந்தனர்.

    இதில் ஏராளமான சமூக ஆர்வ லர்கள் கலந்துக்கொன்டனர்.

    • முதியவர் உடல் நலக்குறைவால் அவதி பட்டு வந்தார்.
    • விஷம் குடித்த ஜெயராஜை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி தென்பாதி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது70).

    இவர் கடந்த 3 மாதமாக சிறுநீரக பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தார்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜெயராஜ் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துமயங்கி விழுந்தார்.

    இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் ஜெயராஜை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் இறந்தார்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அகர திருக்கோவிலக்கா பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டு அகர திருக்கோவிலக்கா பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீரென ஆய்வு செய்தார்.

    மேலும், பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, நகராட்சி ஆணையர் வாசுதேவன், தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 0.50 ஹெக்டர் தர்பூசணி சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட்டது.
    • மணல் திடல்களில் தர்பூசணி அதிகளவில் பயிரிடுவது குறித்து ஆய்வு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    உலக வங்கி நிதியின் கீழ் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம், மயிலா டுதுறை மாவ ட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தர்பூசணி சாகுபடியை மேம்படுத்தும் வகையில் தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றிய பகுதிகளில் திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கனோடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு 0.50 ஹெக்டர் தர்பூசணி சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த பகுதியில் மணல் திடல்களில் தர்பூசணி அதிகளவில் பயிரிடுவது குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்ட வயலை உலக வங்கியின் சார்பாக தோட்டக்கலை நிபுணர் (உணவு மற்றும் விவசாய அமைப்பு) சாஜன் கொரியன், தோட்டக்கலை நிபுணர் டாக்டர் வித்யா சாகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து பார்வை யிட்டனர்.

    ஆய்வின்போது தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) ரமேஷ், தோட்டக்கலை அலுவலர் கவிராகவி, சீர்காழி தோட்டக்கலை அலுவலர் பார்கவி, உதவி தோட்டக்கலை அலுவ லர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • விக்னேஷ் மதுவுடன் பூச்சி மருந்தை (விஷம்) கலந்து குடித்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம்மணல்மேடு அருகே உள்ள உச்சிதமங்கலத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது40). இவருடைய உறவினர் சீர்காழி தென்னலகுடியைச் சேர்ந்த வீரமணி மகன் விக்னேஷ் (25) என்பவர் கார்த்திக் வீட்டிற்கு வந்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று காலை அருகில் உள்ள கிழாய் ஓடக்கரை பகுதியில் மதுவுடன் பூச்சி மருந்தை (விஷம்) கலந்து குடித்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • யாகசாலை அமைப்பதற்காக மேற்கு கோபுர வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.
    • இந்து சமய அறநிலையத்துறை 6 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து கண்டெடுக்கப்பட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

    இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் திருப்பணிகள் நிறைவு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் 16 ம் தேதி யாகசாலை அமைப்பதற்காக மேற்கு கோபுர வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள் ,55 பீடம் மற்றும் 462 செப்பேடுகள், மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

    இதனை அடுத்து ஐம்பொன் சிலைகளும் மற்றும் செப்பேடுகள் கோயிலின் பாதுகாப்பு அறையில் வட்டாட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாத்து வருகின்றனர்.

    17ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்ட குழுவை 6 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது இதுவரை தமிழ்நாட்டில் ஓலை சுவடியில் எழுதிய பதிகங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் முதன்முறையாக அதிக அளவு பதிகங்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டு தற்போது இங்கு சீர்காழி தான் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஐம்பொன் சிலைகள் கோயி லில் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு துப்பாக்கி ஏந்திய 2 அடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு கருதி கூடுதலாக இரும்பு கிரில் கேட் பொருத்தப்பட்டுள்ளதை மயிலாடுதுறை மாவட்ட (பொறுப்பு) காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கண்டார்.

    அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், புயல்.பாலசந்திரன், தனிப்பிரிவு ஆய்வாளர் சதீஸ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • சட்டை நாதர் சுவாமி கோயிலில் விலை மதிக்க முடியாத ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகளை கிடைத்துள்ளன.
    • கோயிலில் வைத்து பாதுகாத்து அருங் காட்சியகம் அமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற உறுப்பினர்களான முழுமதி இமயவரம்பன், ஜெயந்தி பாபு, நித்யாபால முருகன்,கலைச்செல்வி மதியழகன், ரம்யா தன்ராஜ்,வள்ளிமுத்து, ரேணுகாதேவி, சூரியபிரபா ,ரமாமணி, ராஜேஷ், பாலமுருகன், ராஜசேகர் ஆகிய 12 பேர் தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரியா சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர்.

    பின்பு நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டை நாதர் சுவாமி கோயிலில் விலை மதிக்க முடியாத ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகளை கிடைத்துள்ளன.

    இதனை கோயிலில் வைத்து பாதுகாத்து அருங் காட்சியகம் அமைக்க வேண்டும்.

    பக்தர்கள் வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வருகிற மே 24ஆம் தேதி நடைபெற இருப்பதால் கோயில் பகுதியில் குப்பைகள்அ திகளவு குவிந்து கிடக்கிறது.

    இதனை நகராட்சி நிர்வாகம் தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் துப்புரவு பணிகளை 12 நகர்மன்ற உறுப்பினர்கள் சேர்ந்து தங்களது சொந்த செலவில் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

    • ரூ.2.40 லட்சம் செலவில் பயனாளி ஒருவருக்கு வீடு கட்டும் பணி ஆய்வு.
    • ரூ.1.90 லட்சம் செலவில் நூலக கட்டிடம் பழுது பார்க்கும் பணி ஆய்வு.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகணி வாய்க்கால் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ. 5.25 லட்சம் செலவில் மிக விரைவில் தூர்வாரப்பட உள்ள பணியையும், தொடர்ந்து, வள்ளுவக்குடி ஊராட்சியில் பிரதம மந்திரி குடியி ருப்பு திட்டத்தின் கீழ் ரூ 2.40 லட்சம் செலவில் பயனாளி ஒருவர் வீடு கட்டும் பணியினையும், அதனைத் தொடர்ந்து, கொண்டல் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ 2.40 லட்சம் செலவில் பயனாளி ஒருவர் வீடு கட்டும் பணியினையும், கழுமலை ஆறுவாய்க்கால் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.14.5 இலட்சம் செலவில் மிக விரைவில் தூர்வாரப்பட உள்ள பணியையும், ஆதிதிராவிடர் கீழத்தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியினையும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அங்கு செயல்படும் ரேஷன் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.90 லட்சம் செலவில் நூலக கட்டிடம் பழுது பார்க்கும் பணியி னையும், ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியின் போது பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை செயற்பொறி யாளர் சண்முகம், உதவி பொறியாளர்கள் கனக.சரவணன்,சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், இளங்கோவன், பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, உடன் இருந்தனர்

    • அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • 5 ஆண்டுகள் முடிந்த மினி மைய ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பேபி தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் லதா முன்னிலை வகித்தனர். செம்பனார்கோயில் ஒன்றிய பொருளாளர் ஷகிலாபானு அனைவரையும் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்ட த்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    அங்கன்வாடி மையங்களுக்கு வெயிலின் தாக்கத்தால் மே மாதம் விடுமுறை வழங்க வேண்டும் 10வருடம் பணிபு ரிந்த பணியாளர்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    5 ஆண்டுகள் முடிந்த மினி மைய ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்ேவறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    பின்னர் மாவட்ட கலெக்டர் ஏ.பி மகாபார தியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம், மாவட்ட துணை தலைவர் ராணி எலிசபெத், துணை செயலாளர் மணிமேகலை, மயிலாடுதுறை ஒன்றியம் தலைவர் சுகுணா, செய்லர் கவிதாரூத், பொருளாளர் மரகதம். செம்பனார்கோயில் ஒன்றியம் வள்ளி.

    மகேஸ்வரி, சீர்காழி ஒன்றியம் கிருஷ்ணவேணி, ரேவதி, மல்லிகா, குத்தாலம் ஒன்றியம் லட்சுமி, சுமதி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

    • கடற்கரையில் ஓசோன் காற்று அதிகம் வீசப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
    • தூய்மை பணி மேற்கொள்ள பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமான ஒன்றாகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் ராட்சத பலூன்களை பறக்க விட்டனர்.

    அப்போது கலெக்டர் மகாபாரதி பேசியதாவது,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியினால் பூம்புகார் சுற்றுலா தளம் ரூ.24 கோடி செலவில் பூம்புகார் சுற்றுலா தளம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அதேபோல தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மேம்படுத்தும் பணி மிக விரைவில் தொடங்கப்படும். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை தற்போது அருங்காட்சியமாக உள்ளது.

    மேலும் இங்கே கடற்கரையில் ஓசோன் காற்று அதிகம் வீசப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    இத்தகைய தரங்கம்பாடி சுற்றுலா தளத்தை பிரபலப்படுத்தும் விதமாக ஓசோன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ஓசோன் என்பது ஆக்சிஜனின் மூலக்கூராகும். தூய்மை பண்ணி மேற்கொ ள்ள பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமான ஒன்றாகும்.

    சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வந்து செல்வதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சா ர்பில் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல அமைப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாதவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி, குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா, தரங்கம்பாடி பேரூராட்சி துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×