search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேந்தங்குடி, வள்ளலார்கோவிலில் குருபெயர்ச்சி விழா
    X

    சிறப்பு அலங்காரத்ததில் அருள்பாலித்த மேதா தட்சிணாமூர்த்தி.

    சேந்தங்குடி, வள்ளலார்கோவிலில் குருபெயர்ச்சி விழா

    • குரு பகவானுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • பரிகார ராசிக்காரர்கள் யாகத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    குரு பெயர்ச்சி விழா ஏப்ரல் 22 ம்தேதி சனிக்கிழமையில் இரவு 11. 24 மணிக்கு குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகினார்.

    இதனை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை சேந்தங்கு டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வதான்யேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் ( வள்ளலார் கோயிலில்) ரிஷப வாகனத்தில் அமர்ந்து ஸ்ரீமே தா தக்ஷிணாமூர்த்தியான குரு பகவானுக்கு மூலிகை, பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தானம், பலவகை பழங்கல் மற்றும் வாசனை பொருட்கள் கொண்டு கோயில் அர்ச்சகர் பாலச்சந்தர் சிவாச்சாரியார் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் தங்கம் அங்கி செலுத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஐந்து முகம் கொன்ட பத்து பூஜை தீபங்கள் காட்டப்பட்டது.

    இதில் பரிகார ராசிகள், பயன்பெறும் ராசிகள், பரிகாரத்தில் மற்றும் யாகத்திலும் பங்கு பெற்று பயனடைந்தனர்.

    தருமபுரம் ஆதீன தம்பிரான் சுவாமிகள் கலந்துக்கொன்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோயில் கண்காணிப்பாளர் அகோரம், முக்கிய பொருப்பாளர்கள் பக்தர்கள் திரளாக கலந்துக்கொன்டு வழிப்பட்டனர்.

    Next Story
    ×