search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு கலெக்டருக்கு அழைப்பு
    X

    கலெக்டர் மகாபாரதி.

    சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு கலெக்டருக்கு அழைப்பு

    • 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • கும்பாபிஷேகத்தன்று மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவிலில், 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

    இந்நிலையில், கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் அச்சிடப்பட்டு அதனை பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி அம்மன், சட்டைநாதர் உள்ளிட்ட சுவாமி சன்னதிகளில் வைத்து வழிபாடு செய்யப்ப ட்டது.

    அதன்பின்னர், அழைப்பிதழை விழாக்குழு வினர் பெற்றுக்கொண்டனர்.

    இதனை அடுத்து, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையிலான விழாக்குழு வினர் கும்பாபிஷேக அழை ப்பிதழை கொடுத்தனர்.

    மேலும், கும்பாபி ஷேகத்தன்று மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×