என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • தென்னை மரம் விழுந்து மின்கம்பிகள் அறுந்தன.
    • மரம் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அருகே இளைஞர்கள் பேசி கொண்டிருந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் கழுமலை அம்மன் கோயில் உள்ளது.

    இந்த கோயில் அருகே இருந்த தென்னை மரம் திடீரென அடியோடு விழுந்தது.

    எதிர்ப்புறம் இருந்த மின்கம்பத்தில் தென்னை மரம் விழுந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. உடனடி யாக மின்சார வாரியத்தினர் வருகை புரிந்து மின் இணைப்பைத் தூண்டித்தனர்.

    தொடர்ந்து தென்னை மரம் அப்புறப்படுத்தப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டது.

    தென்னை மரம் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதன் அருகே இளைஞர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

    மேலும் ஒரு கார் ஒன்றும் மரம் விழுவதற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    அடுத்த சில நிமிடங்களில் தென்னை மரம் அடியோடு விழுந்தது.

    முன்கூட்டியே விழுந்து இருந்ததால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்க கூடும் என சம்பவத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சி விலகாமல் கூறினர்.

    • காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
    • முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ளவும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த (ஜூன்) மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்க லாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பழைய சாலையை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும்.
    • சாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் தேர் ஓடும் வீதிகள்,கோயிலை சுற்றியுள்ள வீதிகள், தியாகிசாமிநாதர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதில் நகர்புரத்தில் சுமார் 1கோடியே 54 லட்சம் மதிப்பில் 37 சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    சீர்காழி பழைய பேருந்துநிலையம் பகுதியில் முக்கிய சாலையான பாரத வங்கி அருகே சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    சாலை அமைப்பது குறித்து விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்காமல்பழைய சாலைகள் அகற்றப்படாமல், அதன் மீது புதிய தார் சாலை தரமற்ற முறையில் அமைப்பதாக குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், புதிய சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதுடன், பணியை மேற்கொண்டவர்களிடம் விளக்கம் கேட்டனர்.

       இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பழைய சாலையை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும், தரமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் அப்பகுதியில் மட்டும் சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.

    • நீர், நிலம், காற்று மாசுபடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
    • நெகிழியை ஒழிப்போம் என கோஷங்களை எழுப்பினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுபம் வித்யா மந்திரி பப்ளிக் பள்ளி சார்பில், மாணவ-மாணவிகள் பொது மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

    கல்வி அறக்கட்டளை நிறுவனர் கியாந்சந்த் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் கிருஷ்ணகுமார், மகேஸ்வரி, சுதேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி பழைய பேருந்து நிலையம்,புதிய பேருந்து நிலையம் அருகே பள்ளி மாணவர்கள் நீர்,நிலம்,காற்று மாசு படுவது குறித்து பொது மக்க ளிடையே விழிப்பு ணர்வை நாடகம் மூலம் நடத்தினர்.

    மரங்களை வளர்ப்போம், நீர்நிலைகளை பாதுகாப்போம்,நெகிழியை ஒழிப்போம் என கோஷங்களை எழுப்பினர். முடிவில் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்

    • வைத்தீஸ்வரன் கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் சாமி தரிசனம் செய்தார்.
    • அவருக்கு தருமபுரம் ஆதீனம் கோவில் பிரசாதங்கள் வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் அமைந்துள்ள வைத்தியநா தசுவாமி கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார்.

    அவருக்கு தருமை ஆதீனம் கோவில் பிரசாதங்களை வழங்கினார்.

    • கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • பக்தர்கள் பசுமாட்டிற்கு வாழை பழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    இந்த கோயிலில் ஆனி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடந்தது.

    முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாரனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து கோ சாலையி லிருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசு மாட்டிற்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோபூஜை வழிபாடு நடை பெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு வாழை பழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து வணங்கி வழிபட்டனர்.

    • 21 வகையான திரவிய பொருட்களால் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • சண்முகார்ச்சனை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்திய நாதசுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் தனி சன்ன தியில் செல்வமுத்துக்கு மாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

    இக்கோயிலில் மண்டலா பிஷேக கிருத்திகையை யொட்டி செல்வமுத்துக்கு மாரசுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்து க்குமார சுவாமிக்கு மஞ்சள், திரவியபொடி, பால்,தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் முதலான 21 வகையான நறுமன திரவிய பொருட்க ளால் சிறப்பி அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மலர்கள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகார்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்து பக்த ர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.

    • படித்த, கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
    • தடையற்ற இணையதள இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் அமைக்க https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in. என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளி ஆபரேட்டர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கணினியில் நல்ல அறிவும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியை படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

    இ-சேவை மைய கட்டிடம் 100 சதுர மீட்டருக்குள் இருக்கவும், மையத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இருத்தல் அவசி யமாகும்.

    குறைந்தபட்சம் 2 mbps அலைவரிசையுடன் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற இணையதள இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் அமைக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிர்வு முறையின் விதிகளின்படி இயக்குதல் வேண்டும் என தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி ஆபரேட்டர்களுக்கு அடையாள அட்டை எண் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும்.

    படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் வைத்து வருமானம் ஈட்டிக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது தெரியவந்தது.
    • இவ்வாறு வாகனத்தை இயக்கினால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் அறிவுறுத்த லின்படி, சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநா தன் சீர்காழி, தென்பாதி ஆகிய பகுதிகளில் இன்று காலை திடீர் வாகன தணிக்கை செய்தார்.

    அப்போது பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள், தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது.

    இதனை அடுத்து 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.

    தொடர்ந்து இவ்வாறு வாகனத்தை தணிக்கை செய்து உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் பள்ளி மாணவர் ஏற்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் எச்சரித்தார்.

    • குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 800-க்கு தனியார் வியாபாரிகளால் ஏலம் கேட்கப்பட்டது.
    • விவசாயிகளுக்கு நஷ்டமாகும் விலையை தனியார் வியாபாரிகள் கேட்பதால் ஏலத்தை புறக்கணித்தனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோயில் ஆகிய நான்கு இடங்களில் வேளாண் விற்பனை குழு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்ப ட்டுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருத்தி நல்ல விலைக்கு விற்பனையா னதால், அந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதல் பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

    சாகுபடி செய்யப்பட்ட பருத்தி அறுவடைப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அறுவடை செய்யப்படும் பருத்தி 100 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக எடுத்து வரப்படுகிறது.

    இங்கு திருப்பூர், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதரும் வியாபாரிகள் மறைமுக ஏல முறையில் பருத்தியை வாங்கிச் செல்கின்றனர்.

    குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுற்றுப்பகுதிகளில் இருந்து சுமார் 1400 விவசாயிகள் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்பதற்காக தங்கள் பருத்தியை எடுத்து வந்திருந்தனர்.

    அதிகபட்சமாக குவிண்டால் 7080 ரூபா ய்க்கும், குறைந்தபட்சமாக 5800 ரூபாய்க்கும் தனியார் வியாபாரிகளால் ஏலம் கேட்கப்பட்டது.

    கடந்த ஆண்டு குறைந்தப ட்சமாக பருத்தி 8000 ரூபாய் வரை விலை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தனியார் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை மோசடியில் ஈடுபடுவதாகவும், உரம் விலை மற்றும் கூலி ஆட்கள் செலவு, வண்டி வாகன செலவு ஆகியவை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு நஷ்டமாகும் விலையை தனியார் வியாபாரிகள் கேட்பதாக கூறி, ஏலத்தை விவசாயிகள் புறக்கணி த்தனர்.

    தொடர்ந்து குத்தாலத்தில் மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து அதிகா ரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் இரவு 10.30 மணி வரை சாலை மறியல் இரண்டாவது முறையாக நடைபெற்றது.

    மறுபடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் நாளை காலை வியாபாரிகளை அழைத்து பேசுவதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    • நந்திக்கு பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புன்கூ ரில் நந்தனார் வழிபட நந்தி விலகிய சிவலோக நாதனார் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சவுந்தர நாயகி உடனாகிய சிவலோகநா தர்சுவாமி அருள்பாலிக்கிறார்.

    இக் கோயிலில் தஞ்சைக்கு அடுத்தபடியாக பெரிய நந்தி உள்ளது. பிரதோஷம் தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி வியாழக்கிழமை பிரதோஷத்தையொட்டி நந்திக்கு, பால், பன்னீர், விபூதி ,பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களும் காட்சியளித்தார்.

    தொடர்ந்து தீபாரணை காட்டப்பட்டு அன்னதானம் வழங்கப்ப ட்டது. இதே போல் சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோவில், தென்பாதி கைவிடலப்பர்சு வாமி கோவில், சீர்காழி தாளபுரீஸ்வரர்கோவில், நாகேஸ்வர முடையார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கு வேண்டும் என அறிவுறுத்தினார்.
    • ஆவின் பால் தயாரிக்கும் கட்டிடம் கட்டும் பணியை பார்வையிட்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆரப்பள்ளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் கலைஞர் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கிராம ஊராட்சி செயலகம் கட்டும் பணி, ஆவின் பால் தயாரிக்கும் கட்டிடம் கட்டும் பணி, அரசு வீடுகள் கட்டும்பணி, ஊராட்சியில் 600 குடும்பங்க ளுக்கு தனிநபர் உறிஞ்சிகுழி அமைக்கப்பட்டு வரும் பணி,கழிவு நீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி, அங்குள்ள சாவடிக்குளம் சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை கட்டும் பணி உள்ளிட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இது குறித்து கலெக்டர் அதிகாரிகளிடம் கூறுகை யில், அனைத்து பணிகளையும் தரமாகவும் விரைந்தும் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் ஒன்றிய ஆணையர் அருள்மொழி, பிடிஓ ரெஜினாராணி, ஒன்றிய பொறியாளர்கள்தாரா, பலராமன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அமலாராணி, ஊராட்சி மன்ற தலைவர் வனிதாமுரு கானந்தம் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×