search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடியோடு சாய்ந்த தென்னை மரம்
    X

    அடியோடு சாய்ந்த தென்னை மரம்

    • தென்னை மரம் விழுந்து மின்கம்பிகள் அறுந்தன.
    • மரம் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அருகே இளைஞர்கள் பேசி கொண்டிருந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் கழுமலை அம்மன் கோயில் உள்ளது.

    இந்த கோயில் அருகே இருந்த தென்னை மரம் திடீரென அடியோடு விழுந்தது.

    எதிர்ப்புறம் இருந்த மின்கம்பத்தில் தென்னை மரம் விழுந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. உடனடி யாக மின்சார வாரியத்தினர் வருகை புரிந்து மின் இணைப்பைத் தூண்டித்தனர்.

    தொடர்ந்து தென்னை மரம் அப்புறப்படுத்தப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டது.

    தென்னை மரம் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதன் அருகே இளைஞர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

    மேலும் ஒரு கார் ஒன்றும் மரம் விழுவதற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    அடுத்த சில நிமிடங்களில் தென்னை மரம் அடியோடு விழுந்தது.

    முன்கூட்டியே விழுந்து இருந்ததால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்க கூடும் என சம்பவத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சி விலகாமல் கூறினர்.

    Next Story
    ×