search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற 24-ந் தேதி இலவச மருத்துவ முகாம்
    X

    கலெக்டர் மகாபாரதி.

    வருகிற 24-ந் தேதி இலவச மருத்துவ முகாம்

    • காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
    • சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை இலவசமாக வழங்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டாரம், திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலை ப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, ரத்த பரிசோதனை ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்படும்.

    மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு டாக்டர்களால் இலவசமாக வழங்கப்படும்.

    இத்துடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை இலவசமாக வழங்கப்படும்.

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய தகுதிவாய்ந்த பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள்.

    மேலும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×