என் மலர்
மயிலாடுதுறை
- பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
- வைத்தீஸ்வரன் கோவிலில் சுற்றிலும் நான்கு வீதிகளிலும் போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.
செயல் அலுவலர் அசோகன், துணைத் தலைவர் அன்புச் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இளம் நிலை உதவியாளர் பாமா மன்ற தீர்மானங்களை படித்தார்.
தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
பின்னர் உறுப்பினர்க ளிடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:-
கென்னடி (திமுக):-
எனது வார்டு பகுதியில் உள்ள சாலைகளில் மண்டி கிடக்கும் முற் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரியங்கா (அதிமுக):-
எனது பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராகவும், காவிநீராகவும் மாறியதால் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே கை பம்பு அமைத்து தர வேண்டும். சியாமளா தேவி (திமுக):-எனது வார்டு பகுதியில் தினம்தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூடுதலாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
முத்துக்குமார் (பாமக):-
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் தினமும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
ராஜ கார்த்திக் (அதிமுக):-
பேரூராட்சியில் காலியாக உள்ள மேஸ்திரி பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
வித்யா தேவி (சி பி ஐ);-
வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையத்தில் பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் தாட்கோ கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனா (அதிமுக):-
எனது பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
ஆனந்த் (திமுக):-
எனது பகுதியில் கூடுதலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குப்பை த்தொட்டிகளை அமைத்து தர வேண்டும். செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவிலில் சுற்றிலும் நான்கு வீதிகளிலும் போக்குவரத்து தடை ஏற்படாத வகையில் போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும்.
பத்மாவதி (திமுக):-
வைத்தீஸ்வரன் கோவில் மேல வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கோவில் வரும் பக்தர்களுக்கு ஏதுவாக போலீசார்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
துணைத் தலைவர்:-
பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமப்புகளை அகற்றுவது குறித்து முன்கூட்டியே பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தலைவர்:-
உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப நிறையற்ற ப்படும். குடிநீர், தெருவிளக்கு, சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பத்தினருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
- பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- தாக்குதலில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன், அவரது மகன் ராம்குமார் மற்றும் ரஞ்சித், காமராஜ் ஆகிய 4 பேர் மீது பாலையூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த பாலையூர் அருகே கோமல் கிராமத்தில் ஊராட்சி தலைவராக உள்ளவர் எழிலரசி. இவரது கணவர் பாலசுப்பிரமணியன்.
இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நாட்டாண்மையாக இருந்தபோது கோமல் கிராமத்தில் திருமண மண்டபம் கட்டுவதாக கூறி அப்பகுதியில் உள்ள குளத்தில் மண் எடுத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தில் தொடங்கப்பட்ட திருமண மண்டபம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மண்டபம் கட்டுமான பணிக்கு செய்யப்பட்ட செலவை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதற்கு கிராமமக்கள் கணக்கு கேட்டதாகவும், அதற்கு பாலசுப்பிரமணியம் உரிய கணக்கு காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், அவரை கிராம நாட்டாண்மை பொறுப்பில் இருந்து கிராமமக்கள் நீக்கியுள்ளனர்.
இதனால் இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், பாலசுப்பிரமணியன் ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அவரது வீட்டின் கொல்லையில் நேற்று முன்தினம் மண் எடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கோமல் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் (வயது 60), குணசேகர் (43) ஆகியோர் தட்டிக்கேட்டனர். பின்னர், இதுகுறித்து பாலையூர் போலீசில் புகார் அளித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் மற்றும் அவர் ஆதரவாளர்கள் 15 பேர் நேற்று அரிவாள், உருட்டுக்கட்டை, கல் ஆகியவற்றை கொண்டு செல்வராஜ், குணசேகர் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் தலையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும், சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. தகவலறிந்த உறவினர்கள் அனைவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன், அவரது மகன் ராம்குமார் மற்றும் ரஞ்சித், காமராஜ் ஆகிய 4 பேர் மீது பாலையூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஒரு ஏக்கர் பரப்பளவில் அங்கக வேளாண்மையில் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு வழங்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்த (2023-24)-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி, சக விவசாயிகளையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது.
விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளத்தில் வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.100 ஆகும்.
குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில் அங்கக வேளாண்மையில் பயிர் சாகுபடி செய்ய வேண்டும். முழு நேர அங்கக விவசாயியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை குடியரசு தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.
இதில் முதல் பரிசாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பதக்கம், 2-ம் பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பதக்கம் வழங்கப்படும்.
மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்டு வருகிறது.
- சவுடு மண் ஏற்றி வரும் லாரிகளை வழிமறைத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீர்காழி:
விழுப்புரம்- நாகை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது இந்த விரிவாகப் பணிக்காக விவசாய நிலங்கள் மற்றும் மனை பிரிவு, வீடுகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சீர்காழி தாலுகாவை பொறுத்தவரை சட்டநாதபுரம், செம்ப தனிருப்பு, காரைமேடு, காத்திருப்பு, அரசூர், சோதியக்குடி, எருக்கூர், தாடாளன் கோவில், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 5000 க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி கடந்த 2014 ம் ஆண்டில் இருந்து சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 2017 -ம் ஆண்டு ஒரு சில விவசாயிகளிடம் முன் பணத்தை மட்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறை கொடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்கள் மட்டுமில்லாமல் கூடுதல் நிலத்தையும் நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணியில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 6 வருடங்களாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு பணம் கொடுக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை மனுக்களும் அளித்துள்ளனர்.
அவ்வாறு கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் சீர்காழி புறவழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெறும் இடத்திற்ககு சென்று சாலை விரிவாக்க பணிக்காக சவுடு மண் ஏற்றி வரும் லாரிகளை வழிமறைத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயின் முக்கிய கோரிக்கையாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அரசின் சட்ட திட்டங்களை பின்பற்றாமல் வினை நிர்ணயம் செய்துள்ளதாகவும் இன்றைய சந்தை விலைக்கு நிர்ணயம் செய்து தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 28-ந் தேதி முதல் 3 நாட்கள் போட்டிகள் நடைபெற்றது.
- முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கம் கொடுக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் சாய் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான 9-வது ஆடவர் கால்பந்தாட்ட போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது.
சக்தி நினைவு கால்பந்து கழகம் மற்றும் மயிலை கால்பந்து கழகம் இணைந்து நடத்திய போட்டியில் மயிலாடுதுறை சென்னை கோயம்புத்தூர் திருச்சி மதுரை, சேலம் காரைக்கால் மற்றும் கேரளாவில் இருந்து ஒரு அணி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
கடந்த 28ஆம் தேதி முதல் 3 தினங்கள் நடைபெற்ற போட்டியில் இறுதிப்போட்டிக்கு மயிலாடுதுறை மயிலை கால்பந்து கழக அணியும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி நேற்று பரபரப்பாக நடைபெற்றது. இதில் மயிலை கால்பந்து கழகம் 3 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முதலிடம் பிடித்த மயிலாடுதுறை அணிக்கு வெற்றிகோப்பை 30 ஆயிரம் ரொக்க தொகையும், 2ம் இடம் பெற்ற திருச்சி செயின்ட்ஜோசப் அணிக்கு வெற்றிகோப்பை மற்றும் 25 ஆயிரம் ரொக்கதொகை வழங்கப்பட்டன.
மேலும் அரையிறுதி போட்டியில் விளையாடி 3ம் இடம்பிடித்த காரைக்கால் அணி, 4ம் இடம் பிடித்த சென்னை சிடானி எஃப்சி அணிக்கு கோப்பை களும் ரொக்கபரிசும் வழங்கப்பட்டன.
இதில் அனைவரையும் பாராட்டி தமிழ்ச் சங்கத் தலைவர் பவுல்ராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
- முதிர்வுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- அடுத்த மாதம் 8-ந் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகம் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடுதல் ஜூன் 2023 முதல் ஜூன் 2024 வரை முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாது காப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த பெண் குழந்தைகளின் வயது 18-ஐ கடந்தும் முதிர்வுத்தொகை வழங்கப்படாமல் உள்ளவர்களின் விபரங்களை தொடர்ந்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்று அவர்களுக்கு முதிர்வுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள முதிர்வுத்தொகை பெறாத பயனாளிகளை கண்டறியும் முகாம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 8-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் அனைத்து பயனாளிகளும் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதம் அடைந்தது.
- இச்சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் இருந்து பெருந்தோட்டம் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் தருமபுரம் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.
பஸ்சில் ஓட்டுநர் கஜேந்திரன், நடத்துனர் காசிநாதன் பணியில் இருந்தனர். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கி விட்டு அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதம் அடைந்தது.
அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு எதுவும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் ஆகியோர் பஸ்சினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.
- மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மடப்புரம் பெரிய சாவடி குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன் (வயது45). கீற்று முடியும் தொழில் செய்யும் இவரது கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அருகருகே கூறைவீடு இருந்ததால் 20க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கலைவாணன் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜெயக்குமார் ஜெய பிரதாபன் , மணிமாறன், ஜெகதீஷ், கருணாநிதி , சுரேஷ், பிரேமா, நடராஜன் உள்ளிட்ட 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முதலுதவி பெற்று 12 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கருணாநிதி. சுரேஷ். சரவணன் ஆகிய மூன்று பேர் பேர் பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த செம்பனார்கோவில் மற்றும் மயிலாடுதுறை போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ் நிஷா சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சாலை ஓரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
சீர்காழி:
சீர்காழி தேர் மேல வீதியின் சாலை ஓரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை. இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை யாரும் கொலை செய்து இங்கு வந்து போட் டார்களா அல்லது அவர் வந்த இடத்தில் இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றி போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
- என்.எல்.சி. வாய்க்கால் வெட்டி மண்ணை போட்டு நெல்மணி முளைத்த வயல்களை சேதப்படுத்தியது.
- குறுவை நேரடி மற்றும் நடவு பயிர்கள் 75 சதவீதம் அழிந்துவிட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தில் திமுக, மதிமுக, பா.ம.க. உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 800-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணையும் விழா நடந்தது.
அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் பி.வி. பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ., ம.சக்தி, ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நகர செயலாளர் வினோத் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு மாற்று கட்சியிலிருந்து விலகி வந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். மதிமுகவிலிருந்து அண்மையில் விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மார்கோனி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:
நீர் முறையாக வராததால் கடைமடைப் பகுதிகளில் குறுவைப் பயிர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் நேரிடை விதைப்பு மற்றும் நடவு செய்த குறுவை பயிர்கள் செத்து மடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு இதனை காக்க எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
குறுவை நேரடி மற்றும் நடவு பயிர்கள் 75 சதவீதம் அழிந்துவிட்டது. மீதமுள்ள பயிர்களை காப்பாற்ற முறை வைக்காமல் பாசனத்திற்கு அரசு போதிய தண்ணீர் வழங்க வேண்டும்.
என்.எல்.சி விவகாரத்தில் கதிர்கள் வந்த பயிர்கள் 10, 15 தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. என்எல்சி வாய்க்கால் வெட்டி மண்ணை போட்டு நெல்மணி முளைத்த வயல்களை சேதப்படுத்தியது. இதனால் பயிர்களை இழந்து விவசாயிகள் தவிக்கின்றனர். என்எல்சி நிறுவனம் அறுவடை முடியும் வரை பணியை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்கள் குத்து விளக்கு வைத்து, பூ சாற்றி விளக்கு பூஜை செய்தனர்.
- திரவுபதி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன், கட்டளை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பெண்கள் வரிசையாக அமர்ந்து குத்து விளக்கு வைத்து, பூ சாற்றி விளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று திரவுபதி அம்மனை தரிசனம் செய்தனர்.
- குமாரநத்தம் கிராமத்தில் நல்ல குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- திருநகரி ஆகிய பகுதிகளில் சுடுகாட்டு சாலை மற்றும் கொட்டகை அமைக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் கமலஜோதிதேவேந்திரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் உஷாநந்தினி, ஆணையர்கள் சரவணன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். எழுத்தர் சரத் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு :-
துர்காமதி : மருதங்குடி ஊராட்சி குமாரநத்தம் கிராமத்தில் நல்ல குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையர் சரவணன்: குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப் படும். ஏற்கனவே 84 ஆயிரம் செலவில் அப்பகுதியல் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து வழங்கப்பட்டு வந்தது.
விஜயகுமார்: தில்லைவிடங்கன், புதுதுறை, வெள்ளபள்ளம் ஆகிய பகுதிகளில் குடிதண்ணீர் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். வாரம் ஒரு முறை மட்டுமே புதுத்துறை பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ரிமா: அகணி ஊராட்சியில் வி.ஏ.ஓ அலுவலகம், பகுதி நேர அங்காடிக்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும்.
ஜான்சிராணி: நகராட்சி கவுன்சிலர்களுக்கு அரசின் மதிப்பூதியம் வழங்கப்படுவது போல் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும். இது தொடர்பாக மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு அனுப்ப வேண்டும்.
ஆனந்தி: கவுன்சிலர்கள் மன்றத்தில் தெரிவிக்கும் கோரிக்கைகளை பதிவு செய்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடராஜ்: நெப்பத்தூர், திருநகரி ஆகிய பகுதிகளில் சுடுகாட்டு சாலை மற்றும் கொட்டகை அமைக்க வேண்டும்.
வள்ளி: பெருந்தோட்டம் ஊராட்சியில் நாயக்கர்குப்பம், மடத்துக்குப்பம் ஆகிய பகுதிகளில் புதிய போர் அமைத்து நல்ல குடிதண்ணீர் வழங்க வேண்டும்.
இதற்கு பதில் அளித்து தலைவர் கமலஜோதி தேவேந்திரன் பேசும்போது,
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அந்தந்த துறைகளின் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செய்யப்படும் பணிகள் குறைபாடுகள் இன்றி துரிதமாக நடைபெற்று வருகிறது . கவுன்சிலர்கள் கேட்கும் பணிகள் ஒவ்வொன்றாக பொது நிதிக்கு ஏற்றவாறு செய்து தரப்படும் என்றார்.






