search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Short net"

    • நேற்று முதல் தரங்கம்பாடி மீனவர்கள் தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • பிரச்சினை தொடர்பாக நேற்று தரங்கம்பாடியில் 18 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கடலில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள் மூன்று பேரையும் தரங்கம்பாடி மீனவர்கள் சிறைப்பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

    இச்சம்பவம் அறிந்து வந்த கடலோர காவல் படை மற்றும் பொறையார் போலீசார் மீனவ பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சந்திரபாடி மீனவர்களை பொறையார் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

    மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் படகில் இருந்த மீன்கள் தரங்கம்பாடி துறைமுகத்தில் ஏலமிடப்பட்டது.

    இந்த பிரச்சனை தொடர்பாக நேற்று முதல் தரங்கம்பாடி மீனவர்கள் தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சுருக்குமடி வலை பிரச்சினை தொடர்பாக நேற்று தரங்கம்பாடியில் 18 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஆறு மாவட்டங்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் அடுத்த கட்டமாக நடத்த இருப்பதாகவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோ யில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழ மூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன் காரணமாக 4000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 300 மேற்பட்ட விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    இந்த தொழில் மறியல் காரணமாக கடலோர கிராமங்களில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

    • கடலூரில் சுருக்குமடி வலையை கைப்பற்றி அதிகாரிகள் சேதப்படுத்தினர்.
    • தொடர்ந்து நடந்த ஆய்வின்போது மீன்பிடிப்பதற்கு உதவியாக இன்னொரு நாட்டு படகு நின்றது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன் வளத்துறை தடைவிதித்து உள்ளது. அதன்படி மீன் வளத்துறை அதிகாரிகள் கடல் பகுதியில் ரோந்து சுற்றி வருகிறார்கள். இன்று காலை மீன்வளத்துறை ஆய்வாளர் பதுருதீன் தலைமையில் சார் ஆய்வாளர் பிரபாகரன், கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு காவலர் சாம்பவசிவம் மற்றும் ஊழியர்கள் கடல் பகுதியில் ரோந்து சென்றனர். சுபஉப்பலவாடி பகுதியில் ரோந்து சென்ற போது ஒரு படகில் சுருக்குமடி வலைலைய பயன்படுத்தி மீன் பிடித்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். விசாரணையில் படகில் வந்த மீனவர்கள் புதுவை பனித்திட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. உடனே மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலையை பறிமுதல் செய்து அதனை பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தினர். தொடர்ந்து நடந்த ஆய்வின்போது மீன்பிடிப்பதற்கு உதவியாக இன்னொரு நாட்டு படகு நின்றது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

    • சுருக்குமடி வலை வைத்திருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 60 மீனவர்களுக்கு நோட்டீஸ் அளித்தனர்.
    • தடை செய்யப்பட்ட சுருக்கமடி வலை மற்றும் படகுகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது என கூறினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கமடி வலை மற்றும் படகுகள் பயன்படுத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதோடு, மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கமடி வலை மற்றும் படகுகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது என கூறி கடலூர் மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டம் அறிவித்து நடத்தி வந்தனர்.

    மேலும் நேற்று கருப்பு கொடி ஏற்றி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கடலூர் மாவட்டத்தில் 7- க்கும் மேற்பட்ட கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கடலூர் மாவட்ட எல்லையில் நிறுத்த அனுமதிக்க கூடாது. ஆகையால் உடனடியாக தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை மற்றும் படகுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டாட்சியர் அதியமான் கவியரசு கடுமையான உத்தரவிட்டார்.


    இந்த நிலையில் இன்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மாவட்டத்தில் உள்ள ஏழு கிராமத்திற்கு நேரில் சென்றனர். பின்னர் 60 மீனவர்களிடம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் படகுகள் இருப்பதை கண்டறிந்து அவர்களிடம் அதிரடியாக நோட்டீஸ் வழங்கினர். இதில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் படகுகளை கடலூர் மாவட்ட எல்லைகளில் நிறுத்தக்கூடாது, மீறி நிறுத்தினால் வலை மற்றும் படகுகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இது மட்டுமின்றி கடலூர் மாவட்ட கடற்கரையில் போலீசார் உடன் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் ஏறேனும் தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை மற்றும் படகுகளை நிறுத்தி உள்ளார்களா? என்பதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக கடலூர் முதுநகர் மற்றும் துறைமுகம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர் கிராமங்களில் பெரும் பதட்டத்துடன் காணப்பட்டு வருகின்றது.

    ×