என் மலர்
மயிலாடுதுறை
- பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மனைவி சரஸ்வதியுடன் வந்தடைந்தார்.
- மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது
மாநாட்டிற்கு தலைமை தாங்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மனைவி சரஸ்வதியுடன் வந்தடைந்தார்.
இந்த மாநாட்டில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து ஜாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பிரதானமாக அமைய உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
இந்நிலையில், பாமக மாநாடு நடைபெறும் பூம்புகார் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பாமக தொண்டர்கள் அவதியடைந்துள்ளனர்.
- மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்காக பூம்புகார் எல்லைகளில் வழிகாட்டி பலகைகள், அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட போலீஸ் துறை சார்பில் 41 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகாரில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு இன்று மாலை பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தலைமையில் நடக்கிறது.
பெண் உரிமையை காக்க, பெண்கள் முன்னேற்றம் காண, பெண்களுக்கு எதிரான வன்முறையை போக்கிட, அரசு பதவிகளில் பெண்கள் அதிகாரத்தில் அமர்ந்திட, மது, போதை பொருட்களால் ஏற்படும் சீரழிவில் இருந்து பாதுகாத்திட, சம உரிமை, சம அந்தஸ்து, சம வாய்ப்பு, சமபங்கு என அனைத்திலும் பெண்கள் முன்னேற்றம் காண பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழா மாநாடு இன்று மாலை 3 மணியளவில் நடக்கிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தலைமையில் நடக்கும் மாநாட்டில் சரஸ்வதி ராமதாஸ், மகள் காந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்கள் ம.க.ஸ்டாலின், பாக்கம்.சக்திவேல், தஞ்சை மண்டல பா.ம.க. செயலாளர் ஐயப்பன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பா.ம.க. வன்னியர் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான மகளிர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து ஜாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பிரதானமாக அமைய உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர்கள் என சுமார் 3 லட்சம் பேர் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பிரமாண்ட நுழைவாயிலுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டு, மேடை போடப்பட்டு, அனைத்து பணிகளும் நிறைவடைந்தது.
மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்காக பூம்புகார் எல்லைகளில் வழிகாட்டி பலகைகள், அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக மணி கிராமம், மேலையூர், பல்லவனேஸ்வரம், காவிரிப்பூம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தும் இடமும் அமைக்கப்பட்டு, அதற்கான முறையான வழிகாட்டி பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் மகளிர் தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்கள் மாநாட்டில் பங்கேற்று மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்பும் வகையில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டில் பங்கேற்க வருபவர்கள் பூம்புகார் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு, அதனை கடலோர காவல் குழும போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மாநாட்டிற்கு பங்கேற்பவர்களுக்கு உரிய குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டு பந்தலில் அனைவரும் அமரும் வகையில் விரிவான பந்தல் மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டு மாநாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் ஏராளமான எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு, மின்னொளியில் பந்தல்கள் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சு வசதிகள், சுகாதார குழுவினர்களும் அமைக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்ட போலீஸ் துறை சார்பில் 41 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் என ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) பொதுகுழு நடத்தப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று டாக்டர்.ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டி.எஸ்.பி. சுந்தரேசன் அலுவலகத்திற்கு நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
- லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள்.
மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வருபவர் சுந்தரேசன். அவருக்கு வழங்கப்பட்டிருந்த அலுவலக வாகனம் திரும்ப பெறப்பட்டதால், அவரது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்றதாக கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுந்தரேசன், "லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள். எனது அலுவலக வாகனத்தை எடுத்துக்கொண்டு மனரீதியாக என்னை சித்ரவதை செய்கிறார்கள். நான் தன்னிச்சையாக பேட்டியளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் 'சஸ்பெண்டு' செய்யப்படுவேன் என்றும் தெரிந்துதான், இந்த பேட்டி அளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது ஊழியருக்கான விதிகளை மீறி ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
- தி.மு.க. என்றாலே வாரிசு அரசியல்.
குத்தாலம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொண்டார். அப்போது மாலை மயிலாடுதுறை சின்ன கடைவீதியில் ரோடு ஷோ மூலம் வாகனத்தில் நின்றவாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
50 மாத தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கொடுக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என பயம் வந்துவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்கள் குறித்து கவலைப்படவில்லை. வீட்டு மக்களை பற்றிதான் கவலைப்படுகிறார். தி.மு.க. என்றாலே வாரிசு அரசியல். மன்னர் ஆட்சி இந்தியாவில் ஒழிக்கப்பட்டது. மீண்டும் மன்னர் ஆட்சி அமைப்பதற்கு மு.க.ஸ்டாலின் துடிக்கிறார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடுமையான நெருக்கடி தரப் போகிறார்கள். வி.சி.க. ஆட்சியில் பங்கு கேட்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன. தேர்தல் நெருங்கும்போது சில கட்சிகள் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வரும். தி.மு.க. ஆட்சியல் நேர்மையான அதிகாரிகளுக்கு மதிப்பில்லை. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசனின் வாகனத்தை பறித்துள்ளனர். முதலமைச்சர் 'ஓரணியில் தமிழ்நாடு' மூலம் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேருங்கள் என வீடு, வீடாக செல்கிறார். மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது பெட்டியில் மனு வாங்கினார்கள், ஆட்சிக்கு வந்தவுடன் பெட்டியில் உள்ள மனுக்களை எடுத்து தீர்வு காண்பேன் என தொவித்தனர். இப்படி கூறிவிட்டு எதற்கு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை தொடங்கி மக்களை ஏமாற்றுகின்றனர்.
தி.மு.க. ஆட்சியில் மளிகை பொருட்கள் முதல் கட்டுமான பொருட்கள் வரை அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழக மக்கள் தொடர்ச்சியாக இ.பி.எஸ்.க்கு டாடா, பை - பை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
- உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து இ.பி.எஸ். அவதூறு பரப்பி வருகிறார்.
மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
* விமர்சனம் என்கிற பெயரில் நமக்காக விளம்பரம் செய்யும் இ.பி.எஸ்-க்கு நன்றி.
* தேர்தலுக்கு முன் பெட்சீட் போட்டு வாங்கிய மனுக்களை எக்ஸல் ஷீட்டாக மாற்றி வொர்க் ஷீட்டாக மாற்றினேன்.
* மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களையும் சென்றடைகிறது.
* தமிழக மக்கள் தொடர்ச்சியாக இ.பி.எஸ்.க்கு டாடா, பை - பை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
* சுந்தரா டிராவல்ஸ் போல் ஒரு பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
* சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல் இ.பி.எஸ். வாயிலிருந்து பொய்யாக வருகிறது.
* உங்கள் குடும்ப நலனுக்காக டெல்லி சென்று அ.தி.மு.க.வை அடகுவைத்தவர் எடப்பாடி பழனிசாமி.
* ரெய்டில் இருந்து குடும்பத்தை காக்கவே இ.பி.எஸ். அமித்ஷா வீட்டின் கதவை தட்டினாரே தவிர நமது மக்களுக்காக அல்ல.
* சொந்த கட்சியினரான அ.தி.மு.க.வினரே எடப்பாடி பழனிசாமியை நம்பாதபோது தமிழக மக்கள் எப்படி நம்புவர்?
* குடும்பத்தை காப்பாற்ற டெல்லியின் சதுரங்க வேட்டையில் சிக்கி தொண்டர்களை ஏமாற்றினார் இ.பி.எஸ்.
* தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் அ.தி.மு.க.-வினர் வீட்டுக்கும் போவதை இ.பி.எஸ்.-ஆல் மறுக்க முடியுமா?
* உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து இ.பி.எஸ். அவதூறு பரப்பி வருகிறார்.
* நம்மை ஒருபோதும் ஸ்டாலின் கைவிட மாட்டார் என தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
* தமிழகத்தில் அடுத்து அமைய போவதும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் என்பதை உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்
- குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
- பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.
மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
* மயிலாடுதுறையில் சீரான வாகன போக்குவரத்தை உறுதி செய்யும் நீடூர் ஊராட்டிசியில் 85 கோடியில் புதிய ரெயில்வே மேம்பாலம்.
* குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
* வெள்ளக்கோவில் கிராமங்களில் ரூ.8 கோடியில் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
* பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.
* சீர்காழியில் புதிய நகராட்சி அலுவலகம் ரூ.5 கோடியில் அமைக்கப்படும்.
* தரங்கம்பாடி-ஆடுதுறை சாலை ரூ.45 கோடியில் இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படும்.
* சீர்காழி, திருமுல்லைவாயல் பகுதிகளில் மேற்கூரை நீட்டிப்பு, தூர்வாரும் பணிக்கு ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை.
* சீர்காழி நகராட்சியில் தேர் வீதிகளில் ரூ.8 கோடி மதிப்பில் வடிகால் வசதி மேற்கொள்ளப்படும்.
- தமிழர்கள், தமிழக மீனவர்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறையில்லை.
- கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசு ஒன்றுமே செய்யவில்லை.
மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காது இன்றும் அரசியல் செய்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு.
* தமிழர்கள், தமிழக மீனவர்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறையில்லை.
* கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டதாக தொடர்ந்து அரசியல் பேசி வருகிறார்கள்.
* கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசு ஒன்றுமே செய்யவில்லை.
* கச்சத்தீவை தாரைவார்ப்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்று என்று அனைவரும் அறிவர்.
* கச்சத்தீவு பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மயிலாடுதுறையின் மருமகனாக வந்திருந்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெருமை.
- அனைத்து மாவட்டத்திற்கும் சீரான, சமமான திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வருகிறோம்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மயிலாடுதுறையில் வீடு வீடாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
இதையடுத்து மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:
* மயிலாடுதுறையின் மருமகனாக வந்திருந்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெருமை.
* நேற்று கொட்டும் மழையிலும் மக்கள் என் மீது அன்பு மழை பொழிந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
* மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* அனைத்து மாவட்டத்திற்கும் சீரான, சமமான திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வருகிறோம்.
* மக்களை நேரில் சந்தித்து தேவைகளை உணர்ந்து செயல்படும் அரசாக 4 ஆண்டு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க. மகளிர் மாநாட்டு பணிகளை ராமதாஸ் ஆய்வு செய்தார்.
- கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதில் தவறில்லை.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் நடைபெறும் பா.ம.க. மகளிர் மாநாட்டு பணிகளை ராமதாஸ் ஆய்வு செய்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்த அணி சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும். கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதில் தவறில்லை என்றார்.
இதனிடையே, அன்புமணி அப்பா பிள்ளையா? அம்மா பிள்ளையா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இரண்டும் என ராமதாஸ் பதில் அளித்தார்.
- சிவனை மனித உருவில் பார்க்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குகிறது.
- இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் ஒன்றாகும். இங்கு நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
மேலும், இங்கு சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து, தோன்றிய அகோர மூர்த்தி மனித உருவில் அருள்பாலிக்கிறார். சிவனை மனித உருவில் பார்க்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலில் விநாயகர், முருகர், நடராஜர், அகோர மூர்த்தி, புதன், சுவேத மகாகாளி மற்றும் சவுபாக்கிய துர்க்கை உள்ளிட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. இங்கு சந்திர, சூரிய மற்றும் அக்னி ஆகிய பெயர்களில் 3 குளங்களும் உள்ளன. மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
முன்னதாக கடந்த 3-ந் தேதி பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் 109 குண்டங்களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. சோமசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 4-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், 5-ந்தேதி 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்று, பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முறையே நேற்று 6 மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர், இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து காலை 5.30 மணிக்கு கோவிலில் உள்ள அனைத்து பரிவார சன்னதி விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்கள் சுவேதராண்யேஸ்வரர் சுவாமி, பிரம்ம வித்யாம்பிகை அம்பாள், புதன் பகவான், அகோர மூர்த்தி உள்ளிட்ட சுவாமி சன்னதி விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சுதா எம்.பி., எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ராஜகுமார், தமிழ் சங்க தலைவர் மார்கோனி இமயவரம்பன், தி.மு.க. பிரமுகர் முத்து. தேவேந்திரன், மாருதி பில்டர்ஸ் அகோரம் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய...' எனும் பக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பாதுகாப்பு பணியில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு இருந்தனர். மேலும், திருவெண்காடு ஊராட்சி சார்பில் 4 வீதிகளிலும் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதேபோல், தற்காலிக கழிவறை வசதியும், சுகாதார துறை சார்பில் மருத்துவ குழுவினர்கள் முகாமும் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் வசதிக்காக கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் விடப்பட்டு இருந்தன.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நகரமே விழாக்கோலம் பூண்டது.
- மலைக்கோவிலில் உள்ள சட்டநாதர் சுவாமிக்கு புனுகு சாந்தி நடைபெற்ற வழிபாடு ஆகியவற்றில் பங்கேற்று தரிசனம் செய்தார்.
- அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் சட்டநாதர்சுவாமி புனுகு விபூதி, உளுந்து வடை, பயிர் பாயசம் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு சுக்கிர வார வழிபாடு பூஜை நடைபெறுவது வழக்கம். நள்ளிரவு வரை தொடரும் இப்பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அதிக அளவு வருகை புரிந்து கண்விழித்து சுக்ரவார வழிபாட்டில் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர். சட்ட சிக்கல், சத்துருக்களின் தொல்லைகள், பில்லி சூனியம், அச்சம் ஆகியவைகள் நீங்கி ஏராளமான நன்மைகள் உடனடியாக வந்து சேரும் என்பதால் சுக்ரவார வழிபாட்டில் பக்தர்கள் தொடர்ந்து பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற சுக்கிர வார வழிபாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயப்பிரதீப் பங்கேற்று தரிசனம் செய்தார். பலிபீடத்திற்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் முத்து சட்டநாதர் சுவாமிக்கு நடைபெற்ற வழிபாடு, மலைக்கோவிலில் உள்ள சட்டநாதர் சுவாமிக்கு புனுகு சாந்தி நடைபெற்ற வழிபாடு ஆகியவற்றில் பங்கேற்று தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் சட்டநாதர்சுவாமி புனுகு விபூதி, உளுந்து வடை, பயிர் பாயசம் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர்.
- சேத்திரபாலபுரம் காந்திநகர் கீழகாலனி பகுதியில் வயல்வெளி பகுதியில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு குழாயில் லேசான வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
- காந்திநகர் பகுதி மக்கள் கும்பகோணம்-மயிலாடுதுறை பிரதான சாலையில் சேத்திரபாலபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயு சேகரிப்பு மையம் மற்றும் எரிவாயு கிணறு அமைந்துள்ளது.
இந்நிலையில், சேத்திரபாலபுரம் காந்திநகர் கீழகாலனி பகுதியில் வயல்வெளி பகுதியில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு குழாயில் லேசான வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்படலாம் என கிராம மக்கள் அச்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் உடனடியாக சரி செய்யாததை கண்டித்து காந்திநகர் பகுதி மக்கள் 30-க்கு மேற்பட்டோர் கும்பகோணம்-மயிலாடுதுறை பிரதான சாலையில் சேத்திரபாலபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே ஓஎன்ஜிசி நிர்வாகத்தினர் அப்பகுதியை ஆய்வு செய்து அவ்வழியாக செல்லும் கேஸ் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.






