என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • புனித நீராடி முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
    • காவிரி கரையில் உள்ள ரத்தினபுரனேஸ்வரி கோயிலில் வழிபாடு செய்து சென்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் கடலில் காவிரி கலக்கும் சங்கமுக தீர்த்தம் என்று அழைக்கப்படும் காவிரி சங்கமத்தில் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி சங்கமத்தில் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இந்த மூன்று அமாவாசைகளில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அதாவது ஆடி மற்றும் தை அமாவாசைகளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.

    மஹாளய அமாவாசையான இன்று பூம்புகார் காவிரி சங்கமத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பூம்புகார் காவிரி சங்கமத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து ஏராளமானோர் வருகின்றனர். காவிரி கரையில் உள்ள ரத்தினபுரனேஸ்வரி கோயிலில் வழிபாடு செய்து சென்றனர்.

    • மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
    • வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மீக அறிவியல் குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர் சிவன் தனது மனைவி மாலதியுடன் சிறப்பு வழிபாடு மற்றும் ஆயுஷ் ஹோம பூஜையில் பங்கேற்றார். தொடர்ந்து மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதின மடத்தில் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்–சாரியார் சுவாமிகளை சந்தித்து குடும்பத்துடன் ஆசி பெற்றார். அவருக்கு ஆதினம் சார்பில் நினைவு பரிசாக திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சிவன், தருமபுரம் ஆதீனம் நாட்டின் தொன்மையான மடமாகும். இது சைவத்துடன் தமிழையும் வளர்த்து வருவது மகிழ்ச்சிக்குரியது. நமது நாடு விண்வெளி துறையில் மட்டுமல்லாது அணுசக்தி துறை, வேளாண் துறை, வேளாண் அறிவியல் துறை ரசாயனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. விரைவில் இந்தியா உலகத்தில் முதன்மையான நாடாக உருமாறும்.

    தற்போது மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. விரைவில் 100 சதவீதம் என்ற இலக்கை எட்டும், மாணவர்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்க வேண்டும். அறிவியலும் ஆன்மீகமும் வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மீக அறிவியல் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

    • பூரணசந்திரன் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தனர்.
    • குற்றவாளிகள் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்த கட்ட ராஜா என்கிற பூரணசந்திரன் (வயது24) மற்றும் கொண்டல் பகுதியை சேர்ந்த ரெட் தினேஷ் என்கிற தினேஷ் (22) ஆகிய இருவரும் தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தனர்.

    தற்போது குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டார். இதனையடுத்து மேற்படி குற்றவாளிகள் இருவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • விண்வெளி துறையில் மட்டுமல்லாது அணுசக்தி துறை, வேளாண்துறை, வேளாண் அறிவியல் துறை, ரசாயன துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது.
    • மாணவர்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்க வேண்டும்.

    மயிலாடுதுறை:

    இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர் சிவன் தனது மனைவி மாலதியுடன் நேற்று மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு வந்தார். அங்கு வந்த அவர், ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

    பின்னர் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விண்வெளி துறையில் மட்டுமல்லாது அணுசக்தி துறை, வேளாண்துறை, வேளாண் அறிவியல் துறை, ரசாயன துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் இந்தியா உலகத்தில் முதன்மையான நாடாக மாறும். தற்போது 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. விரைவில் 100 சதவீதம் என்ற இலக்கை எட்டும்.

    மாணவர்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்க வேண்டும். அறிவியலும், ஆன்மிகமும் வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மிக அறிவியல் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சிவன் தனது குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு மற்றும் ஆயுள் விருத்தி ஹோமம் செய்து வழிபட்டார்.

    • குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின், 2021-2023 -ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு மயிலாடுதுறை மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனையொட்டி மேற்குறிப்பிட்ட மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகளின் குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர், மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை-600009 என்ற முகவரிக்கு அக்டோபர் 7-ம் தேதிக்குள் அனுப்பலாம்.

    மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும்.

    பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்சினைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம்.

    மனுக்கள் ஒரேயொரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருந்தல் வேண்டும்.

    மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    ஆனால் மனுவில் உள்ள பொருள் கீழ்க்கண்டவைகளாக இருந்தல் கூடாது:

    தனிநபர் குறை, நிதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு.

    முதியோர் ஓய்வூதியம், பட்டா வேண்டுதல் மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல்.

    வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும்.

    ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    அவ்வமயம், மனுதாரர்முன்னிலையில், குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம்கேட்டறியப்படும்.

    இது குறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும்.

    07.10.2022 க்குப் பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

    • தெருவில் சுற்றி திரியும் நாய்கள் மாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • வர்த்தக சங்க நிர்வாகிகள் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் குப்பை மேலாண்மை தெருவில் சுற்றி திரியும் நாய்கள் மாடுகளை கட்ப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார்.

    நகராட்சி ஆணையர் ராஜகோபாலன், மேலாளர் காதர் கான், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை, வருவாய் ஆய்வாளர் சார்லஸ் முன்னிலை வகித்தனர். கணக்கர் ராஜ கணேஷ் வரவேற்றார்

    சீர்காழி நகர வர்த்தக சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் வர்த்தக சங்க செயலாளர் துரைராஜ் பொருளாளர் ஹரக்சந்த் நிர்வாகிகள் புக்ராஜ் ராஜ்குமார் சந்துரு வினோத் ஜெர்ரிஅகஸ்டின்தாஸ் முரளி மற்றும் சீர்காழி தாலுக்கா மொபைல் விற்ப்பனையாளர்கள் மற்றும் பழுது நீக்குவோர் சங்க தலைவர் மார்க்ஸ்பிரியன் மற்றும் வர்த்தகசங்க நிர்வாகிகள்கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • தோண்டப்பட்ட பள்ளத்தை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது.
    • சவுடு மண்குவாரிக்கு விளைநிலத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே கீழமருதாந்தநல்லூர் ஊராட்சி பொன்வாச நல்லூர் இச்சலடி கிராமத்தில் சவூடுமண் குவாரியை தடுத்து நிறுத்த கோரியும், தோண்டப்பட்ட பள்ளத்தை மூடக்கோரியும், விளைநிலங்களை பாதுகாத்திட கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    விசிக மயிலாடுதுறை ஒன்றிய பொறுப்பாளர் சாமி சீசர் தலைமையில் நடைபெற்றது.

    கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்மோகன், பாரதிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது உண்ணாவிரத போராட்டத்தில் பாதுகா க்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகு சட்டவிரோதமாக சவூடு மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், சவுடு மண்குவாரிக்கு விளைநிலத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியவர்கள் மீது விசாரணை நடத்தி முறை கேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முன்கூட்டியே இதுபோன்ற முறைகேடுகள் தெரிந்துயிருந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது விசாரணை செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்துவந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் மகேந்திரன், காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி குவாரியை மூடுவதாக உறுதி அளித்தார்.

    இருப்பினும் குவாரி மூடப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து போராட்டக்காரர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

    பின்னர் தோண்டிய பள்ளத்தை மூடிய பிறகு உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் வினோத், தாமோதரன், அறிவு, மற்றும் கிராமத்தில் உள்ள பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், என ஏராளமானவர்கள் கலந்துக்கொன்டனர்.

    • பிரவீணா கடந்த 20 நாட்களாக கணவர் வீட்டு வாசலில் தங்கி உள்ளார்.
    • ஊர் பஞ்சாயத்தார் சமாதானம் பேசியும் பிரவீணாவை வீட்டுக்குள் சேர்க்க மறுப்பு.

    மயிலாடுதுறை :

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பில்லூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகள் பிரவீணா(வயது 28). இவருக்கும், மயிலாடுதுறை மன்னம்பந்தல் தெற்கு வெளியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நடராஜனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

    சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் நடராஜன் வேலை பார்ப்பதால் கணவர் வீட்டில் பிரவீனா வசித்து வந்தார். கணவர் வெளியூரில் இருப்பதால் கணவரின் தம்பி தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பிரவீனா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜிடம் அந்த பகுதி பொதுமக்களுடன் சென்று பிரவீனா ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    எனக்கும், மன்னம்பந்தல் தெற்கு வெளியை சேர்ந்த நடராஜனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது எனது பெற்றோர் 24 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வழங்கினர்.

    இந்த நிலையில் என்னை கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு எனது கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துகின்றனர். கூடுதல் வரதட்சணை கொடுக்காவிட்டால் உனது கணவர் உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டார் என்று கூறுகின்றனர்.

    மேலும் என்னை கணவர் வீட்டில் சேர்க்காமல் வீட்டை பூட்டி விட்டு அனைவரும் பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் கடந்த 20 நாட்களாக கணவர் வீட்டு வாசலில் தான் நான் தங்கி உள்ளேன்.

    ஊர் பஞ்சாயத்தார் சமாதானம் பேசியும் என்னை வீட்டுக்குள் சேர்க்க மறுக்கின்றனர். ஆகவே நான் எனது கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தன்னை கணவர் குடும்பத்தினர் வீட்டில் வசிக்க அனுமதிக்காததால் ஆத்திரம் அடைந்த பிரவீனா நேற்று கடப்பாரையால் கணவர் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று குடியேறினார்.

    கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை வீட்டுக்குள் அனுமதிக்காத நிலையில் கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டுக்குள் புகுந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெண்களுக்கு மாலை அணிவித்து கலெக்டர் தலைமையில் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.
    • விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாரம்பரிய உணவு பண்டங்களை கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

    தரங்கம்பாடி:

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் மயிலாடுதுறையில் சமுதாய வளைகாப்பு, தேசிய ஊட்டச்சத்து மாத விழா, பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லலிதா தனது பெண் குழந்தையுடன் பங்கேற்று 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பை நடத்தி வைத்தார்.

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு, தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா ஆகிய முப்பெரும் விழா மயிலாடுதுறை பல்வராயன்பேட்டையில் உள்ள தனியார்திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தனது பெண் குழந்தையுடன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

    எம்.எல்.ஏககள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், மயிலாடுதுறை வட்டாரத்தில் இருந்து 100 கர்ப்பிணி பெண்களுக்கும், சீர்காழியில் இருந்து 25, குத்தாலம் 50, செம்பனார்கோவில் 50 மற்றும் கொள்ளிடம் வட்டாரத்திலிருந்து 25 என மொத்தம் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பெண்களுக்கு மாலை அணிவித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. முன்னதாக நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து விழாவில், காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாரம்பரிய உணவுப் பண்டங்களை கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாச்சியர்கள் யுரேகா, அர்ச்சனா, மாவட்ட திட்ட அலுவலர் தமிமுன்நிஷா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருத்திகா, ஒன்றிய குழு தலைவர்கள் செம்பனார்கோயில் நந்தினி ஸ்ரீதர், மயிலாடுதுறை காமாட்சிமூர்த்தி, குத்தாலம் மகேந்திரன், மற்றும் ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2012-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது.
    • திருப்பணிக்கு நிதி பற்றாக்குறையால் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    குத்தாலம்:

    குத்தாலம் அருகே பழைமை வாய்ந்த வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் திருப்பணியை துவக்கக் கோரி இந்து மகாசபை அமைப்பின் ஆலய பாதுகாப்புப் பிரிவு சார்பில் கோயில் முன்பு மண்டியிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்கள் வீரட்டத்தலங்கள் என்று போற்றப்படுகிறது. தமிழகத்தில் எட்டு இடங்களில் அட்ட வீரட்டேஸ்வரர் கோயில்கள் அமைந்துள்ளன.

    அவற்றில் ஒன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராமத்தில் அமைந்துள்ளது. சமயக் குரவர்களால் பாடப்பட்ட இக்கோயில் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

    இக்கோயிலில் கடந்த 2012-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் பணிகளை தொடராமல் கிடப்பில் போடப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் திருப்பணி மீண்டும் தொடங்கப்பட்டு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    இதையடுத்து, இக்கோயிலில் மீண்டும் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கியது.

    மேலும் திருப்பணிக்கு நிதிப் பற்றாக்குறையால் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    மேலும் கோயில் நிர்வாகம் முறையாக செயல்படாததால், உபயதாரர்கள் நிதி அளிக்க முன்வந்தும், நிதியை பெற முடியாமல் திருப்பணிகள் பாதியிலேயே நிற்கின்றது.

    இந்நிலையில், கோயில் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி இந்து மகா சபா அமைப்பின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம.நிரஞ்சன் தலைமையில் கோயிலின் முன்பு அவ்வமைப்பினர் மண்டியிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பணிக்கான செலவை முழுமையாக அரசே ஏற்று பணியை முடிக்க வேண்டும் என்றும், இதற்கு அரசு செவி சாய்க்காவிட்டால், அடுத்த கட்டமாக பிச்சை எடுத்து நிதி திரட்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவ்வமை ப்பினர் தெரிவித்துள்ளனர்.

    • தொடர்ந்து நடைபெற்ற பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அண்ணாவின் 114வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே பேச்சுப்போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் கணிதத் துறை மாணவி சுபாஷினி போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் மூன்றாம் பரிசு பெற்றார்.

    மேலும் பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக 14 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

    இதில் மூன்றாம் ஆண்டு தமிழ்துறை மாணவன் சூர்யா இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கல்லூரி முதல்வர்முனைவர் விஜயலட்சுமி கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி பேரவை தலைவர் குமார், தமிழ்துறை தலைவர் சசிகுமார், துறை தலைவர்கள் நாராயணசாமி, சாந்தி, கார்த்திகா, உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன், நூலகர் சுப்பிரமணியன், நுண்களை மன்ற போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வாழ்த்து பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

    மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறைதுணை ஆணையரும், பள்ளி செயலாளருமான முத்து ராமன் தலைமை வகித்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி

    திருவெண்காடுசுவேதாரணேஸ்வரர்அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறைதுணை ஆணையரும், பள்ளி செயலாளருமான முத்து ராமன் தலைமை வகித்தார்.

    சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பஞ்சு.குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் வரவேற்றார். இதில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், தொழிற்சங்க பொறுப்பாளர் பன்னீர்செல்வம், முன்னாள் கவுன்சிலர் சி கே பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மூத்த ஆசிரியர் மதிவாணன் நன்றி கூறினார்.

    ×